தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமுதாய மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள்: மாநில தலைவர் திண்டுக்கல் நடராஜன் வழங்கினார்
தேனி, ஜூன்.22- தேனியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமைச் சங்கம் மற்றும் ஸ்ரீ காமாட்சி அம்மன் பொது நல சேவை மையம் சார்பில் கல்வி பரிசளிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி அருகே உள்ள பொம்மையகவுண்டன்பட்டி டி.சி.ஏ மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சேதுபதி, மாநில பொருளாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட செயலாளர் முருகேசன் வரவேற்றார். விழாவில் மாநில தலைவர், முன்னாள் சேர்மன் திண்டுக்கல் நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசி, கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசளிப்பு மற்றும் பெண்கள் ஆண்கள் என சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவின்போது எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் படித்து முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற 12 மாணவ மாணவிகளுக்கு ரொக்க பரிசுத்தொகை வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணைத்தலைவ...