தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆற்றுப்பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: கம்பம் எம்.எல்.ஏ-விடம் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை
தேனி, 28- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் மற்றும் வினோரா பவுண்டேசன் இயக்குனர் லென். டாக்டர் வி.ஆர். ராஜன் தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு, ஆற்றுப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேனி மாவட்ட மக்களின் எதிர்கால குடிநீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் உயர்வு, விவசாய வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட திட்டங்களை தங்களது தலைமையில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 1. “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டம் கிராம ஊராட்சிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் வகையில் “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். -இந்த திட்டம் ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. -CSR நிதி மூலம் RO குடிநீர் மையங்கள் அமைக்கலாம். -குடிநீரால் பரவும் நோய்கள் குறைய...