Skip to main content

Posts

Showing posts with the label சினிமா

தேனியில் நடிகர் ரியாஸ் பிறந்தநாள் விழா: முதியோர், ஆதரவற்றோருக்கு உணவு அளித்து கொண்டாட்டம்

தேனி, மே.27- தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியை சேர்ந்த நடிகர் ரியாஸ் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 26-ம் தேதி தனது பிறந்த நாளை முதியோர், ஆதரவற்றோர் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிக்கும் நாளாக கொண்டாடி வருகிறார். இதேபோன்று இந்த ஆணடு 26.5.2025 அன்று நடிகர் ரியாஸ் தனது பிறந்த நாளை முன்னிட்டு வீரபாண்டி பகுதியில் உள்ள கௌமாரியம்மன் கோவில், கண்ணீஸ்வரமுடையார் கோவில் பகுதியில் சுற்றி திரியும் முதியவர் மற்றும் ஆதரவற்றோர்  நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கினார். அதுபோல மே 26 அன்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் ரியாஸ்க்கு திரைத்துறையினர், நகர முக்கிய பிரமுகர்கள், பத்திரிக்கை நிருபர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ............................... பாலகுரு, சிறப்பு நிருபர் 

தேனியில் மழைச்சாரல், சோசியல் மீடியா புரொடக்சன் சார்பில் விருது வழங்கும் விழா

தேனி, ஜன.6- தேனி மலைச்சாரல் மற்றும் சோசியல் மீடியா புரொடக்சன் சார்பில் முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா 5.1.2025 அன்று தேனி நகராட்சி எதிரே உள்ள வி.கே.வேலுச்சாமி மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தேனி மலைச்சாரல் நிறுவனர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். சோசியல் மீடியா புரொடக்சன் இயக்குனர் சரிதா ஸ்ரீ முன்னிலை வகித்தார். விழாவில் தொழிலதிபர் இ.எஸ்.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், யுடியூப், பேஸ்புக் உள்பட சோசியல் மீடியாக்களில் பிரபலங்களாக உள்ளவர்களையும், திருநங்கைகள், சமூக சேவை புரிந்து வருபவர்களையும் பாராட்டி விருதுகள் வழங்கினார். இந்த விழாவில் திருச்சி சாதனா, தேனி வணக்கம் டா மாப்ள அருண்குமார், , மீசை முத்துப்பாண்டி உள்பட  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சோசியல் மீடியா கிரியேட்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது சோசியல் மீடியா ரீல்ஸ் கிரியேட்டர்களின் நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாகராஜ், முதன்மை நிருபர்  ...........................

ஆண்டிபட்டியில் தெரிஞ்சா காதலிங்க... படப்பிடிப்பு துவக்கம்

தேனி, அக்.11- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் அக்ரி லேண்ட் பிலிம்ஸ்சின் தெரிஞ்சா காதலிங்க... படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  இந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியில்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிளப் முருகன் கிளாப் அடிக்க, முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் கேமிராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆண்டிபட்டி 5-வது வார்டு குமரபுரம் பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவது போல் காட்சி எடுக்கப்பட்டது.  இதில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை கோல்டு சந்துரு கவனிக்க, மகேந்திரன் இசையமைக்க, கதை - திரைக்கதை - வசனம் - தயாரிப்பு மற்றும் இயக்கத்தை எம்.கஜேந்திரன் பி.ஏ. ஏற்கிறார். அதுபோல படத்தின் இணை தயாரிப்பாளராக பேச்சியம்மன் கே.எஸ்.சுப்புராஜ், ஜெ. சுமதி மைக்கேல் ராஜ் ஆகியோர் உள்ளனர். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தொழிலதிபர்கள் பி.ஆர்.கண்ணன் மற்றும் மதுரை மைக்கேல்ராஜ் நடித்து வருகின்றனர். சசி துரை, சிறப்பு நிருபர் 

நடிகர் கார்த்தி நடித்த மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

கோவை, அவினாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் 31.8.2024 அன்று நடிகர் கார்த்தி நடிப்பில், 96 பட இயக்குனர் எஸ்.பிரேம் குமார் இயக்கத்தில் வருகின்ற செப்டம்பர் 27-ம் தேதி திரையில் வெளிவர இருக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது.  இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா, இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இந்த திரைப்படத்தில் யாரோ, இவன் யாரோ என்ற பாடலை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். கமல்ஹாசன் பாடல் பாடியதை ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி  இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், சூலூர் அருகே உள்ள காசிகவுண்டர்புதூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். குடிநீர், கழிப்பிடம், சாலை வசதி இல்லாத ஊரில் படித்து முன்னேறியவன். நான். 7 வருடம் படிக்க எனக்கு, 7 ஆயிரம் ரூபாய் தான் செலவு ஆனது.  சினிமா நடிகர் என்பதால் எனக்கு யாரும் பெண் தரவில்லை. புஞ்சை புளியம...