Skip to main content

தேனியில் மழைச்சாரல், சோசியல் மீடியா புரொடக்சன் சார்பில் விருது வழங்கும் விழா

தேனி, ஜன.6-

தேனி மலைச்சாரல் மற்றும் சோசியல் மீடியா புரொடக்சன் சார்பில் முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா 5.1.2025 அன்று தேனி நகராட்சி எதிரே உள்ள வி.கே.வேலுச்சாமி மஹாலில் நடைபெற்றது.
விழாவிற்கு தேனி மலைச்சாரல் நிறுவனர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார். சோசியல் மீடியா புரொடக்சன் இயக்குனர் சரிதா ஸ்ரீ முன்னிலை வகித்தார்.

விழாவில் தொழிலதிபர் இ.எஸ்.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், யுடியூப், பேஸ்புக் உள்பட சோசியல் மீடியாக்களில் பிரபலங்களாக உள்ளவர்களையும், திருநங்கைகள், சமூக சேவை புரிந்து வருபவர்களையும் பாராட்டி விருதுகள் வழங்கினார்.
இந்த விழாவில் திருச்சி சாதனா, தேனி வணக்கம் டா மாப்ள அருண்குமார், , மீசை முத்துப்பாண்டி உள்பட  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சோசியல் மீடியா கிரியேட்டர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் போது சோசியல் மீடியா ரீல்ஸ் கிரியேட்டர்களின் நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நாகராஜ், முதன்மை நிருபர் 
...........................

Comments