தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் வாசல் எதிரே முழுவதும் ஏ.சி., வசதி செய்யப்பட்ட ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா 5.6.2025 அன்று நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் திருமண மஹாலின் உரிமையாளர் தொழிலதிபர் சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.
இந்த விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், மாவட்ட செயலாளர் திருவரங்க பெருமாள், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன், அ.தி.மு.க தேனி நகர செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தொழிலதிபர் பிரகாஷ் புளுமெட்டல் வசந்த், ரியல் எஸ்டேட் வயல்பட்டி மணிகண்டன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் காசிமாயன், வீரபாண்டி பேரூர் தி.மு.க செயலாளர் செல்வராஜ், தி.மு.க பிரமுகர் வக்கீல் ராஜசேகர் உள்பட தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமண மஹாலின் சிறப்பு அம்சங்களாக 700 பேர் அமரக்கூடிய ஏ.சி., திருமண ஹால், 180 பேர் அமரக்கூடிய டைனிங் ஹால், மணமகன், மணமகள் ஏ.சி., அறைகள், கார் பார்க்கிங் வசதி, ஏ.சி., தங்கும் விடுதி, ஜெனரேட்டர் வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே திருமணம், நிச்சயதார்த்தம், மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு, காதணி விழா, பிறந்தநாள், வசந்த விழா போன்ற சுப நிகழ்ச்சிகளை வீரபாண்டியில் நடத்திட நவீன வசதிகள் உடன் முழுவதும் ஏ.சி., வசதி செய்யப்பட்ட ஜானகி முத்தையா ஏ.சி., மஹாலினை கீழ்க்கண்ட செல்போன் எண்கள் செல் : 75980 81234, 75980 91234 மூலம் புக்கிங் செய்து கொள்ளலாம்.
.............................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments