Skip to main content

Posts

Showing posts with the label வாழ்த்து

தேனி மாவட்ட மக்களின் கல்வி கனவான கேந்திர வித்யாலயா பள்ளிக்கு அனுமதி : தேனி மக்கள் நலச் சங்க செயலாளர் வி.ஆர்.ராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

தேனி, ஜூலை.7- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற தேனி மாவட்ட DISHA கமிட்டி ஆய்வு கூட்டத்தில், தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கல்வி கோரிக்கையான கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்குவது குறித்து தேனி மாவட்ட DISHA கமிட்டி உறுப்பினர், தேனி மக்கள் நலச் சங்க செயலாளர், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன் கேள்வி எழுப்பி வலியுறுத்தி பேசினார். அப்போது அவரது கேள்விக்கு பதிலளித்து பேசிய மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கான அனுமதி கிடைத்து விட்டடதாகவும். அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். தேனி மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோரிக்கை நிறைவேற முயற்சிகள் மேற்கொண்ட மதிப்பிற்குரிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கும், மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த ந...

இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளி சார்பில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு விழா

  தேனி, ஜூன்.23- தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் லான்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் ராணுவ வீரர். இவர் இந்தியாவின் மிக உயரிய தேசிய கெளரவமிக்க விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்றதை பாராட்டும் விதமாக வாழ்த்து பாராட்டு விழா கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அந்தோணிராஜ், பள்ளியின் தாளாளர் அருட்சோதரர் அருள்சாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விருது பெற்றதை ராணுவ வீரரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர். விழாவில் புனித அலோசியஸ் மழலையர் ஆங்கிலப்பள்ளி முதல்வர் அருட் சகோதரர் ஜஸ்டின் திரவியம், அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் சேசு, சார்லஸ் மற்றும் புலவர் சேவியர் பீட்டர், ராஜ்குமார், மது, ஜஸ்டின், ஜஸ்டின் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ............................ நாகராஜ், தலைமை நிருபர் 

"கீர்த்தி சக்ரா" விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்களின் இல்லத்திற்கு தேனி மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் நேரில் சென்று பாராட்டினார்

  தேனி, ஜூன்.17- தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்திய அரசின் கீர்த்தி சக்ரா" விருது பெற்றதைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் இன்று (17.6.2026), இராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டினார். இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் அவர்கள் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரவிருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்திய குடியரசுத் தலைவர் அவர்கள் கடந்த 8.6.2026...

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் உதவி மேலாளர் A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தேனி, ஜூன்.3- தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் 32 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி உதவி மேலாளராக பணி நிறைவு பெற்ற A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேனியில் உள்ள வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 2.6.2026 அன்று நடைபெற்றது.  விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி.,  பார்த்திபன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன், தொழிலதிபர் ராஜசேகரன், வக்கீல் செல்வகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற A.P.P. ராஜா அழகணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினர். விழாவில் தொழிலதிபர் சுந்தரவடிவேல், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இ.காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் செல்வகுமார் உள்பட  கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர...

தேனி நகரில் சுகாதாரத்திற்கு ஏங்கும் பொதுமக்கள் : பெரியகுளம் எம்.எல்.ஏ-விடம் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு

தேனி, மே.19- தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து சந்தன மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ-விடம், கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக நான் சேவை செய்து வருகிறேன். தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் சுதந்திரப் பணிகளை மேற்கொள்ள 6 வார்டுகளுக்கு 1 டிவிசன் என்ற முறையில் 5 டிவிசன்கள் உள்ளன. 1 டிவிசனுக்கு  22 முதல் 35 சுகாதார பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 பேர்கள் மட்டுமே தூய்மை பணிகளை செய்கின்றனர். இதனால் தூய்மை பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது. அதுபோல சாக்கடைகளில் சூப்பை கழிவுகள் தேங்கி கழிவு நீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திக்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர் மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு...