Skip to main content

Posts

Showing posts with the label கலெக்டர்

தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் இரா.வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.17- தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (17.7.2026) ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் அவர்கள் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சி சுக்காங்கால்பட்டி கிராமத்தில் முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் இப்பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல ரூ. 1 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், குடிநீர் குழாயின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து வேப்பம்பட்டி ஊராட்சியில், ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டி சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு முடிவுற்றுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை அடுத்து அப்பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தின் தரத்தன்மை குறித்து ஆய்வு செய்தார். ...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள அறிவுசார் மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் ஆய்வு

தேனி, ஜூலை.15- தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையத்தை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து, அதே பகுதியில் செயல்பட்டு வரும் தோழி விடுதியையும் பார்வையிட்டு, அங்கு தங்கியுள்ள அரசு பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்ததுடன், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளான சாலை வசதி, கூடுதல் தெருவிளக்குகள் அமைத்தல், பேருந்து நிறுத்தம் ஏற்படுத்துதல் மற்றும் கூடுதல் பேருந்து வசதி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததுடன், பேரூராட்சி நிர்வாகம் மூலம் கூடுதலாக தெருவிளக்குகள் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மரு. இரா.வைத்திநாதன் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர்  மிதுன்சக்கரவர்த்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். ............................

தேனி பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடம்: கலெக்டர் வைத்திநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

தேனி, ஜூலை.14- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மாநில  கல்லூரி வளாகத்தில் இன்று (14.7.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம். பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இதன்பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மையம், மருந்தக பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் சிகிச்சை வழங்...

தேனியில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஓட்டம் : மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தேனி, ஜூன்.26- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.6.2026) உலக போதைப்பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப்பொருள் இல்லாத உருவாக்க வேண்டும் நோக்கில், Start Run, Stop Drug Anti Drug Run 2026 விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் சமூகத்தை என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் அவர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி மேற்கொண்டு, தொடர்ந்து Start Run, Stop Drug - Anti Drug Run 2026' விழிப்புணர்வு ஓட்டத்தை துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2000-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.  இத்தொடர் ஓட்டம் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் பார்த்து போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அறியும் வண்ணம் பதாகைகள் ஏந்தி நிறைவாக விழிப்புணர்வு தொடர் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை பெரியகுளம் சட்டம...

தேனியில் முன்னாள் படை வீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம்: நிகழ்ச்சியில் 29 பயனாளிகளுக்கு ரூ.4.45 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார்

. தேனி, ஜூன்.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக கூட்டரங்கில் இன்று (25.6.2026). முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தலைமையேற்று தொழில் முனைவோர்களுக்கான கருத்தரங்கினை துவக்கி வைத்து பேசுகையில், முன்னாள் படைவீரர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுவதன் நோக்கம் முன்னாள் படைவீரர்கள் ஒவ்வொருவரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான ஆலோசனைகளை பெறுவதையே ஆகும். அந்த வகையில் இதுபோன்ற கருத்தரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப வாரிசுதாரர்கள் கலந்துகொண்டு சுயதொழில் மேற்கொள்வதற்கு தேவையான பயிற்சிகள் மற்றம் வங்கிக்கடன் விவரங்கள் குறித்து தெரிந்துகொண்டு, அதற்கு ஏற்றார்போல் பயிற்சிபெற்று வங்கிக் கடனுதவி மூலம் சுயதொழில் உருவாக்கி கொள்ள வேண்டும். இதன்மூலம் தாங்கள் பயன்பெறுவது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கிட முடியும். மேலும், மகளிர்கள் சுய உதவிக்குழுக்கள் அமைத்து தொழில் முனைவோராக பயன்பெறுவதற்கு மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வழங்கப்படும்...

தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் 3-வது நாளாக நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்களிடமிருந்து 1182 கோரிக்கை மனுக்கள்

தேனி, ஜூன்.18- தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான 1435-ஆம் வசதி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 16.06.2026 அன்று முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, மூன்றாவது நாளாக இன்றையதினம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட கபுதுப்பட்டி, உத்தமபுரம், கம்பம். மேலக்கூடலூர் (தெற்கு) மேலக்கூடலூர் (வடக்கு). கீழக்கூடலூர் (மேற்கு), கீழக்கூடலூர் (கிழக்கு) ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 210 மனுக்கள் பெறப்பட்டது. இதில் உத்தமபாளையம் வட்டத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 10 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) சுந்தர்லால், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இதேபோன்று பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவ...

தேனி மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களில் 2-வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் 948 கோரிக்கை மனுக்கள்

  தேனி, ஜூன்.17- தேனி மாவட்டத்தில் உள்ள  உத்தமபாளையம், பெரியகுளம், தேனி ஆண்டிபட்டி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 5 தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட  கிராமங்களுக்கான 1435-ஆம் பலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகா அலுவலகங்களில் நேற்று முதல் (16.6.2026) நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டம். உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய் தீர்வாய அலுவலர் /மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் 2-வது நாளாக இன்று (17.6.2026) நடைபெற்றது. இவற்றில் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட தேவாரம் தேவாரம் மலை. தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம். பொட்டிபுரம், சங்கராபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 156 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் உத்தமபாளையம் வட்டத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான இ-பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ், மாவட்ட அலுவலக மேலாளர் (பொது) சுந்தர்லால், வட்ட...

தேனி மாவட்டத்தில், தாலுகா அலுவலகங்களில் 16-ந் தேதி நடந்த ஜமாபந்தியில் 788 கோரிக்கை மனுக்கள்

தேனி, ஜூன்.16- தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம், தேனி, ஆண்டிப்பட்டி, போடி, உத்தமபாளையம் ஆகிய 5 தாலுகா அலுவலகங்களில் 1435-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி 16.6.2026 அன்று தொடங்கியது. இந்த ஐமாபந்தியின் நோக்கமானது வருவாய் கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள். புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.  இவற்றில் உத்தமபாளையம் தாலுகா பகுதியில் உள்ள சின்னமனூர், பூலானந்தபுரம், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 166 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான இ.பட்டாக்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குநர் (தோட்டக்கலை) நிர்மலா, உதவி இயக்குநர் (நில அளவை) அப்பாஸ். மாவட்ட ...

தேனி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி, ஜூன்.4- கோடை விடுமுறை முடிந்து இன்று (04.06.2026) பள்ளிகள் திறக்கப்பட்டுள்தை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம் மற்றும் மாணவர்களுக்கு போதுமான அளவில் உணவு வழங்கப்படுகிறதா என்பன குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், உணவு தயாரிக்கும் சமையலறை, குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு போன்றவற்றை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி கல்வியில் சிறந்...

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் (94877 71077) சேவை தொடக்கம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தேனி, மே.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.05.2026) பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் (9487771077) சேவையை மாவட்ட ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,  பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை எளிதாகவும், விரைவாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வராமல், தங்களது கைப்பேசி மூலமாகவே குறைகளை பதிவு செய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் (9487771077) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கழிவுநீர் வடிகால், சுகாதாரம், வருவாய் தொடர்பான பிரச்சினைகள், பொது விநியோக திட்டம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோக்கள் வடிவில் அனுப்பலாம். பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி ...

தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் : மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு

தேனி, மே.14- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் இன்று (14.5.2026) நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மீறுசமுத்திரம் கண்மாயின் கரையை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவர், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலக கட்டிடம், பாதுகாவலர் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, சாய்வுதளம், அமரும் மேடை, உணவுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் மேலும், ஆகாய தாமரை அகற்றுதல், மரங்கள் நடுதல், பறவைகள் தீவு அமைத்தல், கண்...