Skip to main content

Posts

Showing posts with the label கோரிக்கை

திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டத்தை; 2 திட்டமாக பிரிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் R.சங்கரநாராயணன் பேட்டி

தேனி, டிச.5- திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தேனி-போடி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் போது தேனி மாவட்டத்தின் ரயில் சேவை தேவைகள் குறித்து, டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளபடி, பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். அதனால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் வரை ஒரு திட்டமும், லோயர்கேம்ப்-சபரிமலை என மற்றொரு திட்டமும் என திண்டுக்கல் குமுளி அகல ரயில் திட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து செய்தால் திண்டுக்கல்- லோயர்க...

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., கோரிக்கை

தேனி, நவ.3- நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் 3.12.2025 அன்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசுகையில், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள், மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 6.11.2025 அன்று அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்...

கம்பம் அருகே மணற்படுகை பகுதி முல்லை ஆற்றில் கரை உடைப்பை சரி செய்ய வேண்டும்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஐந்து மாவட்ட தலைவர் மனோகரன், கெளரவ தலைவர் சிவமணி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தில் உள்ள மணற்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு தலைமதகு அமைத்து அங்கிருந்து உத்தமபாளையம் பரவு கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி செய்யப்படுகிறது.  அந்த தலைமதகு அமைந்த இடத்தில் தெற்குப் பக்கத்தில் முல்லைப் பெரியாற்றில் கிழக்கு கரையில் 8 மீட்டர் அகலத்திற்கு, 60 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் வாழை காய்கறிகள், நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.  இந்த சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும். தற்சமயம் அந்த ஆற்றின் கரை உடைந...