Skip to main content

Posts

Showing posts from June, 2026

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் உதவி மேலாளர் A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

தேனி, ஜூன்.3- தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் 32 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி உதவி மேலாளராக பணி நிறைவு பெற்ற A.P.P. ராஜா அழகணன் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தேனியில் உள்ள வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 2.6.2026 அன்று நடைபெற்றது.  விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், முன்னாள் எம்.பி.,  பார்த்திபன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன், தொழிலதிபர் ராஜசேகரன், வக்கீல் செல்வகுமார் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு பணி ஓய்வு பெற்ற A.P.P. ராஜா அழகணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினர். விழாவில் தொழிலதிபர் சுந்தரவடிவேல், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இ.காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் ஜம்பு சுதாகர், வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளர் செல்வகுமார் உள்பட  கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சமூக ஆர...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

  தேனி, ஜூன்.1- தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை திரும்பப் பெற்று, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 1.6.2036 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிகளை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சின்னச்சாமி மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அவர்களிடம்  விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.  ...

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் வளாக பகுதியில் கழிப்பறை கட்டும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.1- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின் படி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், இந்து எழுச்சி முன்னணி தொழிலாளர் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொருளாளர் நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மொக்கை, ராஜீகண்ணு மற்றும் பூசாரி பேரவை நகர் அமைப்பாளர்  கோவிந்தராஜ் சாமி ஆகியோர்  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி அல்லிநகரம் அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவில் தேனி மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகும் என்றும், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவிலின் ஈசானி மூலையில் (வடகிழக்கு திசை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்....