தேனியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 35-வது ஷோரூம் திறப்பு விழா : திரைப்பட நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்
தேனி, மார்ச்.16-
உலகளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 35-வது தேனி புதிய ஷோரூம் திறப்பு விழா 16.3.2026 அன்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
இந்த ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர்), சுதிர் அகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர்), அமீர் பாபு (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்), நௌசாத் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), நந்த லால் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தேனி கிளை துணை தலைவர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம். வைரம் மற்றும் வெள்ளி, கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர், செங்கல்பட்டு. கடலூர் ஒசூர், கள்ளக்குறிச்சி தேனி, ஆகிய நகரங்களில் 35 கிளைகளை கொண்டுள்ளது.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணி கலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான மைன் பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட எரா மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை மதிப்புமிக்க கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான பிரீசியா நகைகள் கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான 'எத்தினிக் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான டிவைன் குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஷோரூமின் திறப்பு விழா சலுகையாக 2026 மார்ச் 26 வரை ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் போதும் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படுகிறது.
உலக நாடுகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர். வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் HUD சான்று பெற்ற தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகை களையும் மட்டுமே விற்பனை செய்கிறது. அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை. நிகர எடை, கற்களின் எடை, சேதாரம் கற்களுக்கான விலை, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. இவை தவிர மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு. மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
..............................
நாகராஜ், தலைமை நிருபர்





Comments