Skip to main content

Posts

Showing posts with the label ஆன்மீகம்

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் வளாக பகுதியில் கழிப்பறை கட்டும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.1- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின் படி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், இந்து எழுச்சி முன்னணி தொழிலாளர் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொருளாளர் நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மொக்கை, ராஜீகண்ணு மற்றும் பூசாரி பேரவை நகர் அமைப்பாளர்  கோவிந்தராஜ் சாமி ஆகியோர்  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி அல்லிநகரம் அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவில் தேனி மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகும் என்றும், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவிலின் ஈசானி மூலையில் (வடகிழக்கு திசை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்....

தேனி தட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு

தேனி,மே.27- நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு 26.5.2026 அன்று வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி ஆனார். இந்த குரு பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு  தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வேதபுரி, ஸ்ரீ ஸ்வாமி சித்பவானந்த ஆசிரமத்தில் அமைந்திருக்கும்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோவிலில் நடைபெற்றது. இந்த குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடுக்கு ஸ்ரீ சமனாந்த சுவாமிகள் தலைமை தாங்கினார். இதில் ஸ்ரீ குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் போது ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ தேவகுரு ஹோமம் செய்து ஸ்ரீ தேவகுரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்து புஷ்பாஞ்சலி, கூட்டு வழிபாடு, ஆதிகுருவுக்கும், தேவகுருவுக்கும் ஷோடச உபசார பூஜைகள் மகாதீபாரதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரமம் நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தட்சிணமூர்த்தி மற்றும் உற்சவர் குருபகவானை தரிசனம் செய்தனர். குருபூஜை சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. ...............................

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் 8 நாள் சித்திரை திருவிழா : பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குலாலர் சமுதாயம் சார்பில் மண்டகப்படி

தேனி, மே.19- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. 8  நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து, திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த எந்திர ராட்டினங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை கண்டுகளித்தனர்  அதுபோல அம்மனுக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி, மாவிளக்கு சேத்தாண்டி வேஷம், கிடா வெட்டுதல் போன்ற நேர்த்தி கடனை இரவு பகலாக நிறைவேற்றினர். இந்த திருவிழாவின்போது முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 15-ந் தேதி நடைபெற்றது. அப்போது தேர் நிலையில் இருந்து கோவில் முன்பு வரை இழுக்கப்பட்டது. இதன் பின்னர் தெற்கு ரத வீதி,  மேற்கு ரத வீதி என தேர் என ஒவ்வொரு நாளும் இழுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தேர் மேற்கு ரத வீதியில் நிற்க வைக்கப்பட்டிந்து. அப்போது வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டது....

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் : கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்

  தேனி, மே.16- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா கடந்த 12.5.2026 அன்று வெகு விமர்சையாக தொடங்கப்பட்டு 19.5.2026 வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதுபோல தீச்சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி எடுத்தல் கிடா வெட்டுதல் போன்ற நேர்த்திக்கடனை இரவு பகலாக செலுத்தி வருகின்றனர்.  இதேபோன்று திருவிழாவிற்கு வந்து செல்லும் பக்தர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகையான எந்திர ராட்டினங்கள் மற்றும் கடல் கன்னி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் கண்டு திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். இந்த திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் அம்மனை தரிசித்து விட்டு, திருவிழா பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு செல்லும் வரை ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ப...

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவில் முழு நிலவு சித்திரை திருவிழா : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

  தேனி, மே.2- தேனி மாவட்டம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோவில் முழு நிலவு சித்திரை திருவிழா தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 1.5.2026 நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டனர்.  மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதிகாலையில் பொங்கல் வைக்கப்பட்டு, பசுமையை குறிக்கும் வகையில் மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு சாத்தப்பட்டு வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்கார பொருட்கள் கொண்டு சிறப்பான முறையில் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கண்ணகி தேவியினை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதிகள், இரண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பளியன்குடி வழியாக கோவிலுக்கு நடந்துவரும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் கருதி வழி நெடுகிலும் ஆங்காங்கே ம...

தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில்; ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

தேனி, ஏப்.29- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா மே 12-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் நடத்துவதற்கான ஏலத்தை சதீஷ் என்பவர் ரூ.2 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து எந்திர ராட்டினம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு 29.4.2026 அன்று வீரபாண்டி கோவில் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் சக்தி, ராட்டினம் ஏலதாரர் சதீஷ், முக்கிய பிரமுகர்கள் கிருஷ்ணன், பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து உணவு கூடம் அமைக்க ஏலம் எடுத்த இடத்திலும் பூமி பூஜை மற்றும் முகூர்த்த கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த பூமி பூஜைக்கான ஏற்பாடுகளை ஏலதாரர் தரப்பபை சேர்ந்தவர்கள் செய்திருந்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

போடி பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு கொடிமரம் ஊன்றும் பூஜை: தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்திருக்கும் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி  9.4.2026 அன்று நடைபெற்றது. போடி நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர்   கோவிலில் இருந்து  கொடிமரம்  சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கொடி மர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.  அதனைத்தொடர்ந்து கிரிவல பாதையில் கொடிமரம் மலைக் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கிரிவல பாதையில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஜுப்பில் மலைக்கோவிலுக்கு சென்று பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.  இந்நிகழ்ச்சியில் போடி ஜமீன்தார் வடமலை ராஜையபாண்டியன், தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்,பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், போடி நகர் த...

தேவதானப்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பெருந்திருவிழா

தேனி, நவ.5-  தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி  தெற்கு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்களால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில்  வெகு விமர்சையாக கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவான அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவ பெருந்திருவிழா நவம்பர் 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாட15 நாட்கள் கெடு விதித்து  திருவிழா சாட்டுதல் நிகழ்வு அனைத்து சமுதாயத்தினர் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தேவதானபட்டியில் 18 பட்டி மக்களும் கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழா ஆண்டுதோறும்  கொண்டாடப்பட்டு வருகின்றது . இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் புல்லக்காப்பட்டி பகுதியில் சாமி சிலை செய்யும் நபர்கள் பல நாட்கள் விரமிருந்து மண்ணால் ஸ்ரீ முத்தாலம்மன் சிலையை உருவாக்கி அதனை  மூன்று நாட்கள் வைத்து வழிபட்டு பின்பு தண்ணீரில் கரைத்து விடுகின்றனர்.   நவ 5-ம் தேதி முதல் நாள் திருவிழாவில்  இரவு புல்லக்காப்பட்டி பகுதியில் இருந்து சாமி சிலையை மேளதாளங்கள் வான வேடிக்கை நிகழ்வுடன்  எடுத்து வந்து தேவதான...

இந்து எழுச்சி முன்னணி சார்பில் கோலாகலமாக நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தேனி, ஆக.28- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேனி நகர் மற்றும் தேனியை சுற்றி உள்ள பகுதிகளில் 3 அடி முதல் 10 அடி வரையிலான 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.  இதில் தலைமை விநாயகர் சிலை தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள எம்.ஆர் வல்கனைசிங் கடை முன்பு வைத்து கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி உள்பட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.  இதனைத்தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் 28.8.2025 அன்று நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராம்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ப...

தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 500 சிலைகள் வைத்து வழிபாடு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு

தேனி, ஜூலை.27 - தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் 10-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் தேனி வசந்த மஹாலில் 27.7.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் மாய லோகநாதன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, தேனி நகர தலைவர் சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் பொன் ரவி கலந்து கொண்டு இந்து எழுச்சி முன்னணி இயக்கம் தொடங்கப்பட்ட விதம், கடந்து வந்த பாதைகள் மற்றும் வருங்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கமிட்டி  பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் விழாவில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் தேனி மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்வது என முடிவு செய்யப்பட்டது. முடிவில் தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி நன்றி கூறினார்.  ...