Skip to main content

Posts

Showing posts with the label தேர்தல்

அரசியலில் அனைத்து உயரத்திருக்கும் சென்றவர் ஓபிஎஸ்; போடி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் பேச்சு

தேனி, ஏப்.16- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து 16.4.2026 அன்று தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்  அப்போது பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கியதும், தொண்டர்கள் போட்டோவை  (சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம்) காட்டுங்கள் என கேட்டனர் அதற்கு பதில் அளித்து பேச தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்  எந்த போட்டோவையும் நான் காட்ட மாட்டேன், உலகம் முழுக்க அந்த போட்டோ எல்லோர் கையிலும் உள்ளது. அது ஒரு மட்டமான போட்டோ, அந்த போட்டோவை காட்டியதால் நான் அதிகமாக திட்டு தான் வாங்கி உள்ளேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்  போன முறை நாம் தான் ஓபிஎஸ்-யிடம் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றம். இந்த முறை அதற்கு சேர்...

எம்ஜிஆர், அம்மா ஆசியோடு தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்: ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் இபிஎஸ்., பேச்சு

தேனி, ஏப்.14- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து 14.4.2026 அன்று பிரசாரம் செய்தனர் பிரசார கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி.  மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநில தொகுதிகளையும் மறுசீரமைப்புக்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்து பேசுகிறார்.   பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லி விட்டனர். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது எங்களை பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டி பார்க்கிறார் இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.   இதனை...

போடி தொகுதியில்; மகளிர் சங்கங்கள், சர்ச் நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்த தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ்.,

தேனி, ஏப்.13- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் போடி சிசம் ஸ்கூல் அருகில் உள்ள சர்ச்சில் சம்மந்தப்பட்ட சர்ச் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டார். அதன் பின் 2026 தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தன்னை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தங்களது பேராதரவு தருமாறு கேட்டு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து போடி பகுதியில் உள்ள (ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில்) பிரமலை கள்ளர் சங்கங்கள் தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் (ஸ்ரீ உச்ச காளியம்மன் திருக்கோவில்) கிழக்கு மறவர் மகாஜன  சங்கங்கள் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை ...

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமுக்கு குக்கர் சின்னத்திற்கு ஆதரவு கோரி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம்

தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்  பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9.4.2026 அன்று பிரசாரம் மேற்கொண்டார். தேனி பங்களா மேடு பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய டிடிவி தினகரன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அமமுக வேட்பாளராக இதே தொகுதியில் கடந்த 2016-ல் அம்மா அவர்களால் நிறத்தப்பட்டு ஏற்கனவே எம்.எல்.ஏ-வாகவும், 2 முறை சீட்டுக்கு போட்டியிட்ட டாக்டர் கதிர்காமு போட்டியிடுகிறார். பெரியகுளம் தொகுதியில் தற்போது திமுக எம்.எல்.ஏ., தான் உள்ளார் ஆனால் இந்த தொகுதியில் குறிப்பாக தேனியில் சுகாதார சீர்கேடு, அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு நீங்கள் அமமுக வேட்பாளரை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை...

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல்

தேனி, ஏப்.6- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 6.4.2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கான வேட்பு மனுவை போடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையனிடம் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ.பி.எஸ்., தனது வேட்பு மனுவை வழங்கினார். அப்போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபிநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக திமுக வேட்பாளர் ஓபிஎஸ்., மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மக்கள் வெள்ளத்தில் போடி கட்டபொம்மன் சிலையில் இருந்து ஊர்வலமாக போடி தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்து...

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டாக்டர்.கதிர்காமு வேட்புமனு தாக்கல்

தேனி, ஏப்.4- பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் அமமுக-வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார்.  இந்நிலையில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு அதிமுக, பாஜக, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று 4.4.2026 அன்று பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ரஜத்பீடன் அவர்களிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி அமமுக மாவட்ட செயலாளர்கள் காசிமாயன், முத்துச்சாமி, தேனி நகர அதிமுக செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் பெரியகுளம் ஒன்றிய அதிமுக செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, பெரியகுளம் நகர அதிமுக செயலாளர் பழனியப்பன், தேனி நகர அமமுக செயலாளர் குரு கணேஷ், தேனி நகர பாஜக தலைவர் ரவிக்குமார் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  .......................... நாகராஜ், தலைமை நிருபர்  

தேனியில் வாக்காளர்கள் இடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி: மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தொடங்கி வைத்தார்.

தேனி, ஏப்.2- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேனி-அல்லிநகரம் நகராட்சியில் வாக்காளர்களிடையே 100 சதவிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் 1.4.2026 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற 2026 பொதுத்தேர்தல் முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 198ஆண்டிபட்டி, 199.பெரியகுளம் (தனி), 200.போடிநாயக்கனூர் மற்றும் 201கம்பம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகனப் பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம் துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி நடைபயண பேரணி மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பரப் பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக, முதன் முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், ...

தேனி பா.ஜ.க அலுவலகத்தில்: அமமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேனி, மார்ச்.31- தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் டாக்டர்.கதிர்காமு, அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் வி.டி. நாராயணசாமி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் லோகிராஜன், கம்பம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.கே ஜக்கையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி மாவட்ட பாஜக  அலுவலகத்தில் 31.3.2026 அன்று நடைபெற்றது. இந்த அறிமுக கூட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன் மற்றும் பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், பி.சி.பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது ஒவ்வொரு தொகுதி வாரியாக பாஜக நிர்வாகிகளுக்கு அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள...