தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பொதுமக்களிடம் இருந்து 525 கோரிக்கை மனுக்கள்
தேனி, ஜூலை.13- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (13.7.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 525 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 525 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் அவர்கள், பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11,445/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள், ரூ.9000/- மதிப்பிலான கம்மோடு வீல் சேர், ரூ.594/- மதிப்பிலான எல்போ ஊன்றுகோல், ரூ.15,750/- மதிப்பிலான சக்கர நாற்காலி என மொத்தம் ரூ.36,789/- மதிப்பிலான உதவி உபகரணங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவி...