Skip to main content

Posts

Showing posts with the label விழாக்கள்

தேனியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தேனி, அக்.12- தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் தேனியில் 12.10.2025 அன்று நடைபெற்றது.   ஊர்வலத்திற்கு சிலமலையை சேர்ந்த சைவ சமய திருப்பணி செம்மல் பாண்டி நாட்டு கோச்செங்கணர் ஆன்மீக வள்ளலார் ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், உதவி தலைவர் சொக்கர்ராஜா, வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  ஊர்வலம் தேனி மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி விழா நடைபெற்ற வசந்த மஹால் நிறைவடைந்தது.  இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ விஸ்வகர்ம சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த விதம், செய்கின்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார்.  இந்த கூட்டத்தில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர்...

தேனி மாவட்டத்தில் சுருளி சாரல் விழா 27.9.2025 மற்றும் 28.9.2025 ஆகிய 2 நாட்கள் நடக்கிறது: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

     தேனி, செப்.25-                                               தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறையின் சார்பில் “சுருளி சாரல் விழா-2025” 27.9.2025 மற்றும் 28.9.2025  ஆகிய இரண்டு  நாட்கள் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகள், மற்றும் நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்  நடைபெற உள்ளது.  தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களின் பெருமை மற்றும் அதன் பழமையினை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், தமிழகத்தில் உள்ள கலாச்சாரத்தினை பிற மாநில மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுருளி சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.  இந்த விழாவில் செய்தித்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், கா...

தேனியில் பொறியாளர் தின விழா

தேனி, செப்.18- தேனி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பொறியாளர் தின விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு சங்க தலைவர் பொறியாளர் மெல்வின் தலைமை தாங்கினார்.  சங்க பொருளாளர் பொறியாளர் ரவி பாரத் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் பொறியாளர் கே.எஸ்.சரவணக்குமார் கலந்து கொண்டு பேசினார்.  விழாவில் சங்க முன்னாள் தலைவர்கள் பொறியாளர் தின  வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தேனி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  விழாவின் போது சங்க கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு எம்.எல்.ஏ., சரவணக்குமாரிடம் கொடுக்கப்பட்டது.   1.கட்டுமான பொறியாளர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சில் உருவாக்க வேண்டும். 2. கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். 3.கட்டுமான வரைபட அனுமதி கட்டணம் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக கொடுக்கப்பட்டது.  முடிவில் சங்க செயலாளர் பொறியாளர்.சையது பரூக் அப்துல்லா நன்றி கூறினார். ................................ நாகராஜ், த...

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக-வின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை: மதுரை புத்தக திருவிழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

மதுரை, செப்.14- மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவின் 8-வது நாளான 13.9.2025 அன்று நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்று கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால் தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அ...

தேனியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஐம்பெரும் விழா: வருவாய்த்துறை அமைச்சர் KKSSR பங்கேற்பு

தேனி, செப்.5- தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அரசு அங்கீகாரம் பெற்று நூற்றாண்டு நிறைவு விழா, முன்னாள் நிர்வாகிகள் பணி நிறைவு பாராட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் என ஐம்பெரும் விழா தேனி வேலுச்சாமி சின்னம்மாள் மகாலில் நடைபெற்றது.  விழாவிற்கு மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தேசிங்கு ராஜன், முன்னாள் மாநில தலைவர் சண்முகராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட தலைவர் கணேஷ் குமார் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏ...

நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா: தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பேச்சாளர் பர்வீன் சுல்தானா பங்கேற்பு

தேனி, ஆக.28- தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 16-வது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா 28.8.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S.G.தர்மராஜன் தலைமை தாங்கினார்.  உபதலைவர் A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், கல்லூரி செயலாளர் A.S.S.S.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் Dr.C.மதளைசுந்தரம் வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பொறியியல் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் பொழுதே தொழில்நுட்பம் சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றும், எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து எதிர்காலத்தை தீர்மானிக்கும் குறிக்கோளுடன் சிறந்த ஒழுக்கம், கடின உழைப்புடன் தொடர் முயற்சி, பிற மொழியினை கற்றுக்கொள்ளுதல், மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வளர்ச்சி ஒன்றே நோக்கம் என்று பொறியியல் மாணவர்கள் செயல்பட வேண்டுமென்றும், கிராமப்புற மாணவர்களுக்கு ...

தேனியில் நடந்த இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநாட்டில், சாதனையாளர்களுக்கு பாராட்டு

தேனி, ஆக.10- இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தேனி மாவட்ட மாநாடு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 9.8.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  மாநில செயலாளர் பெத்தாட்சி ஆசாத், மாவட்ட செயலாளர் முல்லை முருகன், மாவட்ட பொருளாளர் கோவர்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் நூர் முகமது வரவேற்றார்.  நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் ராஜரத்தினம், மாநில துணை பொதுச்செயலாளர் இந்திரஜித், துணை தலைவர் அழகிரிசாமி, தேசிய குழு உறுப்பினர் தமிழ் மது ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.  நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், வினோரா லா அசோசியேட்ஸ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் போது ஆசிரியர் நற்பணியில் நல்லாசிரியர் விருது ப...

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500 சிலைகள் வைத்து வழிபாடு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தேனி, ஜூலை.27 - தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் 10-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் தேனி வசந்த மஹாலில் 27.7.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மாய லோகநாதன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி கலந்து கொண்டு இந்து எழுச்சி முன்னணி இயக்கம் தொடங்கப்பட்ட விதம், கடந்து வந்த பாதைகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கமிட்டி  பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் விழாவில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி நன்றி கூறினார்.  ...