Skip to main content

Posts

Showing posts with the label விழாக்கள்

தேனியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ.6.31 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

  தேனி, நவ.3- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3.12.2025 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,31,674 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலை இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஊன்றுகோல் சக்கர நாற்காலி மூன்று வாகனம், ஸ்மாட் போன்கள் டெஸ்சி பிளேயர், காதொலி கருவி, பேட்டரி வீல் சேர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி. தேனி மாவட்டத்தில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி விளையாட்டு பிஸியோதெரபி பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவதற்காக 4 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வ...

தேனி மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

  தேனி, நவ.28- தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா 27.11.2025 அன்று கேக் வெட்டி, காப்பக குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தேனி திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜன் வரவேற்றார். போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நிஷாந்த், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாசித் ரஹ்மான், கண்ணன், முகமது ரபீக், ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் ஸ்டாலின், காப்பக நிர்வாகி பால்பாண்டி உள்பட பலர் கலந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அயலக அணி நிர்வாகிகள் செய்திருந்தனர். ........................ நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனியில் 72-வது கூட்டுறவு வார விழா: ரூ11.16 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1,141 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் வழங்கினார்.

தேனி, நவ.20- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கூட்டரங்கில் இன்று (20.112025) கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ரூ11.16 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு கடனுதவிகளை 1,141 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் வழங்கினார்கள். இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், கூட்டுறவு சங்கங்கள் விவசாயிகள் தொழில்முனைவோர். பெண்கள் இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து, சமுதாய முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகிறது. நூற்றாண்டிற்கும் மேற்பட்ட கட்டமைப்பை கொண்ட கூட்டுறவுத் துறையில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடவும் பொருளாதார முன்னேற்ற வளர்ச்சிக்கும் கூட்டுறவுத்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதல்வர் மருத்தகம் மூலம் ஏராளமானோர் பயன்பெற்று வருகிறார்கள். கூட்டுறவு நிறுவனங்கள் ம...

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சி தான் இந்த வாக்காளர் பட்டியல் SIR: தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேட்டி

தேனி, நவ.7- தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா 7/11/2025 அன்று நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., வருகின்ற நவம்பர் 11-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் வாக்காளர் பட்டியல் S.I.R திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, SIR-யை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIR-யை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீகாரில் நாம் தெளிவாக பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா...

தேனியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தேனி, அக்.12- தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் தேனியில் 12.10.2025 அன்று நடைபெற்றது.   ஊர்வலத்திற்கு சிலமலையை சேர்ந்த சைவ சமய திருப்பணி செம்மல் பாண்டி நாட்டு கோச்செங்கணர் ஆன்மீக வள்ளலார் ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், உதவி தலைவர் சொக்கர்ராஜா, வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  ஊர்வலம் தேனி மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி விழா நடைபெற்ற வசந்த மஹால் நிறைவடைந்தது.  இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ விஸ்வகர்ம சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த விதம், செய்கின்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார்.  இந்த கூட்டத்தில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர்...

தேனி மாவட்டத்தில் சுருளி சாரல் விழா 27.9.2025 மற்றும் 28.9.2025 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

     தேனி, செப்.25-                                               தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் விழா-2025” 27.9.2025 மற்றும் 28.9.2025  ஆகிய இரண்டு  நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மற்றும் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நடைபெற உள்ளது.  தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் பெருமை மற்றும் அதன் பழமையினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தினை பிற மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுருளி சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.  இந்த விழாவில் செய்தித்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கா...

தேனியில் பொறியாளர் தின விழா

தேனி, செப்.18- தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் பொறியாளர் மெல்வின் தலைமை தாங்கினார்.  சங்க பொருளாளர் பொறியாளர் ரவி பாரத் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பொறியாளர் கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டு பேசினார்.  விழாவில் சங்க முன்னாள் தலைவர்கள் பொறியாளர் தின  வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  விழாவின் போது சங்க கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எம்.எல்.ஏ., சரவணக்குமாரிடம் கொடுக்கப்பட்டது.   1.கட்டுமான பொறியாளர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சில் உருவாக்க வேண்டும். 2. கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். 3.கட்டுமான வரைபட அனுமதி கட்டணம் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக கொடுக்கப்பட்டது.  முடிவில் சங்க செயலாளர் பொறியாளர்.சையது பரூக் அப்துல்லா நன்றி கூறினார். ................................ நாகராஜ், த...

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக-வின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை: மதுரை புத்தக திருவிழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

மதுரை, செப்.14- மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவின் 8-வது நாளான 13.9.2025 அன்று நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்று கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால் தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அ...

தேனியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஐம்பெரும் விழா: வருவாய்த்துறை அமைச்சர் KKSSR பங்கேற்பு

தேனி, செப்.5- தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அரசு அங்கீகாரம் பெற்று நூற்றாண்டு நிறைவு விழா, முன்னாள் நிர்வாகிகள் பணி நிறைவு பாராட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் என ஐம்பெரும் விழா தேனி வேலுச்சாமி சின்னம்மாள் மகாலில் நடைபெற்றது.  விழாவிற்கு மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தேசிங்கு ராஜன், முன்னாள் மாநில தலைவர் சண்முகராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட தலைவர் கணேஷ் குமார் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏ...