Skip to main content

Posts

Showing posts from March, 2026

தேனி பா.ஜ.க அலுவலகத்தில்: அமமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேனி, மார்ச்.31- தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் டாக்டர்.கதிர்காமு, அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் வி.டி. நாராயணசாமி, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் லோகிராஜன், கம்பம் சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.கே ஜக்கையன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இடையே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி மாவட்ட பாஜக  அலுவலகத்தில் 31.3.2026 அன்று நடைபெற்றது. இந்த அறிமுக கூட்டத்திற்கு தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், அமமுக மாவட்ட செயலாளர் காசிமாயன் மற்றும் பா.ஜ.க முன்னாள் மாவட்ட தலைவர்கள் வெங்கடேசன், பி.சி.பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது ஒவ்வொரு தொகுதி வாரியாக பாஜக நிர்வாகிகளுக்கு அந்தந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள...

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

தேனி, மார்ச்.24- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் இன்று (24.03.2026) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிற்பக் கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 199.பெரியகுளம் (தனி), 198.ஆண்டிபட்டி, 200.போடிநாயக்கனூர் மற்றும் 201.கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி, நடைபயண பேரணி, மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பர பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி...

தேனியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 35-வது ஷோரூம் திறப்பு விழா : திரைப்பட நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்

தேனி, மார்ச்.16- உலகளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 35-வது தேனி புதிய ஷோரூம் திறப்பு விழா 16.3.2026 அன்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர்), சுதிர் அகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர்), அமீர் பாபு (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்), நௌசாத் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), நந்த லால் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தேனி கிளை துணை தலைவர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம். வைரம் மற்றும் வெள்ளி, கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள...

மதுரை-திருநகர், சொர்ணம் காலனி பகுதியில் குண்டும் குழியுமான புழுதி சாலையால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, மார்ச்.13- மதுரை மாநகராட்சி, திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடபடாததால் அப்பகுதி புழுதி களமாக காட்சியளிப்பதுடன் குண்டும், குழியுமான சாலையாக அப்பகுதி மாறிவிட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. இதில் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் கூட ஏற்பட்டு விடுகிறது.  எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை சீரான முறையில் மூடி சாலைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ............................. நாகராஜ், தலைமை நிருபர்  

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை வணிகமாக்கும் அறநிலையத்துறை; பாஜக சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தால் திடீர் பரபரப்பு

தேனி, மார்ச்.9- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்கள் முக்கிய திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் ஏலம் விடப்படுகிறது. இந்த எந்திர ராட்டத்திற்கான ஏலத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இதனால் ராட்டினம் ஏறும் பொதுமக்களுக்கும் ராட்டினம் கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு ராட்டினம் இயக்குவதற்கான புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் யாரும் முன் வராமல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தல...

தேனியில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கு

தேனி, மார்ச்.5- தேனியில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக தகவல் மையத்தின் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு 4.3.2026 அன்று தேனி இன்டர்நேஷனல் ஹோட்டலில் நடைபெற்றது.  பயிலரங்கு நிகழ்வை மத்திய தகவல் ஒளிபரப்பு துறையின் தென் மண்டல பொது இயக்குனர் வி.பழனிச்சாமி ஐ.ஐ.எஸ்., தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்விற்கு வந்த அனைவரையும் மத்திய ஊடக தகவல் மையத்தின் சென்னை இயக்குனர் பி. அருண்குமார், ஐ.ஐ.எஸ் வரவேற்றார். இதனைத்தொடர்ந்து பயிலரங்கில் மதுரை மண்டல தொழிலாளர் நல ஆணையாளர்  பிரவீன் பாண்டி மோகன்தாஸ் தொழிலாளர் வரன்முறை சட்டங்கள் சம்பந்தமான தகவல்களை தெரிவித்து பேசினார். இதனை அடுத்து போடியில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் நறுமண வாரியத்தின் துணை இயக்குனர் (மார்க் கட்டிங்) செந்தில்குமரன் நறுமண பொருட்கள் சார்ந்த எதிர்கால வேலை வாய்ப்புகள்' என்ற தலைப்பில் இந்தியாவில் விளையும் நறுமணப் பொருள்கள் சம்பந்தப்பட்ட தரவுகளையும், அது சார்ந்த உள்நாடு, வெளிநாடு அளவிலான தொழில் வாய்ப்புகள் சம்பந்தமான விஷயங்களை சொல்லி விளக்கமாக பேசினார். இதனைத்தொடர்ந்து ஊடகம் சார்ந்த தகவல்கள் ம...