Skip to main content

வீரபாண்டி கெளமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேர் நிலைக்கு வந்தது: பேரூராட்சி மண்டகப்படியில் சேர்மன் கீதா சசி உள்ளிட்டோருக்கு மரியாதை

தேனி, மே.13-

தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி (இன்றுடன்) முடிவடைகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

அப்போது தேர் நிலையில் இருந்து கோவில் முன்பு வரை இழுத்து வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திற்கும் தேர் இழுத்து வரப்பட்டு கோவில் பகுதியை சுற்றி நேற்று தேர் நிலைக்கு வந்தடைந்தது.
இந்நிகழ்வுக்கு முன்னதாக வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சி அலுவலகம் அருகே மண்டகப்படி நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பேரூராட்சி சேர்மன் கீதா சசி, செயல் அலுவலர் கணேசன்,  பேரூராட்சி கிளார்க் வாசிமலை,  உள்ளிட்டோருக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் மணிமாறன், வீரபாண்டி பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து மண்டகப்படி நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 
..............................
நாகராஜ், தலைமை நிருபர் 


Comments