Skip to main content

Posts

Showing posts with the label கல்வி

தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, அக்.10 - தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா: தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பேச்சாளர் பர்வீன் சுல்தானா பங்கேற்பு

தேனி, ஆக.28- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா 28.8.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன் தலைமை தாங்கினார்.  உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், கல்லூரி செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் Dr.C.மதளைசுந்தரம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொறியியல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுதே தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் குறிக்கோளுடன் சிறந்த ஒழுக்கம், கடின உழைப்புடன் தொடர் முயற்சி, பிற மொழியினை கற்றுக்கொள்ளுதல், மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி ஒன்றே நோக்கம் என்று பொறியியல் மாணவர்கள் செயல்பட வேண்டுமென்றும், கிராமப்புற மாணவர்களுக்கு ...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில்: எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம்

தேனி, ஆக.5- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரியின் இணைச்செயலாளர் T.சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையின் பேராசிரியர் டாக்டர்.T.வெனிஸ்குமார் வரவேற்றார்.  கல்லூரியின் முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம் கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை. வழங்கினார். இந்த கருத்தரங்கத்தில் ஓசூர் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடெக்ட் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் டாக்டர்.T.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும், இத்தொழில்நுட்பம் தொடர்பான மென்பொருள் அப்ளிகேசன், எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்டையாக கொண்ட இன்டஸ்டிரியல் ஆட்டோமேசன் ஆகியவற்றை பற்றி விளக்கினார்....

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா

  தேனி, ஜூலை.8- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கனரா வங்கியின் 120-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு தேனி கனரா வங்கி மற்றும் கல்லூரியின் பசுமை சூழல் செல் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் உபதலைவர் A.S.ஜீவகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர  டாக்டர்.C.மதளைசுந்தரம் வரவேற்றார். விழாவில் தேனி மாவட்ட கனரா வங்கியின் துனை பொதுமேலாளர் இந்திரயா, உதவி பொது மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு 200 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். மேலும் உலகளவில் மாறி வரும் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்க மரங்கள் உதவுவதை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் சிவகுண்டலம், வில்வம், இழுப்பை, நாகலிங்கம், மருதம், சரக்கொன்றை போன்ற பழைமையான மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜ...

மாநில அளவிலான சைக்கிள் போட்டியில்; நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை

தேனி, ஜூன்.10- சென்னையில் மாநில அளவிலான தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி 8.6.2025 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். 48 கிலோமீட்டர் வரையிலான தூரம் நிர்ணயிக்கப்பட்டு கோவை பெடல்ஸ், சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோரேசர்ஸ், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரான்சைசர்ஸ், திருச்சி ராக்போர்ட் மதுரை மாஸ் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளில் இருந்து 80 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாமாண்டு கணினி பொறியியல் துறையின் மாணவர் G.K.பிரமோத் ரான்சைசர்ஸ் அணியில் பங்கு பெற்று 19 நிமிடங்கள் 16 நொடியில் 48 கிலோமீட்டர் இலக்கினை அடைந்து முதல் பரிசாக ரூ.3,00,000/- பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S. G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன். பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம், கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பணி நியமன ஆணை

தேனி, மே.5- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவிகள் கத்தார் மேக்னிபுரோ டெ டெக்னாலஜி (Magnipro Technology services) பன்னாட்டு நிறுவனம் ஆன்லைன் வாயிலாக நடத்திய டெக்னிக்கல் தேர்வு சுற்று மற்றும் HR தேர்வில் கலந்து கொண்டனர்.  இந்த தேர்வில் கணினி அறிவியல் பொறியியல் துறையின் இறுதியாண்டு மாணவி T.மமிதா செக்யூரிட்டி ஆபரேசன் சென்டர் அனாலிஸ்ட் (Security operation Center Analyst) பணிக்கு ஆண்டுக்கு ரூ.28,00,000/- (இருபத்து எட்டு இலட்சம்) ஊதியத்துடன் தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் இந்த மாணவி கத்தார் மேக்னிபுரோ டெக்னாலஜி நிறுவனம் 45 நாட்கள் வழங்கிய பயிற்சியில் (Internship) பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட  இந்த மாணவிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம். கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். கல்லூரியின் முதல்வர் டாக...

தேனியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.சி பள்ளி திறப்பு விழா: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார்

தேனி, மே.1- தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடபுதுப்பட்டியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு 30.4.2025 (அட்சயதிரிதியை) அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி பள்ளியை திறந்து வைத்தார்.  மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் செண்டலங்கார செண்பகர மன்னார் ராமானுஜ சுவாமிகள், தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, தேனி அரசு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துசித்ரா, எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவிற்கு வந்த அனைவரையும் பள்ளி தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வெட்டை திறந்து வைத்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார். விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை இயக்குனர் ஹனுமந்த்ராவ், கே.எம்.சி., குழுமம் நிர்வாக இயக்குநர் முத்துகோவிந்தன்,  மேனகா மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், தொழிலதிபர்கள் செல்வ கணேஷ், ஜெகநா...

தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நாட்டு நலப்பணி திட்டம்

தேனி, ஏப்.28- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் தேனி அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் சார்பில் நாட்டு நலப்பணிகள் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.  முகாமின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ம. மருதுபாண்டி பிரபாகரன் சிறப்பு தமிழில் வரவேற்றார்.  நிகழ்ச்சிக்கு தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வர் வே.சேகரன் தலைமை தாங்கினார். ஆண்டிபட்டி கிராம ஊராட்சி ஆணையாளர் எஸ். சரவணன் மற்றும் நிர்வாக அலுவலர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆண்டிபட்டி அரசு பெண்கள் தொழிற் பயிற்சி மைய முதல்வர் ஜெ.சரவணன் சிறப்புரை ஆற்றினார். தேனி மைய பயிற்சி அலுவலர் மா- அன்பரசன் உடையாளி, லட்சுமணன் மற்றும் வெள்ளைச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 4 நாட்கள் நடைபெறும் முகாமில் பள்ளி துப்புரவுப் பணி, கோயில் துப்புரவுப் பணி தெருக்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெறும் என்றும் மேலும் பொதுமக்களுக்கான மஞ்சள் பை வங்கி மேலாண்மை மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக என்.எஸ்.எஸ். அலுவலர் மருதுபா...

நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

  தேனி, ஏப்.5- தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்வியோடு தன்திறனை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு துறைகளிலும் உங்களை தடம் பதியுங்கள்" என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் "வேலைவாய்ப்பு துறை” சார்பில் 4.4.2025 வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் பெற்று மகுடம் சூடிய மாணவியர்களுக்கு "பணிநியமன ஆணை வழங்கும் விழா" கல்லூரியின் கர்மவீரர் காமராஜர் கலையரங்கில் (K3) நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் செயலாளர் காசி பிரபு வரவேற்புரையாற்றினார். அவர்தம் உரையில், * வாய்ப்புகளை பயன்படுத்தினால் வாழ்க்கையை வளமாக்கலாம். படிப்போடு திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை பெறும் பயிற்சியைக் கற்றுக் கொடுக்கும் இணையதளங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். கற்கும் கல்வியின் மதிப்பு அவர்கள் அடையும் வேலையை பொருத்தே அமையும். படிக்கும் கல்வி வெற...

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

தேனி, ஏப்.3- தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா 2.4.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறையின் உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றி, கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறதென்றும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவது மாணவர்களிடையே விளக்கினார். மேலும் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை பேராசிரியர்கள் அனைத்து துற...

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா

தேனி, மார்ச்.30 - தேனி அருகே உள்ள நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 11-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 29.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றி கல்லூரியின் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து பட்டதாாரி மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மைசூர் யூனிட் டெக்னாலஜி இன்போசிஸ் -இணைத்தலைவர் பிரதீப் சிவகாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் எவ்வாறு இயங்குகின்றது என்றும், எதிர்காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமே பயணிக்க கூடிய சமுதாய சூழல் உருவாகும் என்றும், UPI போன்ற நிதி சார்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சி, மென்பொருள் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தி...

தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் 15-வது கல்லூரி ஆண்டு விழா

தேனி, மார்ச்.29- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15 -வது கல்லூரி ஆண்டு விழா 28.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை  உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கல்லூரி செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம்  கல்லூரியின் ஆண்டு அறிக்கையினை வாசித்தார். விழாவில் மதுரை அண்ணா பல்கலைகழக மண்டலம் டீன் டாக்டர்.லிங்கதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரியின் ஆண்டு மலரை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், கல்வி ஒன்று மட்டுமே சமுதாய வாழ்க்கை முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம், தனிமனித ஒழுக்கம் மற்றும் ஆளுமை திறனை அளிக்கும் என்றும், மாணவர்கள் படிக்கும் பொழுதே தங்களுடைய அறிவை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றியடைய முடியுமென்றும், அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கு வழங்குகின்ற உதவித் தொகையினை சரியாக பயன்படுத்தி ...

ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மகளிர் தின விழா

தேனி, மார்ச்.10- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி எஸ்.ரெங்கநாதபுரம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆர் .ரமா பிரபா கலந்து  கொண்டு சிறப்புரையாற்றினார். ஊக்க மூட்டல் பேச்சாளர் ரத்ன மகாலட்சுமி பயிற்சியாளர்களுக்கு தக்க அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.  அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஜெ.சரவணன் வரவேற்றார். விழாவில் பயிற்சி அலுவலர் ரமேஸ் மற்றும் மேலாளர் சேதுராமலிங்கம் மகளிர் தினத்தையொட்டி மகளிர் தின சிறப்பு குறித்து வாழ்த்தி பேசினார்கள். இதில் நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பாக கோகுல கிருஷ்ணன், துரைமுருகன் கலந்து கொண்டனர் . விழாவின் போது பயிற்சி மாணவிகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதல்வர் ஜெ.சரவணன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.  முடிவில் பயிற்றுனர் ஆர். திலகம் நன்றி கூறினார். சசி துரை, சிறப்பு நிருபர்  ...........................

தேனி அருகே உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா

தேனி, மார்ச்.8- தேனி அருகே உள்ள உப்புக்கோட்டை அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா 7.3.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு கள்ளர் பள்ளிகள் உத்தமபாளையம் சரகம் உதவி தொடக்க கல்வி அலுவலர் சாந்தி தலைமை தாங்கினார். போடி ஒன்றிய வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேச பாண்டியன், வட்டார கல்வி அலுவலர்கள் சம்பூர்ணப்பிரியா, ராஜமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) பிரதீபா வரவேற்றார். விழாவில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பாலமுருகன், சந்திரசேகர், வட்டார வளமைய கணக்கர் செல்வராணி, முன்னாள் தலைமை ஆசிரியைகள் வாசுகி, சுமதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பள்ளியின் சிறப்பு குறித்து விளக்கி பேசினர்.  விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது பள்ளி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  முன்னதாக பள்ள...