Skip to main content

Posts

Showing posts with the label ஆன்மீகம்

இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோலாகலமாக நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தேனி, ஆக.28- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  இதில் தலைமை விநாயகர் சிலை தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்.ஆர் வல்கனைசிங் கடை முன்பு வைத்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் 28.8.2025 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ப...

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500 சிலைகள் வைத்து வழிபாடு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தேனி, ஜூலை.27 - தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் 10-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் தேனி வசந்த மஹாலில் 27.7.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மாய லோகநாதன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி கலந்து கொண்டு இந்து எழுச்சி முன்னணி இயக்கம் தொடங்கப்பட்ட விதம், கடந்து வந்த பாதைகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கமிட்டி  பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் விழாவில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி நன்றி கூறினார்.  ...

கிருஷ்ணன்கோவில் கே.புதூரில் உள்ள ஸ்ரீ தாண்டாய் என்ற சீலக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு திருவிழா: ஆகஸ்ட் 8-ந் தேதி நடக்கிறது

  மதுரை, ஜூலை.18-  விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீ வில்லிப்புத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவில் அருகில் உள்ள K. புதூரில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ தாண்டாய் (என்ற) சீலக்காரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழா நிகழும் மங்களகரமான விசுவாவசு வருடம், தக்ஷனாயின காலம் கிரீஷ்மருதோ ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி (ஆடி மாதம் 23-ம் தேதி) சிறப்பான ஆடி வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியும், திருவோண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் நடைபெறுகிறது. K. புதூரில் நம் குலத்தில் உதயமான பெண் தெய்வம் நம்மைக் காக்கும் தாண்டாய் (எ) சீலக்காரி அம்மன் சிறப்பு வழிபாடு பெருந்திருவிழாவில் இருளப்பசுவாமி பங்காளிகள், சீலக்காரி வழியில் வந்த பெண் மக்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அனைவரும் வருகைதந்து அம்மன் அருள் பெற்று இல்லற வாழ்வு சிறக்க அன்புடன் அழைக்கின்றோம். இந்த பெருந்திருவிழா ஆடி 23-ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு மேல் சீலக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 9.8.2025  ஆடி 24-ம் தேதி சனிக்கிழமை காலை உணவுடன் அம்...

தேனி அருகே 2 சமுதாயங்களுக்கு சொந்தமான கோவிலை அபகரிக்க முயலும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, மே.28- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் கட்சியினர் மற்றும் 2 சமுதாய பொதுமக்கள் 27.5.2025 அன்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள ஊஞ்சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த நாயுடு சமுதாய பொதுமக்கள், மற்றும் வாணிய செட்டியார் சமுதாய பொதுமக்கள் இணைந்து கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய காளியம்மன் கோவிலை, 2 சமுதாய மக்களும் இணைந்து கடந்த 500 ஆண்டுகளாக பராமரித்து வந்த நிலையில், ஆண்டுதோறும் பொதுமக்களிடம் வரி வசூல் செய்து திருவிழா நடத்தியதுடன், கோவிலையும் பராமரிப்பு செய்து வருகின்றனர்.  இந்த கோவிலுக்கு சொந்தமாக அன்னஞ்சி விலக்கு பகுதியிலும், ஊஞ்சாம்பட்டியிலும் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில் சென்னையில் பல ஆண்டுகளாக இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் திடீரென தேனிக்கு வந்த கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் இந்த கோவில் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த கோவிலுக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார். மேலும் கிராம மக்களின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பு இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு ...

தேனி சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவில் அன்னதானம்

  தேனி, மே.16- தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 40-வது ஆண்டு சித்திரை திருவிழா 13.5.2025 முதல் 15.5.2025 வரை 3 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு தொழிலதிபர் கண்ணன் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ராமசாமி, ஏ.சி.வி. மில் சந்திரசேகரன், இன்ஜினியரிங் காண்ட்ராக்டர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலதிபர் ஆர.என். குரூப் மணிவண்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.  விழாவில் தேனி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், ரியல் எஸ்டேட் சாம்சங் ஷோரூம் டெர்ரி, தொழிலதிபர்கள் பாலசங்கா குரூப் குமரேசன், சந்திரகுமார், தெய்வா ஹோட்டல் பால்பாண்டி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சர்ச்சில், அம்பை இளங்கோ, லோகநாதன், மோகன் குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் காசிமாயன், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன், தேனி மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு ஆப்பிள் முருகன், தொழிலதிபர் விஷுவல் பிரபு, தொழிலதிபர் டுடே ஃபேஷன் சக்தி உள்பட நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். திருவிழாவை முன்னிட்டு குத்துவிள...

வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேர் நிலைக்கு வந்தது: பேரூராட்சி மண்டகப்படியில் சேர்மன் கீதா சசி உள்ளிட்டோருக்கு மரியாதை

தேனி, மே.13 - தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி (இன்றுடன்) முடிவடைகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அப்போது தேர் நிலையில் இருந்து கோவில் முன்பு வரை இழுத்து வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கும் தேர் இழுத்து வரப்பட்டு கோவில் பகுதியை சுற்றி நேற்று தேர் நிலைக்கு வந்தடைந்தது. இந்நிகழ்வுக்கு முன்னதாக வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே மண்டகப்படி நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பேரூராட்சி சேர்மன் கீதா சசி, செயல் அலுவலர் கணேசன்,  பேரூராட்சி கிளார்க் வாசிமலை,  உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் மணிமாறன், வீரபாண்டி பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து மண்டகப்படி நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாத...

கூடலூர் பளியன்குடி வழியாக கண்ணகி கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் 5 லிட்டர் தண்ணீர் கேன், வரலாற்று புத்தகம் வழங்கல்

தேனி, மே.12- தமிழக கேரளா எல்லை மலை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை பௌர்ணமி (முழு நிலவு)  விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சித்திரை முழு நிலவு விழா 12.5.2025 அன்று நடைபெற்றது.  இந்த விழாவை முன்னிட்டு மலைப்பகுதியில் உள்ள கண்ணகி கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.  இந்த விழாவைக்கான தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குமுளி மலை பாதை வழியாக நடந்தும், ஜீப் வாகனங்களில் சென்றும் அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோன்று கம்பம் ஊராட்சி ஒன்றியம், கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள பளியன்குடி மலைப்பாதை வழியாக பக்தர்கள் அதிகாலை முதல் நடந்து சென்று மலைப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி அம்மனை தரிசனம் செய்தனர்.  இந்த பளியன்குடி மலைப்பாதை வழியாக செல்லும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் ஆலோசனையின்படி தேனி மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்...

தேரோட்ட விழாவில் முதல் மரியாதை செய்யவில்லை; வீரபாண்டி பேரூராட்சி தலைவர் தரப்பினர் அறநிலையத்துறை ஊழியர்கள் மீது தாக்குதல்:? இந்து எழுச்சி முன்னணி கண்டனம்

  தேனி, மே.10 இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட தலைவர் இராமராஜ் ராமராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கையில், தேனி மாவட்டம், வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் 9.5.2025 அன்று நடைபெற்றது. இந்த தேரோட்ட விழாவில், வழக்கம் போல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டன. ஆனால் அன்று மாலை 6 மணி அளவில், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு, வீரபாண்டியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்குள் அனுமதி இல்லாமல் புகுந்து, அங்கு கோயில் பணிகளில் ஈடுபட்டிருந்த உதவி ஆணையாளர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை மிரட்டி, “தனக்கு முதல் மரியாதை செய்யவில்லை” என்ற காரணத்தால் 2 அரசு ஊழியர்களை தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்வு அங்கு பணியாற்றும் அரசு ஊழியர்களிடையே கடும் மன வேதனையையும், பயத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்ற கொடூரமான தாக்குதல்களை இந்து எழுச்சி முன்னணி மாவட்டம் கடுமையாக கண்டிக்கிறது. இத்தகைய சட்டவிரோத செயலில்...

வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் : கலெக்டர் பாரம்பரிய உடையில் பங்கேற்று தொடங்கி வைத்தார்

தேனி, மே.10- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி வருகின்ற 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் 9.5.2025 அன்று நடைபெற்றது. இந்த விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வந்து தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மன் கோஷத்துடன் தேர் வடத்தை பிடித்து இழுத்து தேர் நிலையில் இருந்து கோவில் வாசல் முன்பு நிறுத்தினர். இதன் பின்னர் இந்த தேர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையில் நிறுத்தப்பட்டு கோவில் பகுதியை சுற்றி வருகின்ற 12-ந் தேதி (திங்கட்கிழமை) தேர் நிலையை வந்தடையும். இந்த தேரோட்ட நிகழ்வில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, தேனி உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா,  கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதாசசி, செயல் ...

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவிலில் சித்திரை திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தேனி, ஏப்.14- தேனி அல்லிநகரம் பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந் தேதி அன்று காவடி திருவிழா என்று அழைக்கப்படும் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த மாதம் 29-ம் தேதி மலைக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதற்கிடையே திருவிழாவில் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் பங்குனி 1-ம் தேதி முதல் விரதம் இருந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து சித்திரை திருவிழாவை முன்னிட்டு வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் மின் அலங்காரத்தில் காவடிகள் ஊர்வலத்துடன் நேற்று மாலை அல்லிநகரம் பகுதியில் உள்ள கோவிலில் இருந்து புறப்பட்டு தேனி நகர் வழியாக பங்களா மேடு பகுதியில் உள்ள சோலைமலை அய்யனார் கோவிலை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை அடுத்து இன்று வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் மலர் அலங்காரத்தில் காவடிகளுடன் புறப்பட்டு செண்டா மேளம், தாரை தப்பட்டையுடன் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சுற்றி பிற்பகலில் மலைக்கோ...