தேனி, மே.2-
தமிழ்நாடு பாண்டிச்சேரி உள்ளிட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் அணி தேசிய அளவில் லக்னோ கான்பூரில் விளையாட உள்ளனர்.
இவற்றில் ஒருங்கிணைந்த சென்னை ரீஜன் அணிக்கு தேசிய அளவில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் கூடைப்பந்தாட்ட போட்டியில் விளையாடுவதற்கு தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட மதுரை சேர்ந்த மாணவி தன்யஸ்ரீ குறிஞ்சிகுமரன் தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவி தன்யஸ்ரீயை பள்ளி முதல்வர், உடற்கல்வி ஆசிரியர், பயிற்சியாளர், பெற்றோர்கள் உள்பட அனைவரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Comments