Skip to main content

Posts

Showing posts with the label கல்வி

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில்; காமராஜர் 124-வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது

தேனி, ஜூலை.17- தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், எளிமையின் சிகரம் மற்றும் கிங்மேக்கர் "கல்விக் கண் திறந்த கர்மவீரர்" எனப் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் எண்ணற்ற பள்ளிகளை தொடங்கி, இலவச கல்வி மற்றும் மதிய உணவு திட்டம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தினார். அவரது கல்வி புரட்சியால் தமிழகம் கல்வியில் புதிய எழுச்சியை அடைந்தது. அவரது தன்னலமற்ற சேவை, எளிமை, நேர்மை மற்றும் மனிதநேயத்தை இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது பிறந்த நாள் கல்வி திருவிழாவாக தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை சார்பில் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இந்த பிறந்த நாள் விழா குறித்து உறவின்முறை பொதுச்செயலாளர் ஆனந்தவேல் கூறியதாவது, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சமூக பொறுப்பு, உடல்நலம், மனிதநேயம் மற்றும் விளையாட்டு உணர்வை ஊக்குவிக்கும் வகையில் மினி மாரத்தான், மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள், மாபெரும் ரத...

தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும், மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ஏற்படுத்தி தர கோரி அமைச்சரிடம், நகராட்சி கவுன்சிலர் கடவுள் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.25- தேனி மாவட்டத்தில் ஆய்வு பணிக்காக வருகை தந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அவர்களிடம் தேனி காவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர், நகராட்சி கவுன்சிலர் கடவுள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி அல்லிநகரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 33-வது வார்டு கருவேல்நாயக்கன்பட்டியில் பகுதியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. தேனி நகராட்சி எல்லைக்குள் ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பள்ளியில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த போதுமான இட வசதியும் உள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், தேனி நகராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமப்புற மாணவர்கள் இலவசமாக (அரசு பள்ளியில்) உயர்நிலை கல்வி பயில ஏதுவாக எங்கள் ஊரிலுள்ள பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதுபோல எங்கள் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் அருகில் உள்ள கிராமங்களான பின்னத்தேவன்பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்...

கம்பத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா

தேனி, ஜூன்.6- இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தேனி மாவட்டம், கம்பம் ஒன்றியம் கிளை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் விழா கம்பம் ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. விழா பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி ஜக் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. அப்போது மாணவர்களுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு மரக்கன்றுகள் மஞ்சள் பையில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் இயன்முறை மருத்துவர் பூர்ணிமா, காவலர் சுரேந்திரன், ரெட் கிராஸ் இயக்க செயலாளர் பாண்டி மற்றும் சமூக சேவகர் அன்பு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கம்பம் அன்பு அறம் செய் அறக்கட்டளை சார்பில் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைப் பெரியாற்றுக்கரையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வனவர் ஜெய்கணேஷ், வனவர் சுப்பிரமணி,சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலக கிளர்க் பிச்சைமணி, விவசாயி சங்கிலி, மோகன், லதா,...

தேனி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு, மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி, முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி, ஜூன்.4- கோடை விடுமுறை முடிந்து இன்று (04.06.2026) பள்ளிகள் திறக்கப்பட்டுள்தை முன்னிட்டு, தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் வழங்கினார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட காலை உணவின் தரம் மற்றும் மாணவர்களுக்கு போதுமான அளவில் உணவு வழங்கப்படுகிறதா என்பன குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், உணவு தயாரிக்கும் சமையலறை, குடிநீர் வசதி, உணவுப் பொருட்களின் இருப்பு போன்றவற்றை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட இலட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கி கல்வியில் சிறந்...

தேனி பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாக பிரச்சனை: இருதரப்பினர் இடையே அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தேனி, ஜூன்.4- தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளையின் கீழ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனராக செல்வமனோகரன் இருந்து வருகிறார்.  இந்நிலையில் கடந்த 17.3.2021 அன்று மதுரை சிஇஓஏ எஜுகேஷனல் சொசைட்டி நிர்வாக இயக்குனர் தனியார் பள்ளி கல்வித்துறையின் அனுமதி இன்றி பதிவு செய்யப்படாத புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவது குறித்தும் சில நிபந்தனைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.   பெனடிக்ட் மிஷன் அறக்கட்டளை தீர்மானத்தின் படி சென்னை மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் அலுவலக உத்தரவின் படி மதுரை சிஇஓஏ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி என்ற பெயரில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தாளாளராக பாக்கியநாதன் என்பவரை செல்வமனோகரன் கடந்த 26.3.2021 ஆண்டு நியமித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பள்ளியின் தாளாளராக இருந்து வந்த பாக்கியநாதன் என்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால் கடந்த 26.3.2025 அன்று அவரை தாளாளர் பொறுப்பில் இருந்து நீக்கியும் பதிவு செய்யப்படாத...

தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 132 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.39 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

தேனி, நவ.14- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 14.11.2025 அன்று பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 132 மாணவ மாணவியர்களுக்கு ரூ20 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணணக்குமார் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  தற்போதைய காலகட்டத்தில் கல்வி மிகமிக முக்கியமானதாக உள்ளது படிப்பில் தொடர்ச்சியாக முழு கவனம் செலுத்தினால் மட்டுமே உயர்ந்த நிலைய அடைய முடியும். பள்ளிகளில் மாணவர்களின் எழுத்தறிவு விகிதத்தை விட மாணவிகளின் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா மு...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 3D பிரிண்டிங் மையம் திறப்பு விழா

தேனி, நவ.6- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திரவியல் துறையில் 3D பிரிண்டிங் தொழில்நுட்ப மையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரியின் முதல்வர் முனைவர்.C.மதளை சுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம். இணைச்செயலாளர் T.சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் பொறியியல் துறை சார்ந்த பாகங்களின் வடிவமைப்புகளை கணினி உதவியுடன் 3D மாடல்களை பயன்படுத்தி பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தோடு துவக்கப்பட்ட 3D பிரிண்டிங் தொழில்நுட்ப மையத்தை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆகியோர் கலந்து கொண்டு 3D பிரிண்டிங் (முப்பரிமாண அச்சிடல்) மையத்தை திறந்து வைத்தனர். விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். நாடார் சரஸ்வதி கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணை செயலாளர்கள், முத...

தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, அக்.10 - தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா: தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பேச்சாளர் பர்வீன் சுல்தானா பங்கேற்பு

தேனி, ஆக.28- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா 28.8.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன் தலைமை தாங்கினார்.  உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், கல்லூரி செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் Dr.C.மதளைசுந்தரம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொறியியல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுதே தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் குறிக்கோளுடன் சிறந்த ஒழுக்கம், கடின உழைப்புடன் தொடர் முயற்சி, பிற மொழியினை கற்றுக்கொள்ளுதல், மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி ஒன்றே நோக்கம் என்று பொறியியல் மாணவர்கள் செயல்பட வேண்டுமென்றும், கிராமப்புற மாணவர்களுக்கு ...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில்: எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம்

தேனி, ஆக.5- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் தலைமை தாங்கினார். கல்லூரியின் இணைச்செயலாளர் T.சுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் துறையின் பேராசிரியர் டாக்டர்.T.வெனிஸ்குமார் வரவேற்றார்.  கல்லூரியின் முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம் கருத்தரங்கத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்து வாழ்த்துரை. வழங்கினார். இந்த கருத்தரங்கத்தில் ஓசூர் இன்னோவேட் இன்ஜினியரிங் புராடெக்ட் நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் டாக்டர்.T.ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் (IOT) ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் பல்வேறு தொழில்துறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும், இத்தொழில்நுட்பம் தொடர்பான மென்பொருள் அப்ளிகேசன், எம்படட் மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தை அடிப்டையாக கொண்ட இன்டஸ்டிரியல் ஆட்டோமேசன் ஆகியவற்றை பற்றி விளக்கினார்....

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில், மரக்கன்றுகள் நடும் விழா

  தேனி, ஜூலை.8- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கனரா வங்கியின் 120-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு தேனி கனரா வங்கி மற்றும் கல்லூரியின் பசுமை சூழல் செல் இணைந்து நடத்திய மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.  விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் உபதலைவர் A.S.ஜீவகன் தலைமை தாங்கினார். கல்லூரியின் செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர  டாக்டர்.C.மதளைசுந்தரம் வரவேற்றார். விழாவில் தேனி மாவட்ட கனரா வங்கியின் துனை பொதுமேலாளர் இந்திரயா, உதவி பொது மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு 200 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து சிறப்பித்தனர். மேலும் உலகளவில் மாறி வரும் சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருக்க மரங்கள் உதவுவதை வலியுறுத்தும் வகையில், கல்லூரி வளாகத்தில் சிவகுண்டலம், வில்வம், இழுப்பை, நாகலிங்கம், மருதம், சரக்கொன்றை போன்ற பழைமையான மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜ...

மாநில அளவிலான சைக்கிள் போட்டியில்; நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை

தேனி, ஜூன்.10- சென்னையில் மாநில அளவிலான தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி 8.6.2025 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். 48 கிலோமீட்டர் வரையிலான தூரம் நிர்ணயிக்கப்பட்டு கோவை பெடல்ஸ், சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோரேசர்ஸ், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரான்சைசர்ஸ், திருச்சி ராக்போர்ட் மதுரை மாஸ் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளில் இருந்து 80 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாமாண்டு கணினி பொறியியல் துறையின் மாணவர் G.K.பிரமோத் ரான்சைசர்ஸ் அணியில் பங்கு பெற்று 19 நிமிடங்கள் 16 நொடியில் 48 கிலோமீட்டர் இலக்கினை அடைந்து முதல் பரிசாக ரூ.3,00,000/- பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S. G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன். பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம், கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பணி நியமன ஆணை

தேனி, மே.5- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ மாணவிகள் கத்தார் மேக்னிபுரோ டெ டெக்னாலஜி (Magnipro Technology services) பன்னாட்டு நிறுவனம் ஆன்லைன் வாயிலாக நடத்திய டெக்னிக்கல் தேர்வு சுற்று மற்றும் HR தேர்வில் கலந்து கொண்டனர்.  இந்த தேர்வில் கணினி அறிவியல் பொறியியல் துறையின் இறுதியாண்டு மாணவி T.மமிதா செக்யூரிட்டி ஆபரேசன் சென்டர் அனாலிஸ்ட் (Security operation Center Analyst) பணிக்கு ஆண்டுக்கு ரூ.28,00,000/- (இருபத்து எட்டு இலட்சம்) ஊதியத்துடன் தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் இந்த மாணவி கத்தார் மேக்னிபுரோ டெக்னாலஜி நிறுவனம் 45 நாட்கள் வழங்கிய பயிற்சியில் (Internship) பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட  இந்த மாணவிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் T.ராஜமோகன், உபதலைவர் P.P.கணேஷ், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் M.பழனியப்பன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், கல்லூரியின் செயலாளர்கள் A.ராஜ்குமார், A.S.R.மகேஸ்வரன், இணைச்செயலாளர் S.நவீன்ராம். கல்லூரியின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள். கல்லூரியின் முதல்வர் டாக...

தேனியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.சி பள்ளி திறப்பு விழா: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார்

தேனி, மே.1- தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடபுதுப்பட்டியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு 30.4.2025 (அட்சயதிரிதியை) அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி பள்ளியை திறந்து வைத்தார்.  மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் செண்டலங்கார செண்பகர மன்னார் ராமானுஜ சுவாமிகள், தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, தேனி அரசு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துசித்ரா, எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விழாவிற்கு வந்த அனைவரையும் பள்ளி தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வெட்டை திறந்து வைத்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார். விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை இயக்குனர் ஹனுமந்த்ராவ், கே.எம்.சி., குழுமம் நிர்வாக இயக்குநர் முத்துகோவிந்தன்,  மேனகா மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், தொழிலதிபர்கள் செல்வ கணேஷ், ஜெகநா...