Skip to main content

Posts

Showing posts with the label முகாம்

தேனியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்: மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

தேனி, டிச.3- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 212.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று. கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் படிவங்களை திரும்ப பெற்று, இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தற்பொழுது, வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் 11:12.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங...

தேனி மாவட்ட கோர்ட்டில் ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

தேனி, நவ.21- தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் இந்திய மருத்துவ ஹோமியோபதி துறை சார்பில் ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் புகைப்பட கண்காட்சி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 20.11.2025 அன்று நடைபெற்றது.  முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தலைமை தாங்கினார். தேனி அமர்வு நீதிபதி அனுராதா வரவேற்றார். முகாமின் போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அன்னகாமு, ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ்செல்வி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகளை எடுத்துக் கூறினர்.  முகாமில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் உள்பட கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர்  

தேனி அருகே நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார்.

தேனி, நவ.8- தேனி மாவட்டம். தேனி வட்டாரம். கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 8.11.2025 அன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினை 2.8.2025 அன்று தொடங்கி வைத்தார். அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வட்டாரத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 24 மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி தேனி மாவட்டத்தில் இதுவரை 13 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. இம்முகாமில் இரத்த பரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. எலும்பு மருத்துவம் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம். குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம். இயன்முறை மருத்து...

தேனியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 429 பேர்களுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

தேனி, நவ.8- தேனி மாவட்டம். கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரியில் 8.11.2025 அன்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங்429 பேர்களுக்கு தனியார் துறைகளில் பணிபுரிவதற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில்,  பிறரை சார்ந்து இல்லாமல் சுயமரியாதையோடு வாழ்வதற்கும். படித்த வேலைக்கு செல்வது அவசியமாகும். தமிழ்நாடு அரசின் சார்பில் இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கி தரும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலைத்தேடும் இளைஞர்கள் இதுபோன்று நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொண்டு தங்கள் திறமைகளை மேம்படுத்தி கொள்ள முடியும். தற்பொழுது வேலைக்கு செல்வதில் போட்டிகள் அதிகம் உள்ளது. கல்வியை முற...