Skip to main content

Posts

Showing posts with the label விளையாட்டு

மாநில அளவிலான சைக்கிள் போட்டியில்; நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை

தேனி, ஜூன்.10- சென்னையில் மாநில அளவிலான தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி 8.6.2025 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். 48 கிலோமீட்டர் வரையிலான தூரம் நிர்ணயிக்கப்பட்டு கோவை பெடல்ஸ், சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோரேசர்ஸ், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரான்சைசர்ஸ், திருச்சி ராக்போர்ட் மதுரை மாஸ் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளில் இருந்து 80 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாமாண்டு கணினி பொறியியல் துறையின் மாணவர் G.K.பிரமோத் ரான்சைசர்ஸ் அணியில் பங்கு பெற்று 19 நிமிடங்கள் 16 நொடியில் 48 கிலோமீட்டர் இலக்கினை அடைந்து முதல் பரிசாக ரூ.3,00,000/- பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S. G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன். பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம், கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர...

கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான: தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மதுரை மாணவி தேர்வு

  தேனி, மே.2- தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்ளிட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணி தேசிய அளவில் லக்னோ கான்பூரில் விளையாட உள்ளனர். இவற்றில் ஒருங்கிணைந்த சென்னை ரீஜன் அணிக்கு தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கூடைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கு தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மதுரை சேர்ந்த மாணவி தன்யஸ்ரீ குறிஞ்சிகுமரன் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவி தன்யஸ்ரீயை பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர், பெற்றோர்கள் உள்பட அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

குச்சனூர் அருகே மாநில அளவிலான கபடி போட்டி : 52 அணிகள் பங்கேற்றன

  தேனி, ஏப்.24 தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கு.துரைச்சாமிபுரம் பகுதியில் உள்ள  அருள்மிகு அங்காளஈஸ்வரி அம்மன், கொத்தாள முத்தையா, ராமபுலி அய்யனார் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு DSP ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 24-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி MMS மைதானத்தில் 22.4.2025 மற்றும் 23.4.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.  இந்த போட்டியில் சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 52 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதி கபடி போட்டியினை சின்னமனூர் ஓம் சக்தி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாகி,  தொழிலதிபர் M.C.போஸ் வீரர்களுக்கு கை குலுக்கி துவக்கி வைத்தார். மேலும் கபடி போட்டி நடுவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இறுதி போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.40 ஆயிரம் ரொக்க பணமும், கோப்பையும் வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பையும், 4-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் ரொக்க பணமும் கோப்பைய...

தேனியில், மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள்: மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார்

  தேனி, பிப்.6 - தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான 4-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை மாவட்ட  ஆர்.வி.ஷஜீவளா, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் 6.2.2025 அன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர்  பேசுகையில், குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் முதன்முறையாக தேனி மாவட்டத்தில் நடைபெறுகிறது. 2024-2025-கல்வி ஆண்டிற்கான 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான 4-வது மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள் 8.22025 முதல் 11.2.2025 வரை கால்பந்து வளைகோல் பந்து, கபடி, கோ-கோ, கையுந்து பந்து, கூடைப்பந்து, எறிபந்து, கைப்பந்து, பூப்பந்து, மேசைப்பந்து இறகுப்பந்த மற்றும் டென்னிஸ் முதலிய 12 வகையான குழு விளையாட்டுப் போட்டிகள் தேனி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் 6.2.2025 முதல் 8.2.2025 வரை மாணவியர்களுக்கும்  9.2.2025 முதல் 11.2.2025 வரை மாணவர்களுக்கும் நடைபெற உள்ளன. தமிழ...

தேனி அருகே 1,000 பேர் பங்கேற்ற சிலம்பம் போட்டி: ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

தேனி, ஜன.12- தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் எஸ்.ஜி.கே சிலம்ப கலைக்கூடம் சார்பில் உலக சாதனை முயற்சிக்காக சிலம்பம் போட்டி 12.1.2025 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிலம்ப பயிற்சி மையத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பங்கேற்றனர்.  இதில் 3 வயது முதல் 21 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள், இளைஞர்கள் இந்த சிலம்பம் சாதனை போட்டியில் பங்கு பெற்றனர் கண்களை கருப்பு துணிகளால் கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்ற தொடங்கினர். ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும்  வகையில் நடைபெற்ற இந்த போட்டி காலை 10 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இதன் பின்னர் இந்த நிகழ்வு ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், உலக சாதனை போட்டியை நடத்திய எஸ்.ஜி.கே சிலம்ப கலைக்கூடம் நிறுவன சண்முகி ரஞ்சித் மற்றும் அவரின்...

தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில், தமிழக வனத்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது

கோவை, அக்.23- தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வனத்துறை அணிகள்  பங்கேற்ற ,கைப்பந்து போட்டியில், தமிழக வனத்துறை அணி சாம்பியன் பட்டம் வென்றது சாதனை படைத்தனர். சத்தீஸ்கா் மாநிலம், ராய்ப்பூரில் அகில இந்திய வனத்துறையினர்கள் சார்பில் பல்வேறு மாநில வனத்துறை  அணி வீரர்கள் பங்கேற்ற கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது, இப்போட்டிகள் கடந்த 16-ம் தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிர, உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், அரியானா போன்ற மாநிலங்களை சோ்ந்த 22 கைப்பந்து அணிகள் பங்கேற்றன. இதில், நாமக்கல் மாவட்ட வன அலுவலா் கலாநிதி தலைமையில் தமிழக வனத் துறையை சோ்ந்த விளையாட்டு  வீரா்கள் பங்கேற்றனா். கூடலூா் மரப்பாலம் கோட்டம், தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை சோ்ந்த மகா கிருஷ்ணன் என்பவரும் இதில் பங்கேற்று விளையாடினாா். பல போட்டிகளில் தொடர்ந்து வென்ற தமிழக வனத்துறை அணியினர் , இறுதி ஆட்டத்தில் கா்நாடகா மாநில வனத்துறை அணி வீரர்களுடன், தமிழக வனத்துறை அணி வீரர்கள் விளையாடினர்.  இவற்றில் தமிழக வனத்...

தேனியில் முதலமைச்சர் கோப்பை-2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடங்கி வைத்தார்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  முதலமைச்சர்  கோப்பை - 2024 மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர்  ஆர்.வி.ஷஜீவனா, தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன்  (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் 10.9.2024 அன்று துவக்கி வைத்தார். முதலமைச்சரின் மாவட்ட அளிவலான விளையாட்டுப் போட்டிகள் 10.9.2024 முதல் 24.9.2024 வரை நடைபெறவுள்ளது. இவ்விளையாட்டு போட்டிகளில் சிலம்பம், கைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபடி, கோ-கோ, கூடைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், ஓட்டப்பந்தயம், செஸ், கேரம், கிரிக்கெட் போன்ற பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், பொதுப் பிரிவினர்கள், அரசு ஊழியர்கள் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.  மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்: பள்ளி  பிரிவுகளுக்கு : 1. தடகளம், வலைகோல்பந்து, சிலம்பம்,  நீச்சல், மேசைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு 10.9.2024  அன்றும், மாணவிகளுக்கு 11.9.2024 அன்றும் 2. கூடைப்பந்...

தேசிய அளவிலான ஜோடி பயர் கோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் பட்டம் வென்ற கோவை மாணவி

இந்திய அளவில் சதுரங்க விளையாட்டை போன்ற பயர் கோ விளையாட்டுகள் மேலை நாடுகளில் மிக  பிரபலம் தற்போது சமூக வலைதளம் மூலம் இளம் தலைமுறையினர் மத்தியில் பயர் கோ விளையாட்டுகள் பிரபலமாகி வருகின்றது, இதில் பீகாரை சேர்ந்த பயர் கோ விளையாட்டு கழகத்தினர் தேசிய அளவில் பயர் கோ விளையாட்டு போட்டிகளை மாணவ, மாணவிகள் மத்தியில் நடத்தி வருகின்றனர்.  இந்த ஆண்டு 2-வது தேசிய சாம்பியன் ஷிப் போட்டிகளை செப் 2-ம் தேதி முதல்  4-ம் தேதி வரை 3 நாட்களாக பீகார் மாநிலம்  போஜ்பூர் ஆராவில்  மூன்று பிரிவுகளாக, சீனியர், ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் என குழுக்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது.  இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். பல கட்ட போட்டிகளில் வெற்றி கண்ட தமிழக குழுவினர் சீனியர் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி -பீகார் அணியுடன் பயர் கோ விளையாடினர்.  இதில் தமிழ்நாடு 46 புள்ளிகளும் மற்றும் பீகார் 43 புள்ளிகளும் பெற்றனர். சீனியர் பிரிவில் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் த...

கன்னியப்பபிள்ளைபட்டியில் ஆண்டிபட்டி ஒன்றிய அளவிலான குறுவட்ட விளையாட்டு போட்டி.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் கன்னியப்பபிள்ளைபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக நடத்தப்பட்டது.  தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பா.இந்திராணி, மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா ,மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன் (தனியார் பள்ளிகள்) ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.  தேனி மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) ஜான்சன், தி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேஷ் மற்றும் முன்னாள் மாணவர் ராமராஜ் ஆகியோர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தனர்.   போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்கினர். ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த 27 பள்ளிகளின் இருந்து மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். . போட்டி நிகழ்வில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சசிதுரை, சிறப்பு நிருபர் 

கோயமுத்தூரில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மேற்கு குறு மையம் தடகள போட்டிகள்

கோவை, தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் பாரதியார் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற  மேற்கு குறுமையம் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, இப்போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும்,  மேற்கு குறுமை விளையாட்டுப் போட்டிகளின் செயலாளர்  க.ரஹீமா பேகம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.  இதனை தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் தேசியக் கொடியை ஏற்றியும் . பாரதிய வித்யா பவன் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை  மகேஸ்வரி  மேற்கு மண்டல குறுமையம்  கொடியை ஏற்றி வைத்தார்கள். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்  டி. ஆனந்த் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்தார்.             விழாவில் 11 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி  சி .நிவேதா ஒலிம்பிக் உறுதி மொழியை வாசிக்க பள்ளி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.  இதனைத்தொடர்ந்து தடகள போட்டிகள் துவங்கி நடைபெற்றது.  இந்த போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள், 17 வய...

தேனி நாடார் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஏற்பாட்டில் குறுவட்ட போட்டி

தேனி மாவட்டத்தில் 2024-2025 ம் கல்வி ஆண்டின் தேனி குறுவட்ட போட்டியை தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஏற்று நடத்தி வருகிறது.  இந்த போட்டிக்கான நிகழ்வு தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலை பள்ளியில் 30.8.2024 அன்று காலையில் துவங்கியது.    இந்நிகழ்விற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கி ஒலிம்பிக் கொடியினை ஏற்றிவைத்து சிறப்பித்தார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடார் உறவின்முறை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயலாளர் நவமணி வரவேற்றார். நிகழ்வில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் R.சிவப்பிரசாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். நிகழ்வின் போது தேனி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் கலந்து கொண்டு  குறு வட்டக் கொடியை ஏற்றினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் உபதலைவர் கண...

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற யுனிக் யோகாலயம் குழுவினர்

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டி நடைபெற்றது, இப்போட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு யோகாசன பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  ஸ்ட்டேட் லெவல் ஓபன் யோகாசன போட்டியில் ஜூனியர், சூப்பர் ஜூனியர் என 2 பிரிவுகளிலும் 400-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்ற யோகசன போட்டியில் ஒட்டு மொத்த  சம்பியன்ஷிப் பட்டத்தை யுனிக் யோகாலயம் மாணவர்கள்,மாணவிகள் பெற்று சாதனை படைத்தனர். இதேபோன்று 2024 நேஷனல் யோகா அசோசியேஷன் ஆஃப் இந்தியா, யோகா பெடரேஷன் ஆஃப் ஆசியா ஒருங்கிணைந்து நடத்திய யோகாசனா விழா 2 தினங்களாக நடந்தது. இதில் எளிய முறையில் தியானம், மூச்சு பயிற்சி யோகாசனம் செய்யும் வழி கற்பித்தனர். இதனை அடுத்து நடந்த பல கட்ட போட்டிகளில் சென்னை, திருச்சி, மதுரை, விருதுநகர், சேலம்,கோவை என பல மாவட்ட யோகாசன பயிற்சி மைய குழந்தைகள் போட்டிகளில் பங்கேற்று பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர். இதில் பல்வேறு போட்டிகளில்  யுனிக் யோகாலயம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகள் சான்றிதழ்கள் பெற்றனர்.  அதுபோல ஓவர் ஆல் சாம்பியன் பட்டத்தையும் யுனிக் யோகாலயம் மாணவர்கள், மாணவிகள்...

தேனியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மற்றும் ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு: அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்

தேனி மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே மாவட்ட கலெக்டர் அவர்களின் நிதியிலிருந்து ரூ.31.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹாக்கி மைதானம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானங்களை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மாவட்ட கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலையில் 11.7.2024 அன்று திறந்து வைத்தார். அப்போது தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக்குமார் (பெரியகுளம்), மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் உடனிருந்து சிறப்பித்தனர். உடல் நலத்தையும், மன நலத்தையும், பேணி காப்பதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாகும். குழந்தைகள் தொடர்ச்சியாக விளையாடுவதன் மூலம்  புத்துணர்வும் தன்னம்பிக்கையும், பெற முடியும், மேலும் சிறு வயதிலே தலைமைத்துவத்தையும் வளர்த்துக் கொள்ள முடியும். இதற்காகவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆண்டுதோறும் விளையாட்டுவிழா நடத்தப்பட்டு, வெற்றிபெறும் மாணவர்களுக்கு, பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்படுகிறது. மேலும் அவர்களை ஊக்குவிப்பதன் மூலம் மாநில தேசிய அளவில்  பங்குபெ...

தேனியில் எல்.எஸ்.மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி

தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் 2-ம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 3 நாட்களாக தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் மாவட்ட அளவில் இருந்து 20 அணிகள் கலந்து கொண்டன. நாக்-அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெற்ற இப்போட்டியில் லீக் சுற்றுக்கு பெரியகுளம் சில்வர் ஜுபிலி அணி, பாப் அணி, தேனி எல்.எஸ்.மில்ஸ் அணி, கம்பம் பென்னிகுவிக் அணி தகுதி பெற்றது. இதில் லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில்  பெரியகுளம் பாப் அணி, தேனி எல்.எஸ்.மில்ஸ் அணியை 95:90  என்ற புள்ளி கணக்கில் வென்று முதலிடத்தை பிடித்தது. அதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தேனி எல்.எஸ் மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக தலைவர் சிதம்பரசூரியவேலு, துணைத்தலைவர் டாக்டர் செல்வராஜ், தமிழ்நாடு கூடைப்பந்தாட்ட கழக பயிற்சியாளர் கமிட்டி மற்றும் தேர்வுக்குழு தலைவர் சுப்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எல்.எஸ்.மில்ஸ் கூடைப்பந்தாட்ட கழக உபதலைவர் ராமராஜ் வரவேற்றார்.  விழாவில் தேன...

தேனியில் மாவட்ட அணிகளுக்கு இடையேயான தடகள போட்டி: தேனி USA அணி முதல் இடத்தை பிடித்தது

தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் பல்வேறு மாவட்ட அழைப்பு அணிகளுக்கு இடையேயான தடகள போட்டி தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 29.5.2024 அன்று  நடைபெற்றது. இந்த போட்டிகள் 12 வயது, 14 வயது, 17 வயது, 19 வயது ஆகிய பிரிவினர்களிடையே நடத்தப்பட்டது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம், தட்டு எறிதல் போன்ற போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் தேனி, கன்னியாகுமரி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து வீரர்-வீராங்கனைகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சேம்பியன் பட்டத்தை தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 267 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், பரமக்குடி அணி 168 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. இதனைத்தொடர்ந்து விளையாட்டு போட்டிகளில் பெற்ற அணிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி யு.எஸ்.ஏ., ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் வக்கீல் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சேரலாதன், ஒலிம்பிக் பிசியோ நந்தா, பயிற்சியாளர் பரமேஸ், அகாடமி சட்ட ஆலோசகர்...