Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

தேனி பழனிசெட்டிபட்டியில் த.வெ.க அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுக-வினர் கைது

தேனி, ஜூன்.29- தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் சரத்குமார் பொது இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.  இதனை கண்டித்து தேனி திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் த.வெ.க அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் 29.6.2026 அன்று நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணகுமார், மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன், ஒன்றிய செயலாளர் அய்யப்பன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ், பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு, வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக மாணவரணியினர் த.வெ.க அமைச்சர் சரத்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கொண்டே ஊர்வலமாக வந்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு ஊர்வலமாக வந்த திமுக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து திமுக-வினர் சாலையில் அமர்ந்து த.வெ.க அமை...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ‌.க-வில் இணைந்தனர்

தேனி, ஜூன்.26- தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளராக இருந்து வந்த தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ.க-வில் இணைந்தனர். இதற்கான இணைப்பு  26.6.2026 அன்று தமிழக வெற்றிக் கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் அதிமுக பேரூர் நிர்வாகிகள் ரவி ராணி, பாண்டியம்மாள் மாயத்தேவர், சந்திரசேகர், முருகேசன், பவுன்தாய் ஜெயராம், வெற்றிச்செல்வன், சார்பு அணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, முத்துப்பாண்டி, தாணு விக்னேஷ், நவீன்குமார், பாண்டியராஜன், முருகேசன், ரிஷிபாரதி, அகமது ஆரிப், அருண்பண்டியன், ஜெகநாதன், வெள்ளைத்துரை, போஸ் மணிகண்டன் மற்றும் வார்டு செயலாளர்கள் சிவக்குமார், சந்திரா வெற்றிச்செல்வன், ஆசைத்தம்பி, வெங்கடேஷ், முத்தையன், முத்துக்குமரன், அறிவானந்தம், ராஜ பார்த்திபன், முருகேசன், வீரமணி, மணிகண்டன், தேவதாஸ், ரமேஷ், நாகேஸ்வரன், செல்வராஜ் ஆகியோர்  த.வெ.க-வில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்வின் போது தேனி த.வெ.க வடக்கு மாவட்...

தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளர் போடி ஏ.பி.பி ராஜா அழகணன் த.வெ.க-வில் இணைந்தார்

தேனி, ஜூன்.23- தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளராக இருந்த போடி பகுதியை சேர்ந்த ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதற்கான இணைப்பினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களின் முன்னிலையில் ஏ.பி.பி. ராஜா அழகணன் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். த.வெ.க-வில் இணைந்துள்ள ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதல்வர், முன்னாள் நிதியமைச்சர், தமிழக சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர், தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோருக்கு அரசு நேர்முக உதவியாளராகவும், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின்  உதவி மேலாளராகவும் பணியாற்றி  கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ........................... நாகராஜ், தலைமை நிருபர்   செல் - 9842145271

தேனி மற்றும் வடபுதுபட்டியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா : கேக் வெட்டி, சேலை, அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

தேனி, ஜூன்.23- தமிழக வெற்றிக் கழகம் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழா 22.6.2026 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.  இதில்  தேனி நகரில் தெய்வா பால்பாண்டி ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தேனி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள தெய்வா ஹோட்டல் முன்பு அசைவ பிரியாணி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.வெ.க-வை சேர்ந்த தக்காளி சந்திரன், ஜெயமணி, ரவி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தேனி அருகே உள்ள வடபுதுபட்டியில் விஜய் சசிகுமார் ஏற்பாட்டில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் சேலை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தேனி த.வெ.க வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் த.வெ.க வடபுதுபட்டி கிளை செயலாளர் ஞானராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதுபோல வடபுதுப்பட்டி பகுதியில் தமிழ்நாடு முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான...

தேனியில், இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூன்.21- இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலை தீப தூணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 21.6.2026 இன்று நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியின் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குரு அய்யப்பன், ஆன்மீக அணி மாநில செயலாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தொண்டரணி மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட பொதுச்செயலாளர் மணியம்பட்டி கார்த்திக், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் வேலு, தொண்டரணி தேனி மாவட்ட துணைச்செயலாளர் கலைச்செல்வன், தேனி ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஆன்மீக அணி மாவட்ட தலைவர் செல்வந்திரன், தேனி கொள்கை பரப்பு செயலாளர் பாலன், மாவட்ட தலைவர் செல்வேந்திரன், கடமலை மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவிதாகரன் உள்பட தேவாரம் பகுதி பொறுப்பாளர்கள், இ...

த.வெ.க-வில் இணைந்த போடியை சேர்ந்த அரசியல் பிரமுகர் குறிஞ்சிமணி

தேனி, 21- தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின்  தலைமையை ஏற்று த.வெ.க தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆலோசனையின் பேரில் தேனி மாவட்ட அரசியல் பிரமுகர், சமூக ஆர்வலர் குறிஞ்சிமணி 20.6.2026 அன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை கழக அலுவலகத்தில் கழக பொதுச்செயலாளர், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் 20.6.2026 அன்று முதல் தன்னை அடிப்படை உறுப்பினராக இனைத்து கொண்டார். அப்போது கழக தேர்தல் பிரிவு மேலாண்மை செயலாளர், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம், பிரபல திரைப்பட இயக்குனர்  ஆர்.வி. உதயகுமார் உள்பட அமைச்சர்கள், த.வெ.க-வினர் பலர் உடனிருந்தனர். ............................. நாகராஜ், தலைமை நிருபர் 

போடி நகரில் இறுதி கட்ட பிரசாரத்தை முடித்த திமுக வேட்பாளர் ஓபிஎஸ்

தேனி, ஏப்.21- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சமுதாய தலைவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் மற்றும் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்புக்கான் இறுதி கட்ட பிரசாரம் 21.4.2026 அன்று மாலையுடன் நிறைவு பெற்றது.  இந்த இறுதி கட்ட பிரசாரத்தினை திமுக வேட்பாளர் ஓபிஎஸ் அவர்கள் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள பார்க் ஸ்டாப், வ.உ.சி சிலை,  தேவர் சிலை, கட்டபொம்மன் சிலை, அணைப்பிள்ளையார் கோவில், உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த பிரசாரத்தின் போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், முன்னாள் எம்பி ரவிந்திரநாத், போடிநாயக்கனூர் நகர் கழக செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் நகர்மன்ற ...

அரசியலில் அனைத்து உயரத்திருக்கும் சென்றவர் ஓபிஎஸ்; போடி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் பேச்சு

தேனி, ஏப்.16- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து 16.4.2026 அன்று தேனி அருகே பழனிசெட்டிபட்டி பகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்  அப்போது பிரசார கூட்டத்திற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் அவருக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பிரசார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச தொடங்கியதும், தொண்டர்கள் போட்டோவை  (சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழும் புகைப்படம்) காட்டுங்கள் என கேட்டனர் அதற்கு பதில் அளித்து பேச தொடங்கிய உதயநிதி ஸ்டாலின்  எந்த போட்டோவையும் நான் காட்ட மாட்டேன், உலகம் முழுக்க அந்த போட்டோ எல்லோர் கையிலும் உள்ளது. அது ஒரு மட்டமான போட்டோ, அந்த போட்டோவை காட்டியதால் நான் அதிகமாக திட்டு தான் வாங்கி உள்ளேன். அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும்  போன முறை நாம் தான் ஓபிஎஸ்-யிடம் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றம். இந்த முறை அதற்கு சேர்...

எம்ஜிஆர், அம்மா ஆசியோடு தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்: ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் இபிஎஸ்., பேச்சு

தேனி, ஏப்.14- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து 14.4.2026 அன்று பிரசாரம் செய்தனர் பிரசார கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி.  மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநில தொகுதிகளையும் மறுசீரமைப்புக்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்து பேசுகிறார்.   பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லி விட்டனர். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது எங்களை பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டி பார்க்கிறார் இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.   இதனை...