Skip to main content

Posts

Showing posts with the label க்ரைம்

கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை போதை தடுப்பு போலீசார் மோப்ப நாயுடன் சோதனை

கோவை, செப்.16- போதை பொருள்களை ரயில்களில் கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் விதமாக தொடர் சோதனையில் ஈடுபட்ட  கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில் நிலையங்களில், ரயில்களில் வரும் நபர்களின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தினர் , போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் உத்தரவு படி ஆய்வாளர் குமரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசாரும் ரயில்வே ஸ்டேசனில் மோப்ப நாய் டைகர் உடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இதில் ஒடிசா, ஆந்திரா வழியே வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் பெட்டிகளில்  ஏறி சோதனையிட்டனர், அதே போன்று பிளாட் பார்த்திலும் இருந்த பயணிகளின் உடமைகளை மோப்ப நாயுடன் பரிசோதனை செய்தனர். மேலும் தன்பாத் ரயிலில் ஏறி சோதனை செய்ததில் 4 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் ஒடிசா, ஆந்திராவிலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணித்து பிடித்து வருகிறோம், கடந்த எட்டு மாதங்களில் 300 கிலோ கஞ்சாவையும் மற்றும் அதனை கடத்தி வந்த 20 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைந்துள...

தங்கக்கட்டிக்கு பணம் தருவதாக கூறி ஏமாற்றிய மோசடி கும்பலை கைது செய்த கோவை போலீசார்: சினிமாவை மிஞ்சிய சம்பவம் நடந்தது என்ன.?

கோவை, செப்.14- சதுரங்க வேட்டை சினிமா காட்சியில் வரும் வசனம் போல ஒருத்தனை ஏமாற்றுனும்னா, முதல்ல அவன் ஆசையை தூண்டனும் என்பது போல ஒரு சம்பவம், கோவையில நடந்து இருக்கு, எங்க எப்படிங்கறத சொல்றேன்,  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ஹரிசங்கர் என்பவர் நகை வியாபாரம் செய்து வருகிறார். தங்கம் விற்பதை அறிந்து கொண்ட மர்ம நபர், அவரது செல்போனுக்கு தன்னை  சந்திரசேகர் என அறிமுகபடுத்தி கொண்டு, ஹரிசங்கரிடம் செல்போனில் முதலில் அன்பாக, பணிவாக பேசியவர், தன்னிடம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து அதிகமா பணம் இருப்பதாகவும் அந்த பணத்தை, அதற்கு பதிலாக தங்க கட்டிகளாக வாங்கலாம் என்று கருதுகிறேன் எனவே உங்களிடம் தங்க கட்டிகள் இருப்பதை அறிந்தேன். அதனை நீங்கள் விற்பதாக இருந்தால் தங்கத்தை என்னிடம் தாருங்கள் நான் அதற்கு  பணமாக தருகிறேன் என்று சந்திரசேகரன் ஆசை வார்த்தைகளில் பேசியுள்ளார்.  இதனை உண்மை என்று நம்பிய  ஹரிசங்கர், நீங்க விரும்பும் தங்கத்தை தருகிறேன் அதற்கு பணம் உடனடியாக தரவேண்டும் என கூறியுள்ளார். சரி என கூறிய நபரிடம், ஹரிசங்கர் தன்னிடம் ஒரு கிலோ தங்கம் கட்டியாக இருப்பதாகவும், அதற்கு இவ்வ...

ஆன்லைனின், போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஹரியானா மருந்து தயாரிப்பாளர் கைது: ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலான மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார்

கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து கல்லூரி வாசல், மால்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும், போதைக்காக கஞ்சா சாக்லெட், போதை மாத்திரை, ஊசிகள் விற்கபடுவதாக வந்த ரகசிய தகவல்களை அடுத்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கபட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதனைத்தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களையும் கண்காணித்து வந்தனர், இந்த நிலையில் சந்தேகப்படும் படியான வகையில் மாநகர் பகுதிகளில் சுற்றிய திரிந்த நபர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்களிடம் இருந்து கடந்த மூன்று மாத தேடுதலில் சுமார் 158 கிலோ கஞ்சா, 2598 கிலோ குட்கா பொருட்கள், கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள், வலி நிவாரணத்திற்கு பயன்படுத்த படும் ஊசிகளை போதை ஊசிகள் என  விற்பனை செய்ததை கண்டு பிடித்தனர்.  அதனை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களில், தொடர்ந்து  போதைப் பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் ஈடுபட்ட பெண் உட்பட 19 நபர்கள் மீது குண்டாஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்,       இந்நிலையில் பல்வேறு நபர்களில் சேகரிக்கப்பட்ட தகவல்...

தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்தில் தொலைந்து போன 156 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் டி.ஐ.ஜி., அபிநவ்குமார் ஒப்படைத்தார்

தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைக்கப்பெற்ற புகாரின் படி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு சார்பு ஆய்வாளர் உமாதேவி தலைமையிலான காவல் துறையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் 16,00,000/- மதிப்புள்ள 156 செல்போன்களை 11.8.23 அன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அபிநவ்குமார் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர்களால் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது  மேலும் கடந்த 7 மாதங்களில் மட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினரால் சுமார் 70,00,000/- மதிப்புள்ள 668 செல்போன்கள் மீட்கப்பட்டு அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர் R.ராதாகிருஷ்ணன், நிருபர்