Skip to main content

Posts

Showing posts with the label திருவிழா

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் 8 நாள் சித்திரை திருவிழா : பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குலாலர் சமுதாயம் சார்பில் மண்டகப்படி

தேனி, மே.19- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. 8  நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த எந்திர ராட்டினங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை கண்டுகளித்தனர்  அதுபோல அம்மனுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி, மாவிளக்கு சேத்தாண்டி வேஷம், கிடா வெட்டுதல் போன்ற நேர்த்தி கடனை இரவு பகலாக நிறைவேற்றினர். இந்த திருவிழாவின்போது முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 15-ந் தேதி நடைபெற்றது. அப்போது தேர் நிலையில் இருந்து கோவில் முன்பு வரை இழுக்கப்பட்டது. இதன் பின்னர் தெற்கு ரத வீதி,  மேற்கு ரத வீதி என தேர் என ஒவ்வொரு நாளும் இழுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தேர் மேற்கு ரத வீதியில் நிற்க வைக்கப்பட்டிந்து. அப்போது வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது....

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் : கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்

  தேனி, மே.16- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா கடந்த 12.5.2026 அன்று வெகு விமர்சையாக தொடங்கப்பட்டு 19.5.2026 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுபோல தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி எடுத்தல் கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடனை இரவு பகலாக செலுத்தி வருகின்றனர்.  இதேபோன்று திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகையான எந்திர ராட்டினங்கள் மற்றும் கடல் கன்னி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கண்டு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அம்மனை தரிசித்து விட்டு, திருவிழா பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு செல்லும் வரை ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ப...

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் முழு நிலவு சித்திரை திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

  தேனி, மே.2- தேனி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோவில் முழு நிலவு சித்திரை திருவிழா தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1.5.2026 நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர்.  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கண்ணகி தேவியினை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதிகள், இரண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பளியன்குடி வழியாக கோவிலுக்கு நடந்துவரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் கருதி வழி நெடுகிலும் ஆங்காங்கே ம...

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்; ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தேனி, ஏப்.29- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 12-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துவதற்கான ஏலத்தை சதீஷ் என்பவர் ரூ.2 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து எந்திர ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு 29.4.2026 அன்று வீரபாண்டி கோவில் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் சக்தி, ராட்டினம் ஏலதாரர் சதீஷ், முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து உணவு கூடம் அமைக்க ஏலம் எடுத்த இடத்திலும் பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை ஏலதாரர் தரப்பபை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ராட்டினம் ஏலம் ரூ.2.44 கோடிக்கு போனது

தேனி, ஏப்.28- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வார்கள். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுது போக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துதவதற்கான ஏலம் 4-வது முறையாக கோவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த ஏலத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் சபர்மதி தலைமை தாங்கினார். ஆய்வாளர் கார்த்திகேயன், வீரபாண்டி கோவில் செயல் அலுவலர் சுபிதா, மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்கர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏலத்தில் ஏலதாரர்கள் 14 பேர் கலந்து கொண்டனர்.  4-வது முறையாக நடந்த இந்த மறுஏலத்தில் ராட்டினம் நடத்துவதற்கு ஏலத்தொகை ...

மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை பெளர்ணமி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: தேனி மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நடந்தது

  தேனி, ஏப்.17- தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா 1.5.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு. தேக்கடியில் உள்ள பெரியார் புலிகள் காப்பக மூங்கில் காடு அரங்கத்தில், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் மற்றும் இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன் சேருவாட் ஆகியோர் தலைமையில் இடுக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாபூ மத்யூ, சப் கலெக்டர் அனுப்கார்க் ஆகியோர் முன்னிலையில் 17.4.2026 அன்று நடைபெற்றது. மங்கலதேவி கண்ணகி கோவில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1.5.2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு எதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம். குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி. பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் ம...

போடி பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு கொடிமரம் ஊன்றும் பூஜை: தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்திருக்கும் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி  9.4.2026 அன்று நடைபெற்றது. போடி நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர்   கோவிலில் இருந்து  கொடிமரம்  சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கொடி மர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.  அதனைத்தொடர்ந்து கிரிவல பாதையில் கொடிமரம் மலைக் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கிரிவல பாதையில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஜுப்பில் மலைக்கோவிலுக்கு சென்று பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.  இந்நிகழ்ச்சியில் போடி ஜமீன்தார் வடமலை ராஜையபாண்டியன், தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்,பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், போடி நகர் த...

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை வணிகமாக்கும் அறநிலையத்துறை; பாஜக சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தால் திடீர் பரபரப்பு

தேனி, மார்ச்.9- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்கள் முக்கிய திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் ஏலம் விடப்படுகிறது. இந்த எந்திர ராட்டத்திற்கான ஏலத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இதனால் ராட்டினம் ஏறும் பொதுமக்களுக்கும் ராட்டினம் கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு ராட்டினம் இயக்குவதற்கான புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் யாரும் முன் வராமல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தல...