Skip to main content

Posts

Showing posts from April, 2026

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்; ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தேனி, ஏப்.29- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 12-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துவதற்கான ஏலத்தை சதீஷ் என்பவர் ரூ.2 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து எந்திர ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு 29.4.2026 அன்று வீரபாண்டி கோவில் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் சக்தி, ராட்டினம் ஏலதாரர் சதீஷ், முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து உணவு கூடம் அமைக்க ஏலம் எடுத்த இடத்திலும் பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை ஏலதாரர் தரப்பபை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ரூ.2.44 கோடிக்கு போனது

தேனி, ஏப்.28- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான ஏலம் 4-வது முறையாக கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் சபர்மதி தலைமை தாங்கினார். ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபிதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.  4-வது முறையாக நடந்த இந்த மறுஏலத்தில் ராட்டினம் நடத்துவதற்கு ஏலத்தொகை ...

போடி நகரில் இறுதி கட்ட பிரசாரத்தை முடித்த திமுக வேட்பாளர் ஓபிஎஸ்

தேனி, ஏப்.21- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சமுதாய தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்புக்கான் இறுதி கட்ட பிரசாரம் 21.4.2026 அன்று மாலையுடன் நிறைவு பெற்றது.  இந்த இறுதி கட்ட பிரசாரத்தினை திமுக வேட்பாளர் ஓபிஎஸ் அவர்கள் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள பார்க் ஸ்டாப், வ.உ.சி சிலை,  தேவர் சிலை, கட்டபொம்மன் சிலை, அணைப்பிள்ளையார் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், முன்னாள் எம்பி ரவிந்திரநாத், போடிநாயக்கனூர் நகர் கழக செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் நகர்மன்ற ...

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை பெளர்ணமி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடந்தது

  தேனி, ஏப்.17- தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 1.5.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு. தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூ மத்யூ, சப் கலெக்டர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலையில் 17.4.2026 அன்று நடைபெற்றது. மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1.5.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு எதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம். குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி. பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் ம...

அரசியலில் அனைத்து உயரத்திருக்கும் சென்றவர் ஓபிஎஸ்; போடி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் பேச்சு

தேனி, ஏப்.16- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து 16.4.2026 அன்று தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்  அப்போது பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கியதும், தொண்டர்கள் போட்டோவை  (சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம்) காட்டுங்கள் என கேட்டனர் அதற்கு பதில் அளித்து பேச தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்  எந்த போட்டோவையும் நான் காட்ட மாட்டேன், உலகம் முழுக்க அந்த போட்டோ எல்லோர் கையிலும் உள்ளது. அது ஒரு மட்டமான போட்டோ, அந்த போட்டோவை காட்டியதால் நான் அதிகமாக திட்டு தான் வாங்கி உள்ளேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்  போன முறை நாம் தான் ஓபிஎஸ்-யிடம் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றம். இந்த முறை அதற்கு சேர்...

எம்ஜிஆர், அம்மா ஆசியோடு தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்: ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் இபிஎஸ்., பேச்சு

தேனி, ஏப்.14- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து 14.4.2026 அன்று பிரசாரம் செய்தனர் பிரசார கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி.  மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநில தொகுதிகளையும் மறுசீரமைப்புக்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்து பேசுகிறார்.   பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லி விட்டனர். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது எங்களை பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டி பார்க்கிறார் இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.   இதனை...

போடி தொகுதியில்; மகளிர் சங்கங்கள், சர்ச் நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்த தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ்.,

தேனி, ஏப்.13- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் போடி சிசம் ஸ்கூல் அருகில் உள்ள சர்ச்சில் சம்மந்தப்பட்ட சர்ச் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டார். அதன் பின் 2026 தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தன்னை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தங்களது பேராதரவு தருமாறு கேட்டு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து போடி பகுதியில் உள்ள (ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில்) பிரமலை கள்ளர் சங்கங்கள் தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் (ஸ்ரீ உச்ச காளியம்மன் திருக்கோவில்) கிழக்கு மறவர் மகாஜன  சங்கங்கள் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை ...

போடி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தரும் திமுக பூத் நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை: பூத் நிர்வாகிகளை திறம்பட செயல்படுத்தும் நகர, ஒன்றிய செயலாளர்களுக்கு 5 பவுனில் தங்கபதக்கம்; திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., ஆகியோர் அறிவிப்பு

தேனி, ஏப்.10- போடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்கள் மற்றும் போடி நகரத்தில் உள்ள BLA., BLA-2, BDA நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 10.4.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன் உள்பட ஒன்றிய செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்த...

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமுக்கு குக்கர் சின்னத்திற்கு ஆதரவு கோரி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம்

தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்  பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9.4.2026 அன்று பிரசாரம் மேற்கொண்டார். தேனி பங்களா மேடு பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய டிடிவி தினகரன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அமமுக வேட்பாளராக இதே தொகுதியில் கடந்த 2016-ல் அம்மா அவர்களால் நிறத்தப்பட்டு ஏற்கனவே எம்.எல்.ஏ-வாகவும், 2 முறை சீட்டுக்கு போட்டியிட்ட டாக்டர் கதிர்காமு போட்டியிடுகிறார். பெரியகுளம் தொகுதியில் தற்போது திமுக எம்.எல்.ஏ., தான் உள்ளார் ஆனால் இந்த தொகுதியில் குறிப்பாக தேனியில் சுகாதார சீர்கேடு, அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு நீங்கள் அமமுக வேட்பாளரை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை...