ஆன்லைனின், போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஹரியானா மருந்து தயாரிப்பாளர் கைது: ரூ.60 லட்சம் மதிப்பீட்டிலான மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார்
கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இளைஞர்களை குறிவைத்து கல்லூரி வாசல், மால்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும், போதைக்காக கஞ்சா சாக்லெட், போதை மாத்திரை, ஊசிகள் விற்கபடுவதாக வந்த ரகசிய தகவல்களை அடுத்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கபட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களையும் கண்காணித்து வந்தனர், இந்த நிலையில் சந்தேகப்படும் படியான வகையில் மாநகர் பகுதிகளில் சுற்றிய திரிந்த நபர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்களிடம் இருந்து கடந்த மூன்று மாத தேடுதலில் சுமார் 158 கிலோ கஞ்சா, 2598 கிலோ குட்கா பொருட்கள், கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள், வலி நிவாரணத்திற்கு பயன்படுத்த படும் ஊசிகளை போதை ஊசிகள் என விற்பனை செய்ததை கண்டு பிடித்தனர்.
அதனை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களில், தொடர்ந்து போதைப் பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் ஈடுபட்ட பெண் உட்பட 19 நபர்கள் மீது குண்டாஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்,
இந்நிலையில் பல்வேறு நபர்களில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் கர்நாடக வழியாக வடமாநிலமான ஹரியானா, ஜீப்பிலியில் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் உரிமையாளர், சச்சின் கர்க் (வயது 41) என்பவரின் நடவடிக்கைகளை கண்காணித்து, அவர் இருப்பிடத்தில் ஆன்லைன் மூலம் விற்பனைக்காக வைத்து இருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20.000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்து அவரை, கோவைக்கு அழைத்து வந்து விசாரணையின் அடிப்படையில் போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து கோவை மாநகர் காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், பெண்கள் மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தபடும் வலி நிவாரண மாத்திரைகளை, போதைக்காக, அதனை ஊசியில் போதைக்காக சில இளைஞர்கள் ஈடுபட்டதை தனிப்படை போலீசார் விசாரணை செய்து அவர்கள் தந்த தகவல்கள் அடிப்படையில் கர்நாடகாவில் மாத்திரைகளை விற்ற வியாபாரிகளை பிடித்து விசாரிக்கையில் ஹரியானா மாநிலம், ஜீப்பிலியில் மருந்து, மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வந்த சச்சின் கர்க் என்பவர், அங்கே விற்பனைக்கு வைத்து 20.000 மாத்திரைகளை கைப்பற்றி, வழக்கு பதிவு, சிறையில் அடைக்கபட்டார், தொடர்ந்து கோவையில் இதுபோன்று போதை பொருட்கள் வைத்து விற்க முயன்ற நபர்களை கைது செய்து இதில் 19 நபர்கள் தொடர் குற்றத்தின் அடிப்படையில் அவர்கள் மீது குண்டாஸ் போடபட்டு சிறையில் உள்ளனர் என்றார்.
தொடர்ந்து மாநகர் பகுதியில் போதை மாத்திரை, மற்றும் இதர பொருட்களை போதைக்காக விற்க முயலும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
சீனிவாசன், உதவி ஆசிரியர்
Comments