தேனியில் ஆலோசனை கூட்டம்: தென்னையில் வேர் ஊட்டம் குறித்து தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
தேனி, ஏப்.10- தேனியில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் தென்னை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் தேனி தெய்வா ஹோட்டலில் 9.4.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கவிதாலயா சரவணன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாநில தலைவர் பிரபு ராஜா, தேசிய தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி மற்றும் தென்னை சாகுபடியில் உள்ள இடர்பாடுகள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் தென்னை விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி ஆர்.வி.எஸ் பத்மாவதி தோட்டக்கலை கல்லூரியில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மதுமிதா, மதுஹரினி, மோகன ஸ்ரீ, மோனிஷ் பிரியா, நவீனா, நவினா மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டு தென்னையில் வேர் ஊட்டம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்...