Skip to main content

Posts

Showing posts with the label விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் கல்விக்கடன் முகாம்கள் மூலம் இதுவரை 206 மாணவர்களுக்கு ரூ.11 கோடியே 61 லட்சம் வங்கி கடனுதவிகள்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, அக்.10 - தேனி மாவட்டம். பெரியகுளம் மேரி மாதா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி சார்பில் 10.10.2025 அன்று நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 21 மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 47 லட்சம் வங்கி கடனுதவிகளை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். இந்த முகாமில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், உயர்கல்வி பயில்வதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், அனைவரும் கல்வி பயில வேண்டும் என்பதற்காகவும். இக்கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் பங்கேற்பதால் வங்கிகளில் வழங்கப்படும் கல்விக் கடன் திட்டங்கள். வட்டி சலுகை, திருப்பிச் செலுத்தும் முறைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். மாணவர்கள் அனைவரும் கல்வியின் முக்கியத்துவம் அறிந்து முறையாக படிக்க வேண்டும். நமது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவதற்கு கல்வி மிக மிக முக்கியமானதாகும். நாம் முறையாக கல்வி கற்று உயர்ந்த நிலையை அடைந்தால் மட்டுமே எதிர்கால தலைமுறையினர் இடையே நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும். கல்வி ஒரு தனிப்பட்ட நபரின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் ...

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா: தேனி எம்.பி., TTS வழங்கினார்.

தேனி, செப்.21- தேனி மாவட்ட உலக அமைதி குழு சார்பில் உலக அமைதி தின விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கி கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  உலக அமைதி குழு பொதுச்செயலாளர் ஜெயபால், தேனி மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக அமைதி குழு இயக்குனர் பால்பாண்டி வரவேற்றார்.  விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். விழாவில் தொழிலதிபர் சந்திரகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உதவி திட்ட அலுவலர் மோகன், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சோல்ஜர் அகாடமி இயக்குனர் சின்னச்சாமி, வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணி கார்த்த...

தேனி மாவட்டத்தில், வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்கும் பொருட்டு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

தேனி, செப்.2- தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் வட்டம்,  மேகமலை மணலார் பகுதியில் 2.9.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாட்டில் வளரிளம்  பருவத்தில் அதிகமாக கர்பங்கள் நிகழும் 24 வட்டாரங்களில் தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் திட்டத்தினை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில்   தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழ்நாட்டில்  வளரிளம் பருவத்தில் கர்ப்பங்கள் நிகழும் 24 வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த வட்டாரங்களில் உள்ள மக்களுக்கு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம்  செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.   அதனடிப்படையில் இன்றைய தினம்  இத்திட்டம் தமிழ்நாட்டில்  தேனி...

கம்பம் அருகே: சுருளிதீர்த்தத்தில் நெகிழி விழிப்புணர்வு.

தேனி, ஜூலை 28- தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிதீர்த்தத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் நெகிழி விழிப்புணர்வு நடைபெற்றது.  இதில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அதற்கான உணவு படையல்கள், பூத நாராயணன் கோயில் சுற்றிலும், ஆற்றங்கரையிலும், பிளாஸ்டிக் மற்றும் ஆடைகளை விட்டு சென்றது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் மற்றும் வனவிலங்குகளுக்கும் வரக்கூடிய பக்தர்களுக்கு நோய் தொற்று உண்டாகக்கூடிய சூழலை ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் வனத்துறை, அன்பு அறம் செய்ய அறக்கட்டளை, பாரஸ்ட் வெல்பேர் தொண்டு நிறுவனம், என்.எஸ். எஸ். அலோசியஸ் பள்ளி மாணவர்கள் முயற்சியில் ஆன்மீகத்தலமான சுருளிதீர்த்தம் பகுதியை தூய்மை பகுதியாக மாற்றப்பட்டது. இதனால் ஆன்மீக தளத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் பாராட்டி சென்றனர். நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வாக கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி, அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி சுருளிப்பட்டி அன்பு ராஜா, வனவர் ஜெயகணேஷ், சதீஷ் வனத்தையும்,ஆன்மீகத் தளத்தையும் சுத்தம் செய்வதன் நன்மைகளையும், பிளாஸ்டிக் பைக...

பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் விழிப்புணர்வு திட்டம் தொடர்பான கருத்தரங்கம் : உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் நடந்தது

  தேனி, ஜூலை.13- தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தலைமையில் பாலின உணர்வும், பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் (Awarenes Programme on Gender Sensitisation and Elimination of Violence Against Womens விழிப்புணர்வு திட்டம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் 12.7.2025 அன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், ஆர்.என். மஞ்சுளா, எஸ் ஸ்ரீமதி, எம் ஜோதிராமன், முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே.நடராஜன் மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். தேனி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் பாலின பாகுபாடு பெண்களின் கல்வி பற்றிய அலட்சியம் திருமணத்தில் கட்டாயம் குடும்ப வன்முறை போன்ற பிரச்சனைகள் அதிகம் உள்ள காரணத்தினால், பொதுமக்களுக்கு சமூகப் பிரச்சனைகள் குறித்துத் தெளிவான தகவல்களை வழங்கி அவர்களது எண்ணங்கள் மற்றும் நடத்தை முறைகளை மாற்றத்தை ஏற்படுத்தவும். பெண்கள் மீதான எந்தவொரு வகையான வன்முறையையும் மெய்யியல் உளவியல். சொற்சாடல் பொருளாதார அடிப்படை குறைக்கவும்....