Skip to main content

Posts

Showing posts with the label வணிகம்

தேனி மாவட்டத்தில், கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்.

தேனி, செப்.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங். 20.9.2025 அன்று குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம். 1035-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவையாற்றி வருகிறது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியினை வழங்கி வருகிறது. அதனடிப்படையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சிபுரம். செட்டிநாடு சேலம், பரமக்குடி திண்டுக்கல், அருப்புக்கோட்டை பருத்தி சேலைகள் மற்றும் கோவை கோரா பருத்தி சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.  மேலும் நவீன யுக ஆடவ...

தேனியில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது

தேனி, ஆக.12- தேனி மாவட்டம். தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் 12.8.2025 அன்று வேளாண்மைத்துறையின் சார்பில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார்  முன்னிலையில் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது. மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் மாணவர்களும் பங்கேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நவீன காலத்தின் அதிகப்படியான உற்பத்தி தேவைக்காகவும், குறைந்த காலத்தில் அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் செயற்கை உரங்கள், பூச்சி கொல்லிகள் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இதற்கு முந்தைய தலைமுறையினர் வேதி உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தையே செய்து வந்தார்கள் மேலும், விவசாயம் குறித்து படிக்காமலே அதிக மகசூல் பெறுவது குறித்து மேலான அறிவை பெற்றிருந்தனர். பாரம்பரிய முறையை பின்பற்றாம...

தேனியில் தனிஷ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பழைய தங்கத்திற்கு 2 காரட் கூடுதல் மதிப்பு பெறும் மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம் : ஜூன் 30 வரை நடக்கிறது

தேனி, ஜூன்.16- தேனியில் உள்ள தனிஷ்க் தங்க நகை ஷோரூம் கிளையின் நிர்வாக இயக்குனர்கள் ரமண மூர்த்தி, கதிரேசன் மற்றும் மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்ற சலுகையை [Gold Exchange offer] அறிவித்துள்ளது.  இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது 2 காரட் வரை கூடுதல் மதிப்பு" (up to 2 Karat extra valur) பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இச் சலுகை ஜூன் 30.2025 வரை மட்டுமே வழங்கப்படும் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெறும் வாய்ப்பளிக்கிறது: தங்க நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 1 காரட் கூடுதலாக பெறுங்கள். [1KT extra on old gold வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 2 காரட் கூடுதலாக பெறுங்கள். (2KT extra on old gold] உதாரணத்திற்கு, நீங்கள் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட...

தேனி அருகே, கலாம் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா: தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., திறந்து வைத்தார்

தேனி, ஜூன்.15- கோவை மாவட்டத்தில் கலாம் அய்யா அவர்களின் பெயரில் 6 கிளைகளை துவங்கி தனது கடினமான உழைப்பால் உண்மை நேர்மை என்ற தாரக மந்திரத்தின் மூலம்  வெற்றிகரமாக நடத்தி வரும் 25 வயதான இளம் தொழில் அதிபர்  நித்தீஸ் என்பவர் தற்போது தேனி மாவட்டம், போடி ரோடு, கோடாங்கிபட்டியில் கலாம் பர்னிச்சர் ஷோரூம்  7-வது கிளையினை தொடங்கி உள்ளார். இந்த பர்னிச்சர் கிளையின் திறப்பு விழா 15.6.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் நித்தீஸ் வரவேற்றார். விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெடடி பர்னிச்சர் ஷோரூமை திறந்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து பர்னிச்சர் ஷோரூம் வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பர்னிச்சர் விற்பனையையும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தொழில் அதிபர் கோவை JRD என்ற ஜே. ராஜேந்திரன், ரீபோஸ் மேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலமுரளி, முன்னாள் எம்.எல்.ஏ., போடி லட்சுமணன், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருக்கண்ணன், ...

தேனி அருகே வீரபாண்டியில் ஜானகி முத்தையா A/c திருமண மஹால் திறப்பு விழா

  தேனி, ஜூன்.5- தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் வாசல் எதிரே முழுவதும் ஏ.சி., வசதி செய்யப்பட்ட ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா 5.6.2025 அன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் திருமண மஹாலின் உரிமையாளர் தொழிலதிபர் சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.  இந்த விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், மாவட்ட செயலாளர் திருவரங்க பெருமாள், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன், அ.தி.மு.க தேனி நகர செயலாளர் வக்கீல்  கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தொழிலதிபர் பிரகாஷ் புளுமெட்டல் வசந்த், ரியல் எஸ்டேட் வயல்பட்டி மணிகண்டன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் காசிமாயன், வீரபாண்டி பேரூர் தி.மு.க செயலாளர் செல்வராஜ், தி.மு.க பிரமுகர் வக்கீல் ராஜசேகர் உள்பட தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண மஹாலின் சிறப்பு அம்சங...

ஆண்டிபட்டி அருகே மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மக்களுக்கு கோடையில் குல தெய்வமாய் விளங்கி வரும் தர்பூசணி பழம் விற்பனை

தேனி, மார்ச்.28- கொளுத்தும் கோடை வெய்யில் வந்தாலே .... மனிதனுக்கு தேவையான உடனடி நிவாரணம் என்றால்? அது மர நிழலும் குளிர்ந்த நீரும்  மற்றும் நீர்சத்து அடங்கிய பழ வகைகளும்  தானே...? தேனியிலிருந்து ஆண்டிபட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரே புளிய மர நிழல் என்றால் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திற்கும் எஸ்.எஸ்.புரம் பெரிய பாலத்திற்கும் இடையில் உள்ள ஒற்றை புளியமரம் மட்டுமே.... அங்கு மக்கள் நிழலுக்கு ஒதுங்குவதுடன் அந்த மரத்திற்கு அடியில் தான் இந்த தர்பூசணி அம்பாரம் போடப்பட்டுள்ளதால் நிழலுக்கு நிழலும் ஆச்சு தண்ணீர் பழத்துக்கு  தர்பூசணியும் ஆச்சு.... என்று ஒரே கல்வில் இரண்டு மாங்காய் அடித்து விடுகிறார்கள் . அப்படி இருக்கும் போது அந்த நிழல் தரும் புளியமரமும்  தர்பூசணியும் கோடை வெய்யிலுக்கு குலதெய்வம் இல்லாமல் வேறென்னவாம்...? சசி துரை, சிறப்பு நிருபர்  ......................

தேனி மாவட்டத்தில் கிரசர்களில் உற்பத்தி செய்யப்படும் 70% கனிமங்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் முறைகேடாக கேரளாவிற்கு கடத்தி செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு : டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் குற்றச்சாட்டு

தேனி, மார்ச்.24- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களிடம் தமிழ்நாடு மண் லாரி உரிமையாளர்கள் பெடரேசன் தலைவர் செல்ல. ராஜாமணி தலைமையில் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி, உத்தமபாளையம் தாலுகா டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முனியாண்டி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் கல்குவாரி, கிரசர்களில் இருந்து செயற்கை மணல் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி ஆகிய கனிமங்களை எடுத்து செல்லும் லாரிகளுக்கு பணத்தை பெற்றுக் கொண்டு ட்ரான்சிட் பாஸ் கொடுக்க மறுக்கும் கிரசர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல அனுமதி பெறாமல் முறைகேடாக நடைபெற்று வரும் கல்குவாரி, கிரசர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 5.3.2025 முதல் தேனி மாவட்டத்தில் இயங்குகின்ற கல்குவாரி, கிரசர் உரிமையாளர்கள் தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்துக் கொண்டு லாரி தொழிலையும், கட்டுமான தொழிலையும், முடக்குகின்ற வகையில் கல்குவாரி கிரசர்களில் எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்களுக்கு யூனிட்டுக்கு தலா ரூ.1000 விலை உயர்த்தி ஜல்லி ஒரு ...

தேனியில் இந்து வியாபாரிகள் நல சங்கத்தினருக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

தேனி, மார்ச்.19- இந்து முன்னணி பேரியக்கத்தின் தேனி வடக்கு மாவட்டத்தின் சார்பு அமைப்பான இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா 19.3.2025 அன்று தேனி வாசவி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு பாண்டியன் பட்டாசு கடை நிர்வாக இயக்குனர் குமரேசன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.  விழாவில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு இந்து வியாபாரிகள் நல சங்கத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். விழாவில் தேனி நகர பா.ஜ.க தலைவர் ரவிக்குமார், பா.ஜ.க வர்த்தக அணி பிரிவு நிர்வாகி ஜெயராமன் உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் போது 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி வடக்கு மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட செயற்கு...

தேனியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்டத்தின் முப்பெரும் விழா: மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பங்கேற்பு

தேனி, பிப்.6- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தேனி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 11-வது ஆண்டு துவக்க விழா, 42-வது மாநில மாநாடு கலந்தாய்வு மற்றும் தேனி மாவட்ட பொதுக்குழு கூட்டம் என முப்பெரும் விழா தேனி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள வி.கே.வேலுச்சாமி மஹாலில் 6.2.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட தலைவர் தேனீ செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெருமாள் மாநில இணைச்செயலாளர் காளிமுத்து, தேனி மாவட்ட கௌரவத் தலைவர் ஏ.எம்.ஆர்.ஆர். சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட செயலாளர் திருவரங்கப்பெருமாள் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடந்து வந்த பாதை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார்.  அதுபோல விழாவில் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, திண்டுக்கல் மண்டல தலைவர் கிருபாகரன், மாநில தலைமை செயலாளர் ராஜ்குமார், மாந...