Skip to main content

Posts

Showing posts with the label விவசாயம்

தேனியில் ஆலோசனை கூட்டம்: தென்னையில் வேர் ஊட்டம் குறித்து தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

தேனி, ஏப்.10- தேனியில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தேனி தெய்வா ஹோட்டலில் 9.4.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கவிதாலயா சரவணன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பிரபு ராஜா, தேசிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் தென்னை சாகுபடியில் உள்ள இடர்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் தென்னை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மதுமிதா, மதுஹரினி, மோகன ஸ்ரீ, மோனிஷ் பிரியா, நவீனா, நவினா மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் வேர் ஊட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப்.3 - சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 2.2.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார்.  ஆர்ப்பாட்டத்தில் முல்லைப்பெரியாறு வைகை பாசன கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம்  ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசி சிறப்புரை ஆற்றினார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டன பேரூரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கௌரவ தலைவர் எம்.பி.ராமன்,  முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாய சங்க  செயலாளர் எல் ஆதிமூலம், மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண், மதுரை மண்டல தலைவர் மதுரைவீரன், செயலாளர்  உறங்காப்புலி, உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் எம்.எம்.முருகேசன், ஆபிரகாம், சிவகங்கை மாவட்ட தலைவர் தமராக்கி ராமலிங்கம், செயலாளர் தவம், விருதுநகர் ராஜாங்கம், ராமநாதபுரம் முத்துராமலிங்கம் உள்பட 100-க்...

பூச்சி கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தேனி வேளாண் இணை இயக்குனர் ஆலோசனை

தேனி, அக்.9- தேனி மாவட்ட விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளை  பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பால்ராஜ் ஆலோசனை தெரிவிக்கையில், பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துபவர்கள் அதற்குண்டான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் காலுக்கு ரப்பர் காலணி அணிய வேண்டும். கைகளுக்கு ரப்பர் உறை அணிய வேண்டும். அதுபோல பூச்சி கொல்லி மருந்து காலி டப்பாவை நிலத்தில் வீசக்கூடாது, வீட்டிலும் வைக்கக்கூடாது. மருந்து அடிக்கும் போது நீர்நிலைகளில் படாமல் கவனமாக அடித்தல் வேண்டும்.  அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள வயல்களில் பூச்சி கொல்லி மருந்து படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருந்து தெளிக்கும் போது வயதானவர்கள், நோயாளிகள்,  கருவுற்ற தாய்மார்கள் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் பூச்சி கொல்லி  மருந்தை கலக்க குச்சிகளை பயன்படுத்த வேண்டும். வாயால் கலக்கவோ, ஊதவோ கூடாது. மருந்து தெளிக்கும் இடத்தில் உணவு உண்ணக்கூடாது. காற்று அடிக்கும் திசையிலே மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு வேளாண்மை இணை இயக்குனர் பால்ராஜ் தெரிவித்தார். நாகராஜ், செய்தி ஆசிரியர்  சசி துரை, சிறப...

போடி அருகே சிலமலையில் விவசாயிகளுக்கு பஞ்சகாவியம் குறித்து கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்

தேனி, செப்.16- தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சிலமலையில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பஞ்சகாவியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது கல்லூரியை சேர்ந்த டாக்டர் விஜயகுமார், டாக்டர் செல்வராணி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் இராஜமுருகன் ஆகியோரின் அறிவுரையின்படி சிலமலை ராமமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் மாணவிகள் M.துர்காதேவி, M. ரஷ்நிகா, R.அர்ச்சனா, V. சுமித்ரா, G.L.கௌசல்யா, T. பிரித்தி ஆகியோர் பஞ்சகாவ்யா செயல்முறை விளக்கம் குறித்து சிலமலை. விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். மேலும் பஞ்சகாவியம் தயாரிப்பதற்கு தேவையான மாட்டுச்சாணம், நெய், கோமியம், தண்ணீர், வாழைப்பழம் போன்ற பொருட்களை எந்த அளவில் சேர்த்து தயாரிப்பது என்பது குறித்தும் செயல்முறையில் விளக்கம் அளித்தனர். நாகராஜ், முதன்மை நிருபர் 

தேனியில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம்

தேனி மாவட்டம், சுக்குவாடன்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் 30.8.2024 அன்று வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் சின்னமனூர் முல்லையாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்றது. முகாமிற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயக்குனர் புகழேந்தி தலைமையில் சிறுதானிய உணவுப் பொருட்கள் மற்றும் முருங்கை பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் சிறுதானியங்களிலான சோளம், கம்பு, ராகி இவற்றால் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், முருங்கை சம்மந்தப்பட்ட உணவு பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அப்போது தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராம், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ், தேனி, உத்தமமாளையம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் ராஜா, கருப்பசாமி, உதவிப் பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், விஜயன், வினோத், வேளாண் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மற்றும் நந்தினி, ராஜேஸ்வரி, சரண்யா உள்பட விவசாயிகள், ...

மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தினர் வனத்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மதிவேந்தன் அவர்களை 19.5.23 அன்று மேகமலை எஸ்டேட் ஓனர்ஸ் சங்கத்தின் தலைவர் முத்துராமன், செயலாளர் ராஜேஸ்வரன் பொருளாளர் கண்ணன், உபதலைவர் சந்திரராஜா, உப செயலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்துள்ளனர். தேனி மாவட்டம், மேகமலை மலை மேல் புலத்தில் விவசாயம் செய்து கொண்டுள்ள விவசாயிகளின் கோரிக்கையை மனுவாக உங்களின் கணிவான பார்வைக்கு  சமர்ப்பிக்கின்றோம். அந்த மனுவில், தேனி மாவட்டம் மேகமலையில் விளையக்கூடிய காபி உலகத்தின் தரக் குறியீட்டில் இரண்டாம் இடம் வகிக்கின்றது. அதேபோல் ஏலக்காய் மிகவும் தரமானதாகவும் விளைகின்றது. இது போன்ற அந்நிய செலாவணியை ஈட்டு தரக்கூடிய விவசாயத்தையும் விவசாயிகளையும் முடக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் மேகமலை புலிகள் சரணாலய (DD) துணை இயக்குனர்  ஆனந்த் அதை உங்கள் முன் வகைப்படுத்துகின்றோம் மேகமலையில் சுமார் மூன்றாயிரம் (3,000) ஏக்கர் காப்பி, ஏலம், மிளகு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றது. இதில் செடிகளை அகற்றி இடை நாற்று நடுவதற்கு அர...

தேனியில் விவசாயத்தை ஊக்கப்படுத்த அரிசி இலவசமாக தரும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்

தேனி பங்களாமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சார்பில் விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் விவசாய காப்போம் என்ற தலைப்பில் விவசாயம் குறித்த புகைப்படங்கள் கொண்ட பேனர் போட்டாவை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்ஸ் வைக்க வேண்டும். அந்த ஸ்டேட்ஸ்சை 100 பேர்கள் பார்த்தால் 1 கிலோ அன்னை ராஜபோகம் அரிசி இலவசமாக பெற்று கொள்ளலாம் என தேனி கிருஷ்ணா டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு சில நிபந்தனைகளை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 1. ஸ்டேட்டஸ் வைத்த போனை நேரில் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் (screen shot) அனுமதி இல்லை. 2. ஒரு நம்பருக்கு ஒருமுறை மட்டுமே அனுமதி. 3. இந்த சலுகை மே 10-ந் தேதி முதல் மே 15-ந் தேதி வரை 4. நிபந்தனைகளுக்கு உட்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. K.சரவணன், சிறப்பு நிருபர் - சுக்ரன் நியூஸ் 

மேகமலை பகுதியில் தரமான காபி ஏலம் மிளகு நாற்றுகள் கொண்டு செல்ல வனத்துறை தடையால் பொருளாதார இழப்பு

 தேனி மாவட்டம், தேனி - வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கம்பெனி அலுவலக வளாகத்தில் மேகமலை பிளான்டர்ஸ் மற்றும் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்க முதல் பொதுக்குழு கூட்டம் தலைவர் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் சிதம்பர கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எஸ்டேட் உரிமையாளர்கள்  சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :- காபி, ஏலம், மிளகு நாற்றுகளை அரசு நாற்று பண்ணைகளில் இருந்து எடுத்து வருவதற்கு வனத்துறையினர் சோதனை சாவடியில் தடுத்து விடுகின்றனர். இதனால் தரமான காபி, ஏலக்காய், மிளகு உற்பத்தி செய்வதை வனத்துறையினர்  தடுப்பதால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே சோதனை சாவடியில் விவசாய பொருட்கள் எடுத்து வரும் வாகனத்தை அனுமதிக்க வேண்டும்.  எஸ்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு மற்றும் விஷ பூச்சி கடித்தால் அவர்களை வாகனத்தில் எடுத்து செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை, இதனால் நாங்கள் டோலி மூலம் தூக்கி சென்று  சிகிச்சை அளிக்க முயற்சிக்கிறோம். இதுபோன்ற சம்...