பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணர்வு திட்டம் தொடர்பான கருத்தரங்கம் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் நடந்தது
தேனி, ஜூலை.13- தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் (Awarenes Programme on Gender Sensitisation and Elimination of Violence Against Womens விழிப்புணர்வு திட்டம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் 12.7.2025 அன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.என். மஞ்சுளா, எஸ் ஸ்ரீமதி, எம் ஜோதிராமன், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பாலின பாகுபாடு பெண்களின் கல்வி பற்றிய அலட்சியம் திருமணத்தில் கட்டாயம் குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகள் அதிகம் உள்ள காரணத்தினால், பொதுமக்களுக்கு சமூகப் பிரச்சனைகள் குறித்துத் தெளிவான தகவல்களை வழங்கி அவர்களது எண்ணங்கள் மற்றும் நடத்தை முறைகளை மாற்றத்தை ஏற்படுத்தவும். பெண்கள் மீதான எந்தவொரு வகையான வன்முறையையும் மெய்யியல் உளவியல். சொற்சாடல் பொருளாதார அடிப்படை குறைக்கவும்....