தேனி, நவ.5- தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி தெற்கு தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்களால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவான அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவ பெருந்திருவிழா நவம்பர் 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாட15 நாட்கள் கெடு விதித்து திருவிழா சாட்டுதல் நிகழ்வு அனைத்து சமுதாயத்தினர் முன்னிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. தேவதானபட்டியில் 18 பட்டி மக்களும் கொண்டாடும் முக்கிய திருவிழாவாக அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது . இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் என்னவென்றால் புல்லக்காப்பட்டி பகுதியில் சாமி சிலை செய்யும் நபர்கள் பல நாட்கள் விரமிருந்து மண்ணால் ஸ்ரீ முத்தாலம்மன் சிலையை உருவாக்கி அதனை மூன்று நாட்கள் வைத்து வழிபட்டு பின்பு தண்ணீரில் கரைத்து விடுகின்றனர். நவ 5-ம் தேதி முதல் நாள் திருவிழாவில் இரவு புல்லக்காப்பட்டி பகுதியில் இருந்து சாமி சிலையை மேளதாளங்கள் வான வேடிக்கை நிகழ்வுடன் எடுத்து வந்து தேவதான...
News, Agri, Devotional, Political, Education, Sports, Development, Gerivence, Crime, Environmental, Technology, Information, Awareness, Festival,