Skip to main content

Posts

Showing posts with the label விழாக்கள்

தேனி மற்றும் வடபுதுபட்டியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா : கேக் வெட்டி, சேலை, அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

தேனி, ஜூன்.23- தமிழக வெற்றிக் கழகம் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா 22.6.2026 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.  இதில்  தேனி நகரில் தெய்வா பால்பாண்டி ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள தெய்வா ஹோட்டல் முன்பு அசைவ பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க-வை சேர்ந்த தக்காளி சந்திரன், ஜெயமணி, ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தேனி அருகே உள்ள வடபுதுபட்டியில் விஜய் சசிகுமார் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி த.வெ.க வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க வடபுதுபட்டி கிளை செயலாளர் ஞானராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல வடபுதுப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான...

தேனியில் அகில இந்திய கட்டுனர் சங்கம் தேனி மைய புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

தேனி, மே.27- அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மையத்தின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா 26.5.2026 அன்று தேனி பெரியகுளம் சாலையில் உள்ள கூடலிங்கேஸ்வரா மண்டபத்தில் நடைபெற்றது.  விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பில்டர்ஸ் அசோசியேசன் மாநில சேர்மன் ராமலிங்கம், முன்னாள் மாநில சேர்மன் ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். விழாவின் போது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடைபெற்றது. இதில் தேனி மைய சேர்மனாக தண்டபாணி, செயலாளராக அமிதாப்பச்சன், பொருளாளராக அந்தோணி, துணைச் சேர்மனாக சின்னராஜா, இணைச் செயலாளராக சிராஜுதீன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் பதவி ஏற்றுக்கொண்டனர்.  விழாவில் தொழிலதிபர்கள் முத்து கோவிந்தன் (KMC), சர்வேஸ்ராஜா, வசந்த், மனோகரன், பாண்டியராஜ், கிளாசிக் மணி, அகில இந்திய கட்டுனர் சங்க முன்னாள் நிர்வாகிகள் நவ்சாத், விசாகன், அமிதாப்பச்சன் உள்பட தொழில் அதிபர்கள் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு அகில இந்திய கட்டுனர் சங்க தேனி மைய புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரி...

தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

  தேனி, மே.1- தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தேனி அருகே உள்ள அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள டாக்டர் அவென்யூ பகுதியிலுள்ள மருதம் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் விழா 1.5.2026 அன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்தியன் ரெட் கிராஸ் சேர்மன் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வி.மகாராஜன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட செயலாளர் சுருளிவேல், பொருளாளர் முகமது ஷேக் இப்ராஹிம் , நிர்வாக குழு உறுப்பினர்கள் நாணயம் சிதம்பரநாதன், முகமது பாட்சா, ஜெகநாதன் உறுப்பினர்கள் சுந்தர், சுருளிப்பட்டி அன்புராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் முல்லை நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் சாமி, ஹரி ஆசிரியர், சதீஸ், மகாராஜன், பத்மினி, பாலமுருகன், கனகராஜன், செல்வம்,, கவிஞர் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்வின் போது மருதம் பூங்கா சீரமைக்கப்பட்டு 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. .............................. நாகராஜ், தலைமை நிருபர்  

தேனி அருகே நடந்த யுகாதி விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு உற்சாக வரவேற்பு

தேனி, ஏப்.5- தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கம், தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்கம் சார்பில் யுகாதி விழா மற்றும் குடும்ப விழாவில் தேனி- பழனிசெட்டிபட்டி போடி விலக்கு அருகே அமைந்துள்ள கிருத்திக் கிராண்ட் ஹோட்டலில் 5.4.2026 அன்று நடைபெற்றது. விழாவிற்கு ரெட்டி நலச்சங்கம் மாநில தலைவர் ரவி ரெட்டி தலைமை தாங்கினார். தேனி மாவட்ட ரெட்டி நலச்சங்க தலைவர் டாக்டர் வி.ஆர்.ராஜன் முன்னிலை வகித்தார்.  விழாவிற்கு வந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் அருண் பாஸ்கர் வரவேற்றார். விழாவில் தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேனி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ரெட்டி நலச்சங்கத்தினர் சார்பில் முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திமுக வேட்பாளர் ஓ.பி.எஸ்., அவர்கள் போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வ...

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் மறுஏலம் மீண்டும் ஒத்திவைப்பு : ராட்டினம் இயக்க புதிய நிபந்தனைகளை ரத்து செய்ய கோரி ஏலதாரர்கள் வலியுறுத்தல்

தேனி, பிப்.27- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான  மறுஏலம் 27.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் ம...

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ஒத்திவைப்பு : ராட்டினம் இயக்க புதிய நிபந்தனை விதிப்பதாக கூறி ஏலத்தில் இருந்து ஒப்பந்ததாரர்கள் வெளிநடப்பு

தேனி, பிப்.12- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான  ஏலம் 12.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ஜெயதேவி, ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, நாராயணி, மேலாளர் பாலசுப்பிரமணியம...

தேனி மாவட்டத்தில் நடந்த 77-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

தேனி, ஜன.26- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.1.2026) நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டு, காவல்துறை படைப்பிரிவுகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் 80 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயங்களையும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றி 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்துறை பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணிபுரிந்த 6 மருத்துவர்களுக்கும். 3 சிறந்த சமூகநீதி விடுதிக் காப்பாளர்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 202...

தேனி மாவட்டத்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் பென்னிகுவிக் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

தேனி, ஜன.15- தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இன்று (15.12026) கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாள் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பாரப்பரிய உடையணிந்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உழவர்களின் உழைப்பிற்கும், உயர்வுக்கும் துணைநிற்கும் வகையில் உழவர்கள் போற்றி வணங்கக்கூடிய காளை மாட்டு வண்டியில் அமர்ந்து ஒட்டி சென்று மக்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில், விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா: பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தேனி, ஜன.13- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (13.1.2026) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை தைப்பொங்கல் விழாவாகும். அனைத்து தொழில்களுக்கும். அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், சுருள்வாள் சுற்றுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட கலெக்டர் பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த போட்டிகளில் வெற்...