Skip to main content

Posts

Showing posts with the label விழாக்கள்

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் மறுஏலம் மீண்டும் ஒத்திவைப்பு : ராட்டினம் இயக்க புதிய நிபந்தனைகளை ரத்து செய்ய கோரி ஏலதாரர்கள் வலியுறுத்தல்

தேனி, பிப்.27- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காண தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான  மறுஏலம் 27.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் ம...

தேனி-வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ஒத்திவைப்பு : ராட்டினம் இயக்க புதிய நிபந்தனை விதிப்பதாக கூறி ஏலத்தில் இருந்து ஒப்பந்ததாரர்கள் வெளிநடப்பு

தேனி, பிப்.12- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன்  கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண்பானை, முடிகாணிக்கை, காது குத்துதல் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான  ஏலம் 12.2.2026 அன்று கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் ஜெயதேவி, ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபீதா, நாராயணி, மேலாளர் பாலசுப்பிரமணியம...

தேனி மாவட்டத்தில் நடந்த 77-வது குடியரசு தின விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

தேனி, ஜன.26- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.1.2026) நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப் புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் வானில் பறக்கவிட்டு, காவல்துறை படைப்பிரிவுகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்து, காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் 80 பயனாளிகளுக்கு ரூ.1.19 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு கேடயங்களையும் மற்றும் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, சிறப்பாகப் பணியாற்றி 54 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல்துறை பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சிறப்பாகப் பணிபுரிந்த 6 மருத்துவர்களுக்கும். 3 சிறந்த சமூகநீதி விடுதிக் காப்பாளர்களுக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 202...

தேனி மாவட்டத்தில் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் பென்னிகுவிக் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்

தேனி, ஜன.15- தேனி மாவட்ட நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் பகுதியில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இன்று (15.12026) கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாள் பொங்கல் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக பாரப்பரிய உடையணிந்து மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உழவர்களின் உழைப்பிற்கும், உயர்வுக்கும் துணைநிற்கும் வகையில் உழவர்கள் போற்றி வணங்கக்கூடிய காளை மாட்டு வண்டியில் அமர்ந்து ஒட்டி சென்று மக்களுடன் பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசுகையில், விழாவில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்து கொள்...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் விழா: பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தேனி, ஜன.13- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று (13.1.2026) மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய விளையாட்டு போட்டிகளுடன் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை தைப்பொங்கல் விழாவாகும். அனைத்து தொழில்களுக்கும். அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான பானை உடைத்தல், சுருள்வாள் சுற்றுதல், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மாவட்ட கலெக்டர் பானை உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த போட்டிகளில் வெற்...

தேனி மாவட்டத்தில் மக்கள் வழக்கறிஞர் MKM.முத்துராமலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தேனி, ஜன.2- தேனி மாவட்ட கோர்ட்டு அருகே உள்ள எம்.கே.எம் சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர், மக்கள் வழக்கறிஞர் MKM.முத்துராமலிங்கம் பிறந்த நாள் விழா 2.1.2025 அன்று கொண்டாடப்பட்டது. விழாவின் போது தேனி வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம் MKM முத்துராமலிங்கம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் தேனி செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர் திருவரங்க பெருமாள், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன், வணிகர் சங்க நிர்வாகிகள் விஷூவல் பிரபு, ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.  அதுபோல வினோரா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் வக்கீல் MKM.முத்துராமலிங்கம் அவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்...

தேனி-க.விலக்கு அருகே: சங்கர் நகர் வீட்டு மனை விற்பனை துவக்க விழா; நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர்

தேனி, டிச.22– தேனி மாவட்டம், க.விலக்கில் இருந்து கண்டமனூர் செல்லும் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதி எதிரில் அமைந்துள்ள சங்கர் நகர் வீட்டு மனை விற்பனை துவக்க விழா 21.12.2025 அன்று நடைபெற்றது. இந்த துவக்க விழா நிகழ்ச்சிக்கு வினோரா பவுண்டேஷன் நிறுவன தலைவர் வி.ஆர். ராஜன் தலைமை வகித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் மேலாளர் குமார் வரவேற்றார். வீட்டு மனை விற்பனை துவக்கத்தை பிரபல நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும் வீட்டு மனை பிளாட்கள் வாங்கியவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி ஊக்கமளித்தனர். இந்த சங்கர் நகரில் வீட்டுமனைகள் அகலமான சாலை வசதி, சிறந்த குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதியுடன் அமைந்துள்ளன. இங்கு 3 சென்ட் மற்றும் 6 சென்ட் வீட்டு மனை பிரிவுகள் உள்ளன. இங்குள்ள வீட்டு மனைகள் DTCP அங்கீகாரம் பெற்றதும், RERA ஒப்புதல் பெற்ற பிளாட்களாகவும் உள்ளன. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் தேனி மேலப்பேடடை இந்து நாடார் உறவின்முறை சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜமோகன், வைகை அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர். கணேஷ், ராயல் அரிமா சங்கத்தி...

தேனியில் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் முப்பெரும் விழா

தேனி, டிச.22- தேனியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்கத்தின் 3-ம் ஆண்டு முப்பெரும் விழா தேனியில் உள்ள தனியார் ஹோட்டலில் 21.12.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரீஸ்வரன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் ஆலோசகர் நாகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் சார்பில் கண்ணன், பசுமை இயக்கம் சார்பில் வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம், ஆன்மீக சொற்பொழிவாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, 2024 - 2025ம் ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கி, ஸ்ரீ திருமலை திருப்பதி சேவை சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினர்.  நிகழ்ச்சியை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலநடராஜன் தொகுத்து வழங்கினார். இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கல...

தேனி மாவட்டத்தில் 4-வது புத்தக திருவிழாவினை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தேனி, டிச.22- தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு புத்தகம் வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை உள்ள பல்வேறு வகையான நூல்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து பொதுமக்களுக்கு எளிதில் கிடைப்பதற்காக மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழா நடத்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் 4-வது புத்தக திருவிழா 21.12.205 முதல் 28.12.2025 வரை நடைபெறவுள்ளது. தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட நிர்வாக மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 4-வது புத்தகத் திருவிழாவினை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து புத்தக அரங்குகளையும், பல்வேறு துறைகளில் அமைக்கப்பட்டிருந்த கருத்துக் கண்காட்சி அரங்குகனையும் பார்வையிட்டனர். விழாவில் மாவட்ட கலெக்டர் தெரிவிக்கையில்,  மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் வாசிப்பு பழக்கத்தை ஊக்கு...

தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு பகுதியில் புதிய மின் மாற்றி திறப்பு : தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளர், கவுன்சிலர் பாலமுருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி, டிச.13- தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு பகுதியில் மின் அழுத்த குறைபாடு ஏற்பட்டு வந்தது. இதனை சரிசெய்வதற்கு 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவினை பரிசீலனை செய்த மின்வாரியத்துறை புதிய மின்மாற்றியை மந்தைகுளம் கண்மாய் கிழக்குக்கரை பகுதியில் அமைத்தது.  இதனைத்தொடர்ந்து இந்த புதிய மின் மாற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக 13.12.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு 5-வது கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் தலைமை தாங்கினார் தேனி மின் பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) முருகேஸ்பதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் (வடக்கு) பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த புதிய மின்மாற்றியை தேனி வடக்கு திமுக பொறுப்பாளர் கவுன்சிலர் சூர்யா பாலமுருகன் ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார அலுவலர் ஜெயராமன், ஊர் பிரமுகர்கள் துரைராஜ், சாதிக், ராஜாராம், பாலகுரு, ஐயப்பன் உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்ற...

தேனியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ.6.31 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

  தேனி, நவ.3- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3.12.2025 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,31,674 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலை இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஊன்றுகோல் சக்கர நாற்காலி மூன்று வாகனம், ஸ்மாட் போன்கள் டெஸ்சி பிளேயர், காதொலி கருவி, பேட்டரி வீல் சேர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி. தேனி மாவட்டத்தில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி விளையாட்டு பிஸியோதெரபி பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவதற்காக 4 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வ...