Skip to main content

Posts

Showing posts with the label திட்டம்

திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்டம்: தேனி, இடுக்கி எம்.பி.,-க்கள் மற்றும் போராட்ட குழு தலைவர் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம்

தேனி, ஜன.25- திண்டுக்கல் லோயர்கேம்ப் இடையே அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்க்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில் பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா கூட்டம் குமுளி வர்த்தக சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல் குமுளி அகல இரயில் பாதை திட்ட போராட்டக்குழு துணைத்தலைவர்கள் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு, செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்தி ராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன்,துடிவீரன், பாலையா, ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரி முட்டம், மாவட்ட சங்க தலைவர் ச...

தேனி மாவட்டத்தில் "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தின் கீழ் பொதுமக்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பெற்றுக்கொண்டு, தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

தேனி, ஜன.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  இன்று (9.1.2026) திருவள்ளூர் மாவட்டத்தில்  "உங்க கனவ சொல்லுங்க" எனும் புதிய திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து,    தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.  மேலும், இத்திட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களான தன்னார்வலர்களுக்கு வழங்கினார். திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.  மேலும...

தேனி நகர மக்களின் கனவு நினைவானது; மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படகு சவாரி திட்டத்திற்கான பூஜை:

தேனி, டிச.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் படகுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பல ஆண்டுகளாக வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 26.12.2025 அன்று மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளுக்கான பூஜையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வ...