போடி சட்டமன்ற தொகுதியில் திமுக தேர்தல் அலுவலக பணிமனை திறப்பு : வேட்பாளர் ஓ.பி.எஸ்., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
தேனி, ஏப்.6- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர் போடி தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகிறார். இந்நிலையில் திமுக தேர்தல் அலுவலக பணிமனைகள் போடி மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி மனைகள் திறப்பு விழா 6.4.2026 அன்று நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் போடி லட்சுமணன், ஆர்.டி. கணேசன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள ஆரிய வைசிய சோழிய செட்டியார் சங்கம் நடுமண்டபம், ஜே.கே பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம், திருமலாபுரம் 24 மனை தெலுங்கு செட்டியார் காமாட்சி அம்மன் கோவில், திருமலாபுரம் நாடார் உறவினர் ச...