Skip to main content

Posts

Showing posts with the label கோரிக்கை

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் வளாக பகுதியில் கழிப்பறை கட்டும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.1- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின் படி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், இந்து எழுச்சி முன்னணி தொழிலாளர் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொருளாளர் நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மொக்கை, ராஜீகண்ணு மற்றும் பூசாரி பேரவை நகர் அமைப்பாளர்  கோவிந்தராஜ் சாமி ஆகியோர்  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி அல்லிநகரம் அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவில் தேனி மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகும் என்றும், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவிலின் ஈசானி மூலையில் (வடகிழக்கு திசை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்....

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜூன் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தேனி, மே.30- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி அவர்களின் ஆணைக்கிணங்க 2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் தற்போது முதல்வர் அவர்கள் விவசாயிகள் சோறு போடும் வயிற்றில் அடித்து உள்ளார். பயிர் கடன் தள்ளுபடி விஞ்ஞான பூர்வமான செயலை விவசாயிகள் மத்தியில் கலங்கத்தை ஏற்படுத்தி விட்டார். ஆகையால் தமிழகம் முழுவதும் மற்றும் தேனி மாவட்டத்தில் 1.6.2026 அன்று திங்கட்கிழமை (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுக்கு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  எனவே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும், அனைத்து அமைப்புகளும் நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு நமது உரிமையே வென்றெடுப்போம். என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார். .............................. நாகராஜ், தலைமை நிருபர் 

தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆற்றுப்பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: கம்பம் எம்.எல்.ஏ-விடம் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை

தேனி, 28- தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களுக்கு தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் மற்றும் வினோரா பவுண்டேசன் இயக்குனர் லென். டாக்டர் வி.ஆர். ராஜன் தேனி மாவட்டத்தில் குடிநீர், நீர்வள பாதுகாப்பு, ஆற்றுப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேனி மாவட்ட மக்களின் எதிர்கால குடிநீர் பாதுகாப்பு, நிலத்தடி நீர் உயர்வு, விவசாய வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட திட்டங்களை தங்களது தலைமையில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 1. “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டம் கிராம ஊராட்சிகளில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும் வகையில் “ஒரு குடம் – ஒரு ரூபாய்” மினரல் வாட்டர் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும். -இந்த திட்டம் ஆந்திரப் பிரதேசத்தில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. -CSR நிதி மூலம் RO குடிநீர் மையங்கள் அமைக்கலாம். -குடிநீரால் பரவும் நோய்கள் குறைய...

தேனி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் (94877 71077) சேவை தொடக்கம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தேனி, மே.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.05.2026) பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கான வாட்ஸ்அப் (9487771077) சேவையை மாவட்ட ரஞ்ஜீத்சிங் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,  பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான புகார்களை எளிதாகவும், விரைவாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையிலும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் வராமல், தங்களது கைப்பேசி மூலமாகவே குறைகளை பதிவு செய்யும் வகையில் புதிய வாட்ஸ்அப் (9487771077) சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் மட்டுமின்றி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இந்த வாட்ஸ்அப் எண்ணிற்கு பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, கழிவுநீர் வடிகால், சுகாதாரம், வருவாய் தொடர்பான பிரச்சினைகள், பொது விநியோக திட்டம், நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகளை புகைப்படம் அல்லது வீடியோக்கள் வடிவில் அனுப்பலாம். பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பி ...

டிஎன்டி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய கோரி: கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத்மிஸ்ராவிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு

தேனி, மே.25- தேனி மாவட்டம், கம்பம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் P.L.A. ஜெகநாத்மிஸ்ரா அவர்களை அவர்களின் இல்லத்தில் சீர்மரபினர் நலச்சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி ஆலோசனையின் பேரில் கம்பம் டி.என்.டி  இளைஞரணி சார்பில்  மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் கெளதம் தலைமையில், மாநில செயலாளர்கள் ஜெயபால், ஜெயக்குமார், கவியரசன், ஐ.டி. விங். நதீஸ்குமார், தேனிமாவட்ட மகளிர் அனி தலைவி வியலட்சுமி, சிறுவர்கள் உள்பட சீர்மரபினர் நலச்சங்கத்தினர் DNT சான்றிதழ் வேண்டி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தமிழகத்தில் 68 சமூகங்களுக்கு கடந்த 1947-க்கு பிறகு டி.என்.டி (Denotified Tribes) என்ற அடிப்படையில் கட்டணமில்லா கல்விச்சலுகை உள்பட சில வளர்ச்சி உரிமைகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1979-ல் ஒரு தவறான அரசாணை (1310) மூலம் அச்சமூகங்களின் வகுப்பு பெயரில் இருந்த பழங்குடி என்று சொல்நீக்கப்பட்டு இச்சமூகங்களின்  உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் பல நிலைகளில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 1998-ம் ஆண்டே தேவர் பேரவை, தலைவர் கலைஞரிடம் மீண்டும் டி.என்.டி (Denotified Tribes) வகுப்பு...

தேனி நகரில் சுகாதாரத்திற்கு ஏங்கும் பொதுமக்கள் : பெரியகுளம் எம்.எல்.ஏ-விடம் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு

தேனி, மே.19- தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து சந்தன மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ-விடம், கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக நான் சேவை செய்து வருகிறேன். தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் சுதந்திரப் பணிகளை மேற்கொள்ள 6 வார்டுகளுக்கு 1 டிவிசன் என்ற முறையில் 5 டிவிசன்கள் உள்ளன. 1 டிவிசனுக்கு  22 முதல் 35 சுகாதார பணியாளர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 பேர்கள் மட்டுமே தூய்மை பணிகளை செய்கின்றனர். இதனால் தூய்மை பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது. அதுபோல சாக்கடைகளில் சூப்பை கழிவுகள் தேங்கி கழிவு நீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திக்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர் மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒரு...

வீரபாண்டி திருவிழாவில் இருந்து வீடு திரும்பிய குடும்பத்தை வழிமறித்து தங்க தாலியை பறிக்க முயற்சி : மர்ம நபர்கள் கைவரிசையால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை தடுக்க வேண்டுமென இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்

தேனி, மே.14- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், தேனி நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத்தலைவர் சிவா, நகர செயலாளர் அழகு பாண்டி ஆகியோர் பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் ஜெ. மகேஷ் அவர்களிடம் நேரில் புகார் ஒன்று மனு அளித்துள்ளனர்.  அந்த மனுவில் தேனி மாவட்டம், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி தேனி நகர துணை செயலாளர் ரெங்கராஜ் ஆகிய நானும், எனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்து விட்டு பெரியகுளம் செல்லும் புதிய பைபாஸ் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தோம். அப்போது போடி விலக்கு ரவுண்டானாவை தாண்டி ஆதிபட்டி பாலம் அருகே வந்த போது, ஒரு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று மர்ம நபர்கள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்து திடீரென இவர்களின் வண்டியை வழிமறித்து கீழே தள்ளி விட்டனர். அதில் வண்டியில் மூன்றாவதாக இருந்த மர்ம நபர், தனது கையில் வைத்திருந்த குறடினால் ரெங்கராஜன் அவர்களின் மனைவி நாகராணி அவர்களின் கழுத்தில் இருந்த சுமார் 7 பவுன் தங்க தாலிக்கொடியை அறுக்க முயன்றுள்ளார். அந்த குறடு கழுத்தில் பட்டதால் கடு...

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போது ஓபிசி/டிஎன்டி வகுப்பையும் சேர்க்க வேண்டும்: தேனி கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு

தேனி, மே.11- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் A.கௌதமன் தலைமையில் மாநில செயலாளர்கள் T. ஜெயக்குமார், K. பிரதாப் மாநில மாணவர் அணி செயலாளர் சீ.கவியரசன், மாநில ஐடி விங் தலைவர் P. நதீஷ்குமார், தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி,  கம்பம் நகர செயலாளர் அஜித்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  ஜாதிவாரி சென்செஸ் கணக்கெடுப்பு என்பது சமத்துவ இந்தியாவை உருவாக்க தேவையான அடிப்படை புள்ளிவிபரம். மக்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வி சமூக நிலை, அரசில் பல வகுப்புக்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிபரங்கள் இல்லாமல் அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றவே முடியாது.  அன்னிய அரசு கூட இப்புள்ளி விபரங்களின் அவசியத்தை உணர்ந்து கடந்த 1872 முதல் 1931 வரை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தி வந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு இப்புள்ளி விபரங்களை இதுவரை எடுக்கமல் இருப்பது ஓபிசி/டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். அரசு ஜாதிவாரி சென்செஸ் கண்ககெடுப்...

தேனியில் தூய்மை பணிகள் தொய்வு: நகராட்சி நிர்வாக அலட்சிய போக்கிற்கு நடவடிக்கை எடுக்க கோரி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு

  தேனி, பிப்.25- தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, நான் மாற்றுத்திறனாளி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக சேவை செய்து வருகிறேன் தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன.  இந்த 33 வார்டுகளுக்கும் சுகாதார பணிகள் மேற்கொள்ள 5 டிவிஷன்கள் உள்ளன. 1 டிவிஷனுக்கு 22 முதல் 25 நபர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 நபர்கள் மட்டுமே தூய்மை பணிகள் செய்கின்றனர். இதனால் தூய்மைப்பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது.  அதுபோல ட்ரைனேஜில் குப்பைக்கழிவுகள் தேங்கி கழிவுநீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர்மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒருமுறை கூட ட்ரைனேஜ் தூர்வாரவில்லை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ட்ரைனேஜ் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. அதுபோல மந்தைக்குளம் கண்மாயில் 5-வது வார்டில் உ...

தேனியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம்

தேனி, பிப்.4- தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் தேனி மாவட்டத்தில் கூட்டமைப்பு சார்பில் தேனி நேரு சிலை பகுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி மற்றும் வருவாய், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்களுக்கு  குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7,850 ரூபாய் வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியதாரர்களுக்கு  கூடுதலாக 10% ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.  சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் தேனி - கம்பம் நெடுஞ்சாலையில...

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஜன.20- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தேனி மாவட்ட தலைவர் செல்லத்துரை, பாரதிய கிஷான் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் பாபு, மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் கொடியரசன், முல்லை சாரல் விவசாய சங்க தலைவர் ராஜா,  தென்னை விவசாயிகள் சங்க வேல்முருகன், கட்சி சார்பற்ற விவசாய சங்க சிவனாண்டி உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி மற்றும் கூட்டுறவு சங்க அணி செயலாளர் குப்புசாமி உள்பட 9 பேர் மீது சட்டவிரோதமாக பொய் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு  கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி பண்ணை விவசாயிகளை ஒருங்கிணைத்து கறிக்கோழி உற்பத்தி கூலி உயர்வு தொடர்...

தேனி நகர மக்களின் கனவு நினைவானது; மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படகு சவாரி திட்டத்திற்கான பூஜை:

தேனி, டிச.26- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் ரூ.7.40 கோடி மதிப்பீட்டில் படகுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை பல ஆண்டுகளாக வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் 26.12.2025 அன்று மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகளுக்கான பூஜையை தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் முன்னிலையில் தொடங்கி வ...

தமிழகத்தில் மது குடிக்க உரிமம் இல்லாதவர்களுக்கு; மது விற்க தடை கோரி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் தேனி கலெக்டரிடம் மனு

தேனி,டிச.23- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் கவுதமன் தலைமையில், மாநில செயலாளர்கள் ஜெயபால்,ஜெயக்குமார் ,மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி,  மாவட்ட இளைஞரணி செயலாளர் அபினேஷ், இளைஞரணி நிர்வாகிகள் விருமாண்டி, சூர்யபிரகாஷ், நவீன், நதீஷ்குமார் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனங்கள் மது குடிக்க உரிமம் இல்லாதவர்களுக்கு மது விற்க அதிகாரமில்லை. தமிழகத்தில் மதுவிலக்கு சட்டம் 1937 முதல் (1971 முதல் 1974 ஆண்டுகள் தவிர) தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. அந்த சட்டத்தின் விதிகளின் படி மதுவை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்தவதற்கும், உபயோகப்படுத்துவதற்கும், முறையான உரிமம் அவசியம். சரத்து 16-ன்படி விதிவிலக்காக மருத்துவம், அறிவியல், தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக மட்டும் மதுவை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்துவதற்கு உரிமம் வழங்க அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும், எதற்காகவும் எந்த விதி விலக்கும் அளிக்க சட்டத்தில் இடமில்லை. இந்த நிலையில...

திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டத்தை; 2 திட்டமாக பிரிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் R.சங்கரநாராயணன் பேட்டி

தேனி, டிச.5- திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தேனி-போடி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் போது தேனி மாவட்டத்தின் ரயில் சேவை தேவைகள் குறித்து, டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளபடி, பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். அதனால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் வரை ஒரு திட்டமும், லோயர்கேம்ப்-சபரிமலை என மற்றொரு திட்டமும் என திண்டுக்கல் குமுளி அகல ரயில் திட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து செய்தால் திண்டுக்கல்- லோயர்க...

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., கோரிக்கை

தேனி, நவ.3- நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் 3.12.2025 அன்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசுகையில், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள், மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 6.11.2025 அன்று அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்...

கம்பம் அருகே மணற்படுகை பகுதி முல்லை ஆற்றில் கரை உடைப்பை சரி செய்ய வேண்டும்: பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங்கிடம் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஐந்து மாவட்ட தலைவர் மனோகரன், கெளரவ தலைவர் சிவமணி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, கம்பம் அருகே சுருளிப்பட்டி கிராமத்தில் உள்ள மணற்படுகை பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து தண்ணீர் பிரிக்கப்பட்டு அப்பகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு தலைமதகு அமைத்து அங்கிருந்து உத்தமபாளையம் பரவு கால்வாய், பி.டி.ஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி செய்யப்படுகிறது.  அந்த தலைமதகு அமைந்த இடத்தில் தெற்குப் பக்கத்தில் முல்லைப் பெரியாற்றில் கிழக்கு கரையில் 8 மீட்டர் அகலத்திற்கு, 60 மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சுமார் 100 ஏக்கரில் வாழை காய்கறிகள், நெல் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.  இந்த சேதத்தின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சத்திற்கு மேல் இருக்கும். தற்சமயம் அந்த ஆற்றின் கரை உடைந...