Skip to main content

தேனியில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த முகாம்

தேனி மாவட்டம், சுக்குவாடன்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் 30.8.2024 அன்று வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் சின்னமனூர் முல்லையாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தேனி மாவட்ட வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்றது.


முகாமிற்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயக்குனர் புகழேந்தி தலைமையில் சிறுதானிய உணவுப் பொருட்கள் மற்றும் முருங்கை பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த கண்காட்சியில் சிறுதானியங்களிலான சோளம், கம்பு, ராகி இவற்றால் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள், முருங்கை சம்மந்தப்பட்ட உணவு பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.


அப்போது தேனி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வளர்மதி, மாவட்ட வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சங்கர்ராம், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பால்ராஜ்,
தேனி, உத்தமமாளையம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் ராஜா, கருப்பசாமி, உதவிப் பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், விஜயன், வினோத், வேளாண் உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மற்றும் நந்தினி, ராஜேஸ்வரி, சரண்யா உள்பட விவசாயிகள், மாணவர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவி மற்றும் தென்னை மட்டைகளை துகள்கள் ஆக்கும் இயந்திரம் உள்ளிட்ட நவீன வேளாண் இயந்திரங்கள் விவசாயிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

நாகராஜ், முதன்மை நிருபர் 
சசி துரை, சிறப்பு நிருபர் 

Comments