Skip to main content

Posts

Showing posts with the label கூட்டம்

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பொதுமக்களிடம் இருந்து 525 கோரிக்கை மனுக்கள்

தேனி, ஜூலை.13- தேனி மாவட்ட  கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13.7.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 525 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 525 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11,445/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ரூ.9000/- மதிப்பிலான கம்மோடு வீல் சேர், ரூ.594/- மதிப்பிலான எல்போ ஊன்றுகோல், ரூ.15,750/- மதிப்பிலான சக்கர நாற்காலி என மொத்தம் ரூ.36,789/- மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவி...

தேனி மாவட்ட மக்களின் கல்வி கனவான கேந்திர வித்யாலயா பள்ளிக்கு அனுமதி : தேனி மக்கள் நலச் சங்க செயலாளர் வி.ஆர்.ராஜன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

தேனி, ஜூலை.7- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற தேனி மாவட்ட DISHA கமிட்டி ஆய்வு கூட்டத்தில், தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கல்வி கோரிக்கையான கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்குவது குறித்து தேனி மாவட்ட DISHA கமிட்டி உறுப்பினர், தேனி மக்கள் நலச் சங்க செயலாளர், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர்.ராஜன் கேள்வி எழுப்பி வலியுறுத்தி பேசினார். அப்போது அவரது கேள்விக்கு பதிலளித்து பேசிய மாவட்ட கலெக்டர் வைத்திநாதன், தேனி மாவட்டத்தில் கேந்திர வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கான அனுமதி கிடைத்து விட்டடதாகவும். அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி பள்ளியில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார். தேனி மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோரிக்கை நிறைவேற முயற்சிகள் மேற்கொண்ட மதிப்பிற்குரிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களுக்கும், மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் மனமார்ந்த ந...

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி, ஜூலை.6- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (6.7.2026) குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெற உள்ளதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந் திருவிழாவின்போது, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்துத் துறை வாரியாக எந்தெந்த வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலந்த ஆலோசனை மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருவிழா காலத்தில் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு செல்லும் வழியினை தெளிவாக வழிகாட்டிப் பலகை (Arrow mark) மூலம் காண்பித்தில், கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்தல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்திட வேண்டும். குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்த...

விநாயகர் சதுர்த்தி விழாவை தேனி மாவட்டம் முழுவதும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடத்த வேண்டும் : இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு கூட்டத்தில் முடிவு

தேனி, ஜூலை.6- தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் வார வழிபாடு கூட்டம் 5.7.2026 அன்று நடைபெற்றது. இந்த வார வழிபாட்டிற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன: தீர்மானம் – 1: வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாகவும், பக்தி உணர்வுடனும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2: தமிழக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள், தமிழக ஆளுநரின் அறிக்கையை தவறாக புரிந்து கொண்டு அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதை தவிர்த்து, தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது. மேலும், தேவையற்ற மோதல் போக்கையும் எதிர்ம...

இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் பள்ளி சார்பில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு விழா

  தேனி, ஜூன்.23- தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள இராயப்பன்பட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் லான்ஸ் நாயக் மீனாட்சிசுந்தரம் ராணுவ வீரர். இவர் இந்தியாவின் மிக உயரிய தேசிய கெளரவமிக்க விருதான கீர்த்தி சக்ரா விருது பெற்றதை பாராட்டும் விதமாக வாழ்த்து பாராட்டு விழா கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அந்தோணிராஜ், பள்ளியின் தாளாளர் அருட்சோதரர் அருள்சாமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு விருது பெற்றதை ராணுவ வீரரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர். விழாவில் புனித அலோசியஸ் மழலையர் ஆங்கிலப்பள்ளி முதல்வர் அருட் சகோதரர் ஜஸ்டின் திரவியம், அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் சேசு, சார்லஸ் மற்றும் புலவர் சேவியர் பீட்டர், ராஜ்குமார், மது, ஜஸ்டின், ஜஸ்டின் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ............................ நாகராஜ், தலைமை நிருபர் 

தேனியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் வழங்கினார்.

தேனி, ஜூன்.19- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன், தலைமையில் இன்று (19.6.2026) நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் ஜுன் மாதம் வரை ஆண்டு மழையளவான 30420 மி.மீ-க்கு தற்பொழுது வரை 256.39 மிமீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் வரை ஆண்டு இயல்பான மழையளவில் 47.81 மி.மீ குறைவாகும். ஜுன் 2026 மாதத்திற்கான இயல்பு மழையளவான 2760 மி.மீக்கு தற்பொழுது வரை 54.95 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது ஜூன் மாத இயல்பான மழை அளவை காட்டிலும் 27.35 மி.மீ அதிகமாகும். தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு நெல் 587 ஹெக்டர் பரப்பிலும், சிறுதான்யம் 121 ஹெக்டர் பரப்பிலும், பயறு வகைகள் 373 ஹெக்டர் பரப்பிலும், தோட்டக்கலை பயிர்களான பழப்பயிர்கள் 7366 ஹெக்டர் பரப்பிலும், காய்கறி பயிர்கள் 146 ஹெக்டர் பரப்பிலும், மலைத்தோட்ட பயிர்கள் 11044 ஹெக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1738 ஹெக்டர் பரப்பிலும், மலர்ப்பயிர்கள் 525 ஹெக்டர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் நெல் விதை 100 மெ.டன்னும், சிறுதானியங்கள் 6 மெடன்னும், பயறு வகை விதைக...

இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஜூன் 28-ந் தேதி ஒரு நாள் பண்பு பயிற்சி முகாம்: வார வழிபாட்டு நிகழ்வில் முடிவு

தேனி, ஜூன்.7- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் வார வழிபாட்டு நிகழ்ச்சி 7.6.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி தேனி நகர தலைவர் சிவராம் தலைமை தாங்கினார். தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டியன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நிகழ்ச்சியை வழிநடத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்  வார வழிபாட்டை மேற்கொண்டதுடன், சமூக மற்றும் தேசிய நலன் சார்ந்த பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் – 1 வருகின்ற 28.6.2026 அன்று இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஒருநாள் பண்பு பயிற்சி முகாம் நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2 தேனி அல்லிநகரம் நகராட்சி 33 வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தேனி நகராட்சி நிர்வாகம் உடனடி...

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணி வார வழிபாட்டு நிகழ்வில் வலியுறுத்தல்

தேனி, மே.25- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு நிகழ்வு 24.5.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி நகர துணை செயலாளர் இராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சக்திவேல் வழிகாட்டினார்.   நிகழ்ச்சியில் சிறப்பு. அழைப்பாளராக தமிழக ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் மானனீய சுவாமி சுடலையானந்தா கலந்து கொண்டு ஆசி வழங்கினார். இந்த வார வழிபாட்டு நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, சமூக ஒற்றுமை, இந்து சமுதாய முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் குறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நிகழ்ச்சியின் போது சமூக நலன், மக்களின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் – 1 தமிழக அரசு பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, விவசா...

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை பெளர்ணமி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடந்தது

  தேனி, ஏப்.17- தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 1.5.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு. தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூ மத்யூ, சப் கலெக்டர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலையில் 17.4.2026 அன்று நடைபெற்றது. மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1.5.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு எதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம். குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி. பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் ம...

அரசியலில் அனைத்து உயரத்திருக்கும் சென்றவர் ஓபிஎஸ்; போடி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் பேச்சு

தேனி, ஏப்.16- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து 16.4.2026 அன்று தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்  அப்போது பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கியதும், தொண்டர்கள் போட்டோவை  (சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம்) காட்டுங்கள் என கேட்டனர் அதற்கு பதில் அளித்து பேச தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்  எந்த போட்டோவையும் நான் காட்ட மாட்டேன், உலகம் முழுக்க அந்த போட்டோ எல்லோர் கையிலும் உள்ளது. அது ஒரு மட்டமான போட்டோ, அந்த போட்டோவை காட்டியதால் நான் அதிகமாக திட்டு தான் வாங்கி உள்ளேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்  போன முறை நாம் தான் ஓபிஎஸ்-யிடம் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றம். இந்த முறை அதற்கு சேர்...

தேனியில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தேனி, ஏப்.1- தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் டாக்டர்.கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  தேனியில் உள்ள அம்பி வெங்கடசாமி திருமண மண்டபத்தில் 1.4.2026 அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை தாங்கினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன், தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அதிமுக துணை செயலாளர் சுந்தரபாண்டியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் செல்லமுத்து ஜெயக்குமார் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அவர்களை அறிமுகம் செய்து வைத்து...

தேனி பா.ஜ.க அலுவலகத்தில்: அமமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேனி, மார்ச்.31- தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் டாக்டர்.கதிர்காமு, அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் வி.டி. நாராயணசாமி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் லோகிராஜன், கம்பம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.கே ஜக்கையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி மாவட்ட பாஜக  அலுவலகத்தில் 31.3.2026 அன்று நடைபெற்றது. இந்த அறிமுக கூட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன் மற்றும் பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், பி.சி.பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது ஒவ்வொரு தொகுதி வாரியாக பாஜக நிர்வாகிகளுக்கு அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள...