Skip to main content

Posts

Showing posts with the label அமைச்சர்

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உணவு கிட்டங்கிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் ஆய்வு

  தேனி, ஜூலை.11- தேனி மாவட்டத்தில் இன்று (18.7.2026) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் தேனி மண்டல உணவுப்பொருள் கிட்டங்கிகளை மாவட்ட கலெக்டர் மரு இரா.வைத்திநாதன் முன்னிலையில் தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் ப.வெங்கடரமணன் அவர்கள் தேனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் உணவுப்பொருள் இருப்புக் கிட்டங்கியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்டப் பொருட்களை பார்வையிட்டதுடன் அதன் இருப்பு குறித்தப் பதிவேடுகளை ஆய்வு செய்து உணவுப்பொருட்களை இருப்பு வைக்காமல் அவ்வப்போது நியாய விலைக்கடை அங்கன்வாடி மையம் உள்ளிட்ட அரசு பராமரிப்பில் உள்ள மையங்களுக்கு அனுப்பி வைக்கவும் உணவுப்பொருட்களின் தரம் குறைவாக இருந்தால் அதை உடனடியாக மாற்றி தரம் உள்ள உணவுப்பொருட்கள் அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடந்து தேனி நுகர்பொருள் வாணிபக்கழக உணவுக்கிட்டங்கியில் ரூ4.71 கோடி மதிப்பீட்டில் தலா 10...

தேனி கருவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவும், மாணவர்களுக்கு புதிய வகுப்பறை கட்டிடம் ஏற்படுத்தி தர கோரி அமைச்சரிடம், நகராட்சி கவுன்சிலர் கடவுள் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.25- தேனி மாவட்டத்தில் ஆய்வு பணிக்காக வருகை தந்த தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் அவர்களிடம் தேனி காவேல்நாயக்கன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர், நகராட்சி கவுன்சிலர் கடவுள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தேனி அல்லிநகரம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட 33-வது வார்டு கருவேல்நாயக்கன்பட்டியில் பகுதியில் அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி உள்ளது. தேனி நகராட்சி எல்லைக்குள் ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. எங்கள் பள்ளியில் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்த போதுமான இட வசதியும் உள்ளது. மாணவர்களின் நலன் கருதியும், தேனி நகராட்சி பகுதி மற்றும் அருகில் உள்ள கிராமப்புற மாணவர்கள் இலவசமாக (அரசு பள்ளியில்) உயர்நிலை கல்வி பயில ஏதுவாக எங்கள் ஊரிலுள்ள பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அதுபோல எங்கள் பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர் அருகில் உள்ள கிராமங்களான பின்னத்தேவன்பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்...

தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிட பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் ஆய்வு

தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இன்று (24.6.2026) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டுவரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் ஓடைப்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவர் விடுதியினை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விடுதியில் தங்குமிட வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு அட்டவணைப்படி வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து  அமைச்சர் அவர்கள், விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொண்டு, தங்கள் தனித்திறமைகள...

தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு

  தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் க.விலக்கில் இன்று (24.6.2026) அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நடைபெற்று வரும் உற்பத்தி பணிகள், பருத்தி கொள்முதல் நடைமுறைகள், நூல் உற்பத்தி அளவு, இயந்திரங்களின் செயல்திறன், மின்சார பயன்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியன குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில், விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு தேவையான நூல்கள் உற்பத்தி ஆகியன குறித்தும். கடந்த காலங்களில் நலிவுற...