Skip to main content

Posts

Showing posts with the label சமூக சேவை

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் அமைப்பு சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு மஞ்சப்பை, மரக்கன்று வழங்கப்பட்டது

தேனி, ஜூன்.5  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அன்பு அறம் செய் தன்னார்வ குழு சார்பில் தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகை தந்த அனைத்து மகளிருக்கும் மஞ்சப்பை, மரக்கன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிர் குழு சார்பாக இந்திராணி, வனிதா, சங்கமம் அறக்கட்டளை சுரேஷ்குமார் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத்தொடர்ந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விருது பெற்ற சுருளிப்பட்டி அன்பு ராஜா பேசுகையில், பூமி உங்களுக்காக செய்த உதவிக்கு நீங்கள் செய்யும் கைமாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இருப்பது, நாளைய சந்ததி வலம் பெற சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க வேண்டும், வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசித்து விடுவோம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்திடுவோம், பொது போக்குவரத்தை ஊக்கி வைப்போம், நாம் பயன்படுத்திய பொருட்களில் இருந்து கழிவுகளை பிரித்து எடுத்து பணப்பலன் பெற்றிடுவோம் என்று விழிப்புண்வை ஏற்படுத்தி பேசினார். இதனைஅடுத்து சுற்றுச்சூழல் தினத்தை நினைவு கூறும் வகையில் ம...

தேனியில் நடிகர் ரியாஸ் பிறந்தநாள் விழா: முதியோர், ஆதரவற்றோருக்கு உணவு அளித்து கொண்டாட்டம்

தேனி, மே.27- தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியை சேர்ந்த நடிகர் ரியாஸ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 26-ம் தேதி தனது பிறந்த நாளை முதியோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் நாளாக கொண்டாடி வருகிறார். இதேபோன்று இந்த ஆணடு 26.5.2025 அன்று நடிகர் ரியாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டி பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோவில், கண்ணீஸ்வரமுடையார் கோவில் பகுதியில் சுற்றி திரியும் முதியவர் மற்றும் ஆதரவற்றோர்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கினார். அதுபோல மே 26 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ரியாஸ்க்கு திரைத்துறையினர், நகர முக்கிய பிரமுகர்கள், பத்திரிக்கை நிருபர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ............................... பாலகுரு, சிறப்பு நிருபர் 

தெருநாய்கள் துரத்தி கடித்து ஒரே நாளில் 15 பேர் காயம் : பொதுமக்கள் உயிருக்கு ஏற்படும் அபாயம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? இந்து எழுச்சி முன்னணி எதிர்பார்ப்பு

தேனி, ஏப்.10- தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டில் மச்சால் தெரு, கிணற்றுத்தெரு, தொத்தமன் தெரு, மட்டன் ஸ்டால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தெருநாய்களால் கடிக்கப்பட்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம்: ஈஸ்வரன் (வயது 64), மச்சால் தெரு,  விஜயதர்ஷினி (22), தொத்தமன் தெரு, பூபதி ஒண்டிவீரன் நகர்,  வரதராஜ், பகவதி அம்மன் கோவில் தெரு, ஸ்ரீதர் முத்துபாலி தெரு, செல்லப்பாண்டி, பகவதி அம்மன் கோவில் தெரு, அய்யப்பன், இளங்கோ தெரு, கீர்த்திகுமார் இளங்கோ தெரு, மேலும் 7 பேர் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சாதாரணமான விஷயம்போல தெரியவில்லை. ஒரு மாவட்டத்தின் அடிப்படை பொது சுகாதாரம் மற்றும் மக்கள் பாதுகாப்பு முற்றிலும் தோல்வியடைந்ததற்கான உயிருடன் பேசும் சாட்சியாகும்.. மக்கள் உயிருடன் வாழும் உரிமையை பாதுகாப்பது மாவட்ட, நகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும். ஒரே நாளில் 15 பேரை கடிக்கும் அளவுக்கு தெருநாய்களை கட்டுப்படுத்த நிர்வாகம் இழந்து விட்ட நிலையில் இந்த நகராட்சி உள்ளது என்று கூற வேண்டிய சூழ்நிலை ...

அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் சித்திரை திருவிழாவில்; இந்து எழுச்சி முன்னணி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்

  தேனி, ஏப்.8- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு கூட்டம் 6.4.2025 (ஞாயிற்றுக்கிழமை)  அன்று இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி நகர பொதுச் செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார்.  தேனி நகர துணை செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தினை மாவட்ட தலைவர் இராமராஜ் வழிநடத்தினார். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகின்ற சித்திரை முதல் தேதியில் தேனி அல்லிநகரம்  ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோவிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோவிலுக்கு வந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க வேண்டும். அதுபோல வீரப்ப அய்யனார் மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை குண்டு குழியுமாக இருப்பதால்,  நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் போது சிரமப்படக்கூடும். எனவே குண்டும் குழியுமாக உள்ள சாலையை சரிசெய்து தர கூட்டத்தின் வாயிலாக த...

முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும்: ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேனி கலெக்டரிடம் மனு

  தேனி, ஏப்.3 - தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பா.ஜ.க நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் முனியாண்டி தலைமையில் நிர்வாகிகள் சிலர் புகார் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சில்வார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றி வரும் வீரபத்திரன் என்பவர் பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு அரசு பணங்களை கையாடல் செய்து வருகின்றார்.  இவற்றில் உச்சகட்டமாக கல்லூரியில் படித்து வரும் தனது மகன் யோக பாலாஜி என்பவரது பெயரிலும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வரும் சித்ரா மற்றும் பல்வேறு நபர்களது பெயர்களில் போலியாக கணக்கு எழுதி ஊராட்சி மன்ற வளர்ச்சிக்கு வரும் பணங்களை கையாடல் செய்துள்ளார்.  இப்படி தொடர்ந்து முறைகேடு செயல்களில் ஈடுபட்டு வரும் சில்வார்பட்டி ஊராட்சி மன்ற செயலர் வீரபத்திரன் என்பவர் மீது துறை ரீதியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஊராட்சி பொதுமக்கள் சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும்  க...

திண்டுக்கல் குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி; தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி போராட்ட குழுவினர் நடைபயணம்: தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்

தேனி, மார்ச்.24- தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டுகள் கோரிக்கையான திண்டுக்கல் முதல் குமுளி (லோயர் கேம்ப்) வரை அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வரை போராட்டக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டனர். இதில் 23.3.2025 அன்று தேனி பங்களாமேடு பகுதியில் தொடங்கிய இந்த நடைபயணத்தை தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்து போராட்ட குழுவினருடன் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றார். இந்நிகழ்வில் ரயில் பாதை போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன், பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., லாசர், மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல் MKM.முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார், கவுரவ தலைவர் சந்திரகுமார், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் ராஜன், சமூக ஆர்வலர் சிதம்பரம் உள்பட ரயில் பாதை திட்ட போராட்ட குழுவினர், வர்த்தக பி...

தேனி தாலுகா, அல்லிநகரம் மலையடிவார கல்குவாரியில் இமாலய கனிமவளக் கொள்ளை: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் நூதன முறையில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த திட்டம்

தேனி, மார்ச்.22- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வீரப்ப அய்யனார் கோவில் வழியாக பூதிப்புரம் செல்லும் சாலையில் "சிவராம் " என்பவர் நடத்திவரும் கல் குவாரியிலிருந்து தினசரி சுமார் 200-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் மூலமாக கனிம வளங்கள் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டு கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்த குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிக கனிம வளம் முறைகேடாக சட்ட விரோதமாக வெடி மருந்துகளை பயன்படுத்தி வெட்டி எடுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவு கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக அபராதம் விதிக்கப்பட்ட இந்த குவாரி தொடர்ந்து செயல்படுவது எப்படி? தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் உதவியுடன் ஜரூராக இமாலய அளவு கனிமவள கொள்ளை நடைபெற்று வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த குவாரியை முற்றுகையிட்டு உள்ளே கனிம வளங்களை கொள்ளையடித்துக் கொண்டுள்ள...

திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி: தேனியில் இருந்து திண்டுக்கல் வரை போராட்ட குழுவினர் மார்ச் 23-ல் நடைபயணம்

தேனி, மார்ச்.22- திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்ட குழு ஆலோசனை கூட்டம் தேனியில் 21.3.2025 அன்று நடைபெற்றது. கூட்ட முடிவில் போராட்ட குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தேனி மாவட்ட மக்களின் 60 ஆண்டுகள் கோரிக்கையான திண்டுக்கல் முதல் குமுளி (லோயர் கேம்ப்) வரை அகல ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரி மத்திய,  மாநில அரசுகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்களும், பல்வேறு போராட்டங்கள், பேரணிகளும் நடத்தி உள்ளோம். திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் வரை இருந்த திட்டம் 2016-ம் ஆண்டு திண்டுக்கல் முதல் சபரிமலை வரை என மாற்றப்பட்டது. இதனால்  பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு இந்த திட்டம் செயல்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தினை திண்டுக்கல் முதல் லோயர் கேம்ப் மற்றும் லோயர் கேம்ப் முதல் சபரிமலை என 2 திட்டமாக பிரித்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அப்போது தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை தேனியில் இருந்து திண்டுக்கல் ரயில் நிலையம் வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட போராட்டக் குழுவினர் மற்று...

உத்தமபாளையத்தில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு பேரணி: கலெக்டர், எஸ்.பி., பங்கேற்பு

தேனி, மார்ச்.6- தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஒன்றிணைவோம் சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு பேரணி 6.3.2025 அன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் உத்தமபாளையம் துணை கண்காணிப்பாளர்  செங்கோட்டு வேலவன், சங்கமம் அறக்கட்டளை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார், போடி ஏ.எச்.எம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் முகமது இப்ராஹிம் மற்றும் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொண்டு நிறுவனங்கள், க.புதுப்பட்டி நகர் நல கமிட்டி, உத்தமபாளையம் நகர பொதுமக்கள்  மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு  பேரணி தொடர்பாக கூட்டம் உத்தமபாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் பங்கேற்றனர். நாகராஜ், செய்தி ஆசிரியர்  ..........................

தேனியில் வேலை வாய்ப்பு முகாம்: 70 பேருக்கு பணிநியமன ஆணை

  தேனி, மார்ச்.2- தமிழ்நாடு ஆர்ய வைஸ்ய மகா சபா, தேனி கம்மவார் சங்க கல்வி நிறுவனங்கள், ஈக்வெட்டாஸ் டெவலப்மெண்ட் இனிசியடிவ் ட்ரஸ்ட் சார்பில் தேனி N.R.T நகரில் செயல்பட்டு வரும் கம்மவார் சங்கம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் 1.3.2025 அன்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு தமிழ்நாடு ஆர்ய வைசிய மகா சபா மாநில தலைவர் கோம்பை ராமசுப்பிரமணி, மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநில பொருளாளர் குமரேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். தேனி மாவட்ட ஆர்ய வைசிய மகா சபா மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், முன்னாள் மாநில தலைவர் கஸ்தூரி ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இந்த நிகழ்வில் கம்மவார் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு ஆரிய வைசிய இளைஞரணி மாநில தலைவர் ராஜேஷ் குப்தா, செயலாளர் மகாதேவன், பொருளாளர் நாகா கார்த்திக், ஈக்குவிடாஸ் டெவலப்மென்ட் இனிசியடிவ் டிரஸ்ட் நிர்வாகி குணசேகரன், தேனி வாசவி கிளப் தலைவர் சரவணன், செயலாளர் பால நடராஜன், பொருளாளர் இந்ரஜித் வாசவி கிளப் வனிதா தலைவி ஷர்மிளா பொருளாளர் வைஷ்ணவி, வாசவி கிளப் ஜாயின்ட் பி.ஆர்.ஓ சுவ...