Skip to main content

Posts

Showing posts with the label திருவிழா

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை வணிகமாக்கும் அறநிலையத்துறை; பாஜக சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தால் திடீர் பரபரப்பு

தேனி, மார்ச்.9- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்கள் முக்கிய திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் ஏலம் விடப்படுகிறது. இந்த எந்திர ராட்டத்திற்கான ஏலத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இதனால் ராட்டினம் ஏறும் பொதுமக்களுக்கும் ராட்டினம் கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு ராட்டினம் இயக்குவதற்கான புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் யாரும் முன் வராமல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தல...