Skip to main content

Posts

Showing posts with the label சமூக சேவை

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: குறவர் சமூக மக்களுக்காக வன வேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.27- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வன வேங்கைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமையில் தேனி மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தலைவர் ஏகலைவன் ஆகியோர் முன்னிலையில் குறவர் சமூக மக்கள் 27.10.2025 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்போது கோரிக்கைகள் குறித்து கண்டன கோஷங்கள்  எழுப்பினார்கள். இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், இந்து (SC) குறவர் சமூக மக்கள் 100-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், வடவீர நாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  அம்மாபட்டி கிராமம் இளவெயினி நகர் பகுதியில் மற்றும் தேனி மாவட்ட முழுவதும் வசித்து வருகிறோம்.  மேலும் கடந்த 2017-ம் ஆண்டு மேற்கண்ட இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா தேனி நகர் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கக்கூடிய குறவர் சமூக மக்களுக்கு அன்றைய மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. இந்நிலையில் மேற்கண்ட பட்டா வழங்கிய இடத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக தனி தரைதளம் 175 குடியிப்புகள் கட்டி முடிக்கப்பட்டு குறவர் (SC) 88 குடும்ப...

தேனி பஸ் நிலையத்தில் தவித்த ஆதரவற்ற மூதாட்டிகளை முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த மருந்தாளுநர்

தேனி, அக்.25- தேனி பஸ் நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க இரு மூதாட்டிகள் ஆதரவின்றி தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் போலீசார் உதவியுடன் அவர்களை மீட்டார். அதன்பின்னர் அவர்களை விசாரித்ததில் அவர்கள் பெயர் கனகா 70 மற்றும் வசந்தா 68 என்பது தெரியவந்தது. இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. மதுரை மாவட்டத்தை சேர்ந்த அவர்களை அவர்களது குடும்பத்தினர்களே தேனி பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றதாக தெரிவித்தனர்.  இதனைத்தொடர்ந்து ஆதரவின்றி தவித்த மூதாட்டிகளுக்கு உணவு கொடுத்து மாற்று உடை அணிவித்து அவர்களை தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியில்  உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்து விட்டார். இதுகுறித்து ரஞ்சித்குமார் கூறுகையில், வெளியூர்களில் இருந்து கொண்டு வந்து தேனி மாவட்டத்தில் தவிக்க விட்டு செல்லும் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகிறது. மனிதநேயத்துடன் முதியோர்களை பாதுகாத்து பராமரிக்க முன்வர வேண்டும். வெளியூர் மற்றும் கேரளாவில் இருந்து முதியவர்களை தேனி மாவட்டத்தில் விட்டு செல்பவர்களை சமூக நலத்துறையினர் கண்...

தீபாவளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, அக்.10- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்திக் மற்றும் முனியாண்டி, கணேசன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் , இந்திய நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகள் என்பது குடும்பங்கள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி களிப்பதற்காகவும், குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சமயங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பதன் மூலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்துவிட்டு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு குடும்ப தலைவிகளை சித்ரவதை செய்வது,, குழந்தைகளை சித்ரவதை செய்வது என்று பல்வேறு இன்னல்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர். மேலும் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துகளி...

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா: தேனி எம்.பி., TTS வழங்கினார்.

தேனி, செப்.21- தேனி மாவட்ட உலக அமைதி குழு சார்பில் உலக அமைதி தின விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கி கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  உலக அமைதி குழு பொதுச்செயலாளர் ஜெயபால், தேனி மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக அமைதி குழு இயக்குனர் பால்பாண்டி வரவேற்றார்.  விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். விழாவில் தொழிலதிபர் சந்திரகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உதவி திட்ட அலுவலர் மோகன், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சோல்ஜர் அகாடமி இயக்குனர் சின்னச்சாமி, வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணி கார்த்த...

தேனி எல். எஸ். மில் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாம்: 181 பேருக்கு செயற்கை கை, கால் மற்றும் சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

  தேனி, செப்.12- சென்னையில் உள்ள பிரீடம் டிரஸ்ட், ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவனம் மற்றும் தேனி எல். எஸ். மில் சார்பில் குழந்தைகள் உட்பட  181 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உபகரணங்கள் வழங்கும் முகாம்  வீரபாண்டியில் உள்ள தேனி எல். எஸ். மில் கலையரங்கில் 12.9.2025 அன்று நடைபெற்றது.  முகாமிற்கு எல்.எஸ். மில் சேர்மன் எஸ். மணிவண்ணன்  தலைமை தாங்கினார்.  எல்.எஸ்.மில்  மனித வளத்துறை  துணை பொது  மேலாளர் நிவாஸ் வரவேற்றார்.  ஹெக்ஸவேர் கணினி தொழில் நிறுவன நிர்வாகிகள் லோக பிரம்மன், ராஜீவ் பிரசாத் மற்றும் மைதிலி  பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரீடம்  டிரஸ்ட்  உறுப்பினர் சங்கரன் அன்னா சுவாமி  மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படுகின்ற திட்டங்கள்  மற்றும் கருவிகள் குறித்து  விளக்கினார். தொழில் அதிபர்  கெளமாரி சுதாகரன் வாழ்த்தி பேசினார். முகாமில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 181  மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகள், செயற்கை கை,  கால்கள், சிறு குழந...

தேனியில் வாசவி கிளப் மண்டல மாநாடு

  தேனி, செப்.8- தேனியில் வாசவி கிளப் மண்டல மாநாடு ரம்யாஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் மண்டல தலைவர் ராஜா தலைமையில், மண்டல செயலாளர் பாலமுருகன், வட்டார செயலாளர்கள் வெங்கடேஷ் மற்றும் பிரதா சிவகுமார் முன்னிலையில் நடைபெற்றது.  இந்த மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக வாசவி கிளப் இன்டர்நேஷனல் முதன்மை நிர்வாக துணைத்தலைவர் பலராமன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் இன்டர்நேஷனல் வாசவி கிளப் தலைவர் ரவிச்சந்திரன், இன்டர்நேஷனல் வாசவி கிளப் துணைச்செயலாளர் லால் பகதூர் சாஸ்திரி, இன்டர்நேஷனல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், சுரேஷ், துணை கவர்னர் சதீஷ், மாவட்ட அலுவலர்கள் விஜி மோகன் சேகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி, மாவட்ட துணை மக்கள் தொடர்பு அலுவலர் சுவாதி ஸ்ரீ உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பொறியாளர் ராதாகிருஷ்ணன், கல்வியாளர்  ராஜமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து சிறப்பித்தனர். இந்த மாநாட்டினை வாசவி கிளப் ஆண்டிபட்டி மற்றும் வாசவி கிளப் தேனி நிர்வாகிகள் நடத்தினர். மேலும்...

தேனியில் நடந்த இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநாட்டில், சாதனையாளர்களுக்கு பாராட்டு

தேனி, ஆக.10- இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் தேனி மாவட்ட மாநாடு மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் 9.8.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  மாநில செயலாளர் பெத்தாட்சி ஆசாத், மாவட்ட செயலாளர் முல்லை முருகன், மாவட்ட பொருளாளர் கோவர்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் நூர் முகமது வரவேற்றார்.  நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் ராஜரத்தினம், மாநில துணை பொதுச்செயலாளர் இந்திரஜித், துணை தலைவர் அழகிரிசாமி, தேசிய குழு உறுப்பினர் தமிழ் மது ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.  நிகழ்ச்சியில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், வினோரா லா அசோசியேட்ஸ், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியின் போது ஆசிரியர் நற்பணியில் நல்லாசிரியர் விருது ப...

கம்பம் அருகே: சுருளிதீர்த்தத்தில் நெகிழி விழிப்புணர்வு.

தேனி, ஜூலை 28- தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிதீர்த்தத்தில் வனப்பாதுகாப்பு மற்றும் நெகிழி விழிப்புணர்வு நடைபெற்றது.  இதில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்ற நிலையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அதற்கான உணவு படையல்கள், பூத நாராயணன் கோயில் சுற்றிலும், ஆற்றங்கரையிலும், பிளாஸ்டிக் மற்றும் ஆடைகளை விட்டு சென்றது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாக்கும் மற்றும் வனவிலங்குகளுக்கும் வரக்கூடிய பக்தர்களுக்கு நோய் தொற்று உண்டாகக்கூடிய சூழலை ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் வனத்துறை, அன்பு அறம் செய்ய அறக்கட்டளை, பாரஸ்ட் வெல்பேர் தொண்டு நிறுவனம், என்.எஸ். எஸ். அலோசியஸ் பள்ளி மாணவர்கள் முயற்சியில் ஆன்மீகத்தலமான சுருளிதீர்த்தம் பகுதியை தூய்மை பகுதியாக மாற்றப்பட்டது. இதனால் ஆன்மீக தளத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் பாராட்டி சென்றனர். நிகழ்வில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வாக கிழக்கு வனச்சரகர் பிச்சைமணி, அன்பு அறம் செய் அறக்கட்டளை நிர்வாகி சுருளிப்பட்டி அன்பு ராஜா, வனவர் ஜெயகணேஷ், சதீஷ் வனத்தையும்,ஆன்மீகத் தளத்தையும் சுத்தம் செய்வதன் நன்மைகளையும், பிளாஸ்டிக் பைக...