தேனி அருகே கோடாங்கிபட்டி கிராமத்தில்;: விவசாய நிலங்கள் அருகே குவாரி அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: வலையபட்டி மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
தேனி, ஆக.19- தேனி மாவட்டம், போடி தாலுகா, கோடாங்கிபட்டி கிராமம், வலையபட்டியை சேர்ந்த தங்கதுரை மற்றும் கிராம மக்கள் சிலர் தேனி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, எங்கள் ஊரில் பெரும்பாலானோர் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் மட்டுமே பிரதான தொழிலாக நடத்தி வருகின்றனர். எங்கள் ஊரில் பெரும்பான்மையானோருக்கு விவசாய நிலங்கள் அகமலை வனச்சரக பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அதில் எங்கள் ஊர் மக்கள் விவசாயம் செய்தும், கால்நடைகளை மேய்த்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளத்தை சேர்ந்த ராமசுப்பு மகன் சீனிவாசன் என்பவர் எங்கள் ஊரை சுற்றி 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் முறைகேடாக உரிமை ஆவணங்களை ஏற்படுத்தியுள்ளார். அந்த நிலங்களில் ஒரு சில பகுதியில் கிராவல் மற்றும் உடைகல் குவாரியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் மக்கள் எதிர்ப்பையும் தாண்டி அமைத்து விட்டார். அந்த குவாரிக்கு சென்று வருவதற்கு எங்கள் ஊரில் அமைந்துள்ள மணல் நிறைந்த ஓடையில் குவாரி கற்களை எடுத்து செல்லும் வாகனங்கள் சென்று வருவ...