Skip to main content

Posts

Showing posts with the label தேனி செய்தி

தேனியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தேனி, அக்.12- தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் தேனியில் 12.10.2025 அன்று நடைபெற்றது.   ஊர்வலத்திற்கு சிலமலையை சேர்ந்த சைவ சமய திருப்பணி செம்மல் பாண்டி நாட்டு கோச்செங்கணர் ஆன்மீக வள்ளலார் ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், உதவி தலைவர் சொக்கர்ராஜா, வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  ஊர்வலம் தேனி மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி விழா நடைபெற்ற வசந்த மஹால் நிறைவடைந்தது.  இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ விஸ்வகர்ம சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த விதம், செய்கின்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார்.  இந்த கூட்டத்தில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர்...

தேனி மாவட்டத்தில் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்றார்

தேனி, அக்.11- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 11.10.2025 அன்று நடைபெற்றது. இதில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், ஜல்லிப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில், கிராம சபை கூட்டத்தின் நோக்கம் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை கண்டறிந்து பொதுமக்களின் முன்னிலையில் ஆலோசனைகள் செய்து அதனை செயல்படுத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் கிராமப்புறங்களை விரைவாக முன்னேற்றம் அடைய செய்யவும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தவும் அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கிராம சபை கூட்டத்தின் மூலம், கிராமப்புறத்திற்கு தேவையான குடிநீர், மயான வசதி உள்ளிட்ட பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கைக...

தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, அக்.10 - தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ...

தீபாவளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, அக்.10- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்திக் மற்றும் முனியாண்டி, கணேசன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் , இந்திய நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகள் என்பது குடும்பங்கள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி களிப்பதற்காகவும், குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சமயங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பதன் மூலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்துவிட்டு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு குடும்ப தலைவிகளை சித்ரவதை செய்வது,, குழந்தைகளை சித்ரவதை செய்வது என்று பல்வேறு இன்னல்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர். மேலும் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துகளி...

போடி அருகே, மணியம்பட்டி கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி தேனி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

தேனி, செப்.30- தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை அருகே உள்ள மணியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் தேனி மாவட்ட கலெக்டர்  ரஞ்ஜீத் சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், போடி தாலுகா, சிலமலை அருகே மணியம்பட்டி உள்ளது. இந்த கிராமத்தில்  சுமார் 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்திற்கு சிலமலையிலிருந்து செல்லக்கூடிய முக்கிய சாலையானது 36 அடி கொண்டதாகும். ஆனால்  சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்பொழுது 12 அடி சாலையாக மாறிவிட்டது இதனால் இக்கிராமத்தில் இருந்து பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்வதற்காக வருகின்ற பள்ளி வாகனம் மற்றும் அவசர காலத்தில் மருத்துவ மனைக்கு செல்ல ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதுபோல தனி நபர் ஒருவர் சுயநலத்திற்காக மின் கம்பத்தை நடு சாலையில் அமைக்க மின்சாரத்துறை  அலுவலர்கள் ஏற்பாட்டில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது மேலும்...

தேனி மாவட்டத்தில், கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்.

தேனி, செப்.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங். 20.9.2025 அன்று குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம். 1035-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம். செட்டிநாடு சேலம், பரமக்குடி திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.  மேலும் நவீன யுக ஆடவ...

தேனி மாவட்டத்தில் சுருளி சாரல் விழா 27.9.2025 மற்றும் 28.9.2025 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

     தேனி, செப்.25-                                               தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் விழா-2025” 27.9.2025 மற்றும் 28.9.2025  ஆகிய இரண்டு  நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மற்றும் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நடைபெற உள்ளது.  தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் பெருமை மற்றும் அதன் பழமையினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தினை பிற மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுருளி சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.  இந்த விழாவில் செய்தித்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கா...

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா: தேனி எம்.பி., TTS வழங்கினார்.

தேனி, செப்.21- தேனி மாவட்ட உலக அமைதி குழு சார்பில் உலக அமைதி தின விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கி கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  உலக அமைதி குழு பொதுச்செயலாளர் ஜெயபால், தேனி மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக அமைதி குழு இயக்குனர் பால்பாண்டி வரவேற்றார்.  விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். விழாவில் தொழிலதிபர் சந்திரகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உதவி திட்ட அலுவலர் மோகன், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சோல்ஜர் அகாடமி இயக்குனர் சின்னச்சாமி, வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணி கார்த்த...

தேனியில் பொறியாளர் தின விழா

தேனி, செப்.18- தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் பொறியாளர் மெல்வின் தலைமை தாங்கினார்.  சங்க பொருளாளர் பொறியாளர் ரவி பாரத் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பொறியாளர் கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டு பேசினார்.  விழாவில் சங்க முன்னாள் தலைவர்கள் பொறியாளர் தின  வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  விழாவின் போது சங்க கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எம்.எல்.ஏ., சரவணக்குமாரிடம் கொடுக்கப்பட்டது.   1.கட்டுமான பொறியாளர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சில் உருவாக்க வேண்டும். 2. கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். 3.கட்டுமான வரைபட அனுமதி கட்டணம் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக கொடுக்கப்பட்டது.  முடிவில் சங்க செயலாளர் பொறியாளர்.சையது பரூக் அப்துல்லா நன்றி கூறினார். ................................ நாகராஜ், த...

தேனி எல். எஸ். மில் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாம்: 181 பேருக்கு செயற்கை கை, கால் மற்றும் சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

  தேனி, செப்.12- சென்னையில் உள்ள பிரீடம் டிரஸ்ட், ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவனம் மற்றும் தேனி எல். எஸ். மில் சார்பில் குழந்தைகள் உட்பட  181 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உபகரணங்கள் வழங்கும் முகாம்  வீரபாண்டியில் உள்ள தேனி எல். எஸ். மில் கலையரங்கில் 12.9.2025 அன்று நடைபெற்றது.  முகாமிற்கு எல்.எஸ். மில் சேர்மன் எஸ். மணிவண்ணன்  தலைமை தாங்கினார்.  எல்.எஸ்.மில்  மனித வளத்துறை  துணை பொது  மேலாளர் நிவாஸ் வரவேற்றார்.  ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவன நிர்வாகிகள் லோக பிரம்மன், ராஜீவ் பிரசாத் மற்றும் மைதிலி  பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரீடம்  டிரஸ்ட்  உறுப்பினர் சங்கரன் அன்னா சுவாமி  மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படுகின்ற திட்டங்கள்  மற்றும் கருவிகள் குறித்து  விளக்கினார். தொழில் அதிபர்  கெளமாரி சுதாகரன் வாழ்த்தி பேசினார். முகாமில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 181  மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், செயற்கை கை,  கால்கள், சிறு குழந...