Skip to main content

Posts

Showing posts with the label ஆய்வு

தேனி மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் : மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஆய்வு

தேனி, மே.14- தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சிப்பகுதியில் இன்று (14.5.2026) நீர்வளத்துறையின் சார்பில் மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்தின் தலைநகராக உள்ள தேனி நகரின் பொழுதுபோக்கு அம்சத்திற்காகவும், பொதுமக்கள் நடைபயிற்சி செய்வதற்காகவும் மீறு சமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி பாதை மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றதை தொடர்ந்து, மீறுசமுத்திரம் கண்மாயில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.7.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மீறுசமுத்திரம் கண்மாயின் கரையை பலப்படுத்துதல், நடைபாதை, பூங்கா, தடுப்புச் சுவர், படகுகள் நிறுத்துமிடம், நுழைவுவாயில், அலுவலக கட்டிடம், பாதுகாவலர் அறை, நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை, சாய்வுதளம், அமரும் மேடை, உணவுக்கூடம் மற்றும் பாலம் அமைத்தல் மேலும், ஆகாய தாமரை அகற்றுதல், மரங்கள் நடுதல், பறவைகள் தீவு அமைத்தல், கண்...

தேனி மாவட்டத்தில், தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு முகாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் அதிகாரிகள் பார்வையிட்டனர்

தேனி, மே.9- தேனி மாவட்டம், ஆயுதப்படை மைதானத்தில் தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா முன்னிலையில் 9.5.2026 அன்று அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, தீயணைப்புத்துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 47 பள்ளிகளில் (தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி தாலுகா)  உள்ள 380 வாகனங்களில் 297 பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் பணிகள் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது, பள்ளி வாகனத்தில் அவசர கால வழி (EmergencyExit Doori முதலுதவி பெட்டி, ஏறி இறங்கும் படிக்கட்டுகள், தீயணைப்பான் கருவி, வாகனத்தின் தரை பலகை (Plot form), கண்காணிப்பு கேமரா உள்புறம் மற்றும் வெளிப்புறம், அவசர கால தொலைப்பேசி எண்கள் ஆகியன முறையாக உள்ளதா என்றும் மேலும் வேக கட்டுப்பாட்டுக்கருவி வாகனத்தின் பிரேக்கின் திறன் போன்றவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாவட்ட கலெக்...

தேனியில் SIR பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை BLO'S மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டார்

தேனி, டிச.13- தேனி மாவட்டம். தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் இன்று (13.12.2025), வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் தொடர்பாக வாக்காளர்களின் கணக்கிட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மறு ஆய்வு மேற்கொள்வதை மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைமுறைக்கு வரப்பெற்று. தேனி மாவட்டத்தில் உள்ள 198.ஆண்டிபட்டி, 199.பெரியகுளம், 200.போடிநாயக்கனூர், 201கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 4:112025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (Booth Level Officer) இல்லம் தோறும் சென்று. கணக்கெடுப்பு படிவம் விநியோகம் செய்யப்பட்டு, வாக்காளர்களால் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலானது 19.12.2025 அன்று வெளியிடப்பட உள்ளது. அதனடிப்படையில் இன்று தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட இரட்டை பதிவு, இடம் பெயர்த...