Skip to main content

Posts

Showing posts with the label கோர்ட்டு

தேனியில் தூய்மை பணிகள் தொய்வு: நகராட்சி நிர்வாக அலட்சிய போக்கிற்கு நடவடிக்கை எடுக்க கோரி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் கவுன்சிலர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு

  தேனி, பிப்.25- தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தேனி அல்லிநகரம் நகராட்சி 5-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணபிரபா அய்யப்பன் கோரிக்கை மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, நான் மாற்றுத்திறனாளி, தேனி அல்லிநகரம் நகராட்சியில் 5-வது வார்டு நகர்மன்ற உறுப்பினராக சேவை செய்து வருகிறேன் தேனி நகரில் 33 வார்டுகள் உள்ளன.  இந்த 33 வார்டுகளுக்கும் சுகாதார பணிகள் மேற்கொள்ள 5 டிவிஷன்கள் உள்ளன. 1 டிவிஷனுக்கு 22 முதல் 25 நபர்கள் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால் 1 டிவிஷனுக்கு 7 முதல் 10 நபர்கள் மட்டுமே தூய்மை பணிகள் செய்கின்றனர். இதனால் தூய்மைப்பணிகள் மிகவும் தொய்வுடன் நடைபெறுகிறது.  அதுபோல ட்ரைனேஜில் குப்பைக்கழிவுகள் தேங்கி கழிவுநீர் பொதுமக்கள் நடக்கும் சாலையில் செல்கிறது இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நான் நகர்மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதில் இருந்து ஒருமுறை கூட ட்ரைனேஜ் தூர்வாரவில்லை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ட்ரைனேஜ் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. அதுபோல மந்தைக்குளம் கண்மாயில் 5-வது வார்டில் உ...

இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைப்பு: தேனி கோர்ட்டில் வக்கீல்கள் MKM முத்துராமலிங்கம் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தேனி, ஜன.7- தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை  நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில் இ-பைலிங் நடைமுறையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனை கொண்டாடும் வகையில் தேனி மாவட்ட கோர்ட்டில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமையில் வழக்கறிஞர் மற்றும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  இந்நிகழ்வின் போது வக்கீல்கள் செல்வன், பாண்டி மணி உள்பட வக்கீல்கள் பலர் உடனிருந்தனர். ........................ நாகராஜ், தலைமை நிருபர்