Skip to main content

Posts

Showing posts with the label தேனி செய்தி

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 851 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.49 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தேனி, ஜூன்.17- தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 16.6.2025 அன்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம். புதுமைப் பெண், தமிழ் புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...

தேனியில் தனிஷ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பழைய தங்கத்திற்கு 2 காரட் கூடுதல் மதிப்பு பெறும் மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம் : ஜூன் 30 வரை நடக்கிறது

தேனி, ஜூன்.16- தேனியில் உள்ள தனிஷ்க் தங்க நகை ஷோரூம் கிளையின் நிர்வாக இயக்குனர்கள் ரமண மூர்த்தி, கதிரேசன் மற்றும் மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்ற சலுகையை [Gold Exchange offer] அறிவித்துள்ளது.  இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது 2 காரட் வரை கூடுதல் மதிப்பு" (up to 2 Karat extra valur) பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இச் சலுகை ஜூன் 30.2025 வரை மட்டுமே வழங்கப்படும் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெறும் வாய்ப்பளிக்கிறது: தங்க நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 1 காரட் கூடுதலாக பெறுங்கள். [1KT extra on old gold வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 2 காரட் கூடுதலாக பெறுங்கள். (2KT extra on old gold] உதாரணத்திற்கு, நீங்கள் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட...

தேனி அருகே, கலாம் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா: தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., திறந்து வைத்தார்

தேனி, ஜூன்.15- கோவை மாவட்டத்தில் கலாம் அய்யா அவர்களின் பெயரில் 6 கிளைகளை துவங்கி தனது கடினமான உழைப்பால் உண்மை நேர்மை என்ற தாரக மந்திரத்தின் மூலம்  வெற்றிகரமாக நடத்தி வரும் 25 வயதான இளம் தொழில் அதிபர்  நித்தீஸ் என்பவர் தற்போது தேனி மாவட்டம், போடி ரோடு, கோடாங்கிபட்டியில் கலாம் பர்னிச்சர் ஷோரூம்  7-வது கிளையினை தொடங்கி உள்ளார். இந்த பர்னிச்சர் கிளையின் திறப்பு விழா 15.6.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் நித்தீஸ் வரவேற்றார். விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெடடி பர்னிச்சர் ஷோரூமை திறந்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து பர்னிச்சர் ஷோரூம் வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பர்னிச்சர் விற்பனையையும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தொழில் அதிபர் கோவை JRD என்ற ஜே. ராஜேந்திரன், ரீபோஸ் மேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலமுரளி, முன்னாள் எம்.எல்.ஏ., போடி லட்சுமணன், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருக்கண்ணன், ...

மாநில அளவிலான சைக்கிள் போட்டியில்; நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை

தேனி, ஜூன்.10- சென்னையில் மாநில அளவிலான தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி 8.6.2025 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். 48 கிலோமீட்டர் வரையிலான தூரம் நிர்ணயிக்கப்பட்டு கோவை பெடல்ஸ், சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோரேசர்ஸ், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரான்சைசர்ஸ், திருச்சி ராக்போர்ட் மதுரை மாஸ் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளில் இருந்து 80 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாமாண்டு கணினி பொறியியல் துறையின் மாணவர் G.K.பிரமோத் ரான்சைசர்ஸ் அணியில் பங்கு பெற்று 19 நிமிடங்கள் 16 நொடியில் 48 கிலோமீட்டர் இலக்கினை அடைந்து முதல் பரிசாக ரூ.3,00,000/- பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S. G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன். பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம், கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர...

தேனி அருகே வீரபாண்டியில் ஜானகி முத்தையா A/c திருமண மஹால் திறப்பு விழா

  தேனி, ஜூன்.5- தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் வாசல் எதிரே முழுவதும் ஏ.சி., வசதி செய்யப்பட்ட ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா 5.6.2025 அன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் திருமண மஹாலின் உரிமையாளர் தொழிலதிபர் சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.  இந்த விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், மாவட்ட செயலாளர் திருவரங்க பெருமாள், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன், அ.தி.மு.க தேனி நகர செயலாளர் வக்கீல்  கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தொழிலதிபர் பிரகாஷ் புளுமெட்டல் வசந்த், ரியல் எஸ்டேட் வயல்பட்டி மணிகண்டன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் காசிமாயன், வீரபாண்டி பேரூர் தி.மு.க செயலாளர் செல்வராஜ், தி.மு.க பிரமுகர் வக்கீல் ராஜசேகர் உள்பட தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண மஹாலின் சிறப்பு அம்சங...

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் அமைப்பு சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு மஞ்சப்பை, மரக்கன்று வழங்கப்பட்டது

தேனி, ஜூன்.5  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் தன்னார்வ குழு சார்பில் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகை தந்த அனைத்து மகளிருக்கும் மஞ்சப்பை, மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர் குழு சார்பாக இந்திராணி, வனிதா, சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விருது பெற்ற சுருளிப்பட்டி அன்பு ராஜா பேசுகையில், பூமி உங்களுக்காக செய்த உதவிக்கு நீங்கள் செய்யும் கைமாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இருப்பது, நாளைய சந்ததி வலம் பெற சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசித்து விடுவோம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்திடுவோம், பொது போக்குவரத்தை ஊக்கி வைப்போம், நாம் பயன்படுத்திய பொருட்களில் இருந்து கழிவுகளை பிரித்து எடுத்து பணப்பலன் பெற்றிடுவோம் என்று விழிப்புண்வை ஏற்படுத்தி பேசினார். இதனைஅடுத்து சுற்றுச்சூழல் தினத்தை நினைவு கூறும் வகையில் ம...

தேனியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம்

தேனி, ஜூன்.4- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் 4.6.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி நகர தலைவர் சிவராம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய லோகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் இராமராஜ் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள்  பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் 1: இந்து எழுச்சி முன்னணி ஆண்டு திட்டங்களின்படி, எதிர்வரும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் வகையில் திட்டமிடுவதும், செயல்படுவதும் என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் 2: இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்களில் விளக்கேற்றம் இல்லாத நிலை காணப்பட்டால், அங்கு விளக்கேற்றும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் 3: பொறுப்பாளர்கள் வசிக்கும் பகுதிகளில் மக்களின் குறைகளை முன்வைத்து, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவ...

தேனி அருகே 2 சமுதாயங்களுக்கு சொந்தமான கோவிலை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, மே.28- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் கட்சியினர் மற்றும் 2 சமுதாய பொதுமக்கள் 27.5.2025 அன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாயுடு சமுதாய பொதுமக்கள், மற்றும் வாணிய செட்டியார் சமுதாய பொதுமக்கள் இணைந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய காளியம்மன் கோவிலை, 2 சமுதாய மக்களும் இணைந்து கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் பொதுமக்களிடம் வரி வசூல் செய்து திருவிழா நடத்தியதுடன், கோவிலையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.  இந்த கோவிலுக்கு சொந்தமாக அன்னஞ்சி விலக்கு பகுதியிலும், ஊஞ்சாம்பட்டியிலும் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் பல ஆண்டுகளாக இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் திடீரென தேனிக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் இந்த கோவில் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த கோவிலுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். மேலும் கிராம மக்களின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு ...

தேனியில் நடிகர் ரியாஸ் பிறந்தநாள் விழா: முதியோர், ஆதரவற்றோருக்கு உணவு அளித்து கொண்டாட்டம்

தேனி, மே.27- தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியை சேர்ந்த நடிகர் ரியாஸ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 26-ம் தேதி தனது பிறந்த நாளை முதியோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் நாளாக கொண்டாடி வருகிறார். இதேபோன்று இந்த ஆணடு 26.5.2025 அன்று நடிகர் ரியாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டி பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோவில், கண்ணீஸ்வரமுடையார் கோவில் பகுதியில் சுற்றி திரியும் முதியவர் மற்றும் ஆதரவற்றோர்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கினார். அதுபோல மே 26 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ரியாஸ்க்கு திரைத்துறையினர், நகர முக்கிய பிரமுகர்கள், பத்திரிக்கை நிருபர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ............................... பாலகுரு, சிறப்பு நிருபர் 

தேனி மாவட்டத்தில் முதல் நாளில் நடந்த ஜமாபந்தியில் 599 மனுக்கள் வந்தது

தேனி , மே.22- தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 தாலுகாக்களில் 22.5.2025 முதல் 30.5.2025 வரை (24.5.2025, 25.5.2025 மற்றும் 26.5.2025 ஆகிய நாட்கள் நீங்கலாக) 1434 ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளான 22.5.2025 அன்று பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கெங்குவார்பட்டி பிட் 1, கெங்குவார்பட்டி பிட் 2, தேவதானப்பட்டி பிட் 1, தேவதானப்பட்டி பிட் 2, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது .இந்த ஜமாபந்தி வருவாய் தீர்வாயத்தில் 172 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதேபோன்று உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பூலானந்தபுரம். கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய கிராமங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 56 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி பிட் 1, ஆண்டிபட்டி பிட் 2 ஆகிய கிராமங்களுக்கு ப...