Skip to main content

Posts

Showing posts with the label வேண்டுகோள்

வைகை அணையை தூர்வார வேண்டும்: தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் வலியுறுத்தல்

தேனி, ஜூன்.1- தேனி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அணையை உடனடியாக தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை அதிகரிக்க தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) மாநில பொதுச்செயலாளர்  வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். வைகை அணையை, மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த அணையின் நீர் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், அணையின் அடிப்பகுதியில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண் மற்றும் படிவங்களை அகற்றும் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது காலத்தின் கட்டாய...

தேனியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் : சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகளுக்காக தொடர்ந்து போராடி வரும் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன்

தேனி, மே.24- தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் அல்லிநகரம் 5-வது வார்டு மச்சால் தெருவில்  பாதாளச் சாக்கடைக்காக ( LS lifting station ) குழி தோண்டி அடைக்கப்படாமல் உள்ளன.  அதுபோல பாதாளச்சாக்கடை குழிகள் கடந்த (26.5.2025) அன்று தொடங்கி பணியும் ஒரு வருடமாக முடிவடையாமல் குழிகள்  மூடப்படாமல் உள்ளன.  பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் விழுந்து விடும் அபாயம் இருப்பதால் கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  மேலும் மூன்று இடங்களில் ட்ரைனேஜ் உடைத்து கழிவுநீர் மந்தைக்குளம் கண்மாயில் திருப்பிவிடப்பட்டு வெகு நாட்களாகிறது. மச்சால் தெரு மற்றும் கிணற்று தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்கள் இன்று வரை மூடப்படாமல் உள்ளது.  இதேபோன்று சாக்கடை கால்வாய்கள் தூர் வாருவது, ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் குப்பைகளை அகற்றுவது போன்ற அடிப்படை பணிகளுக்காக கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் தொடர்ந்து போராடி வருகிறார்.  எனவே தேனி அல்லிநகரம் நகராட்சி  நிர்வாகம் பாதாள சாக்கடை உள்ளிட்ட ச...

மதுரை-திருநகர், சொர்ணம் காலனி பகுதியில் குண்டும் குழியுமான புழுதி சாலையால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, மார்ச்.13- மதுரை மாநகராட்சி, திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடபடாததால் அப்பகுதி புழுதி களமாக காட்சியளிப்பதுடன் குண்டும், குழியுமான சாலையாக அப்பகுதி மாறிவிட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. இதில் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் கூட ஏற்பட்டு விடுகிறது.  எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை சீரான முறையில் மூடி சாலைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ............................. நாகராஜ், தலைமை நிருபர்  

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் புகையில்லாத போகிப்பண்டிகையை கொண்டாட வேண்டும்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வேண்டுகோள்

தேனி, ஜன.13- நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இதனால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு மற்றும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு, விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. மேலும், நச்சு புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூ...