Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

தேனி-பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் திட்டப்பணிகள் முடக்கம்: கனிமொழி எம்.பி.யிடம், அளித்த கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை. முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன் நன்றி தெரிவிப்பு

தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் மற்றும். நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் திறக்கப்பட்ட சிறுவர் பூங்கா இறகுப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் முதியோர் நடை பயிற்சி மேடை கழிப்பறை போன்றவைகள். கடந்த 4 ஆண்டுகளாக எந்த ஒரு பயன்பாடு இன்றி அடைத்து கிடைக்கிறது. இதனைத்தொடர்ந்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள திட்டப்பணிகள் குறித்து திராவிட முன்னேற்றக் கழக  முன்னாள் ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதன் எதிரொலியாக உடனடியாக உடற்பயிற்சி கூடம் மற்றும் இறகுபந்து மைதானம் சிறுவர் பூங்கா ஆகியவை. உடனடியாக திறக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கா கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை திராவிட முன்னேற்ற கழக முன்னாள் ஒன்றிய பிரதிநிதி...

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.16- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி என்.ஆர்.டி நகர் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு 16.4.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், மாவட்ட துணை தலைவர் சன்னாசி, காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் என்.ஆர்.டி.ஆர். தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் போடி நகர தலைவர் முசாக் மந்திரி, கூடலூர் நகர தலைவர் ஜெயப்பிரகாஷ், கம்பம் நகர தலைவர் போஸ், வட்டார தலைவர்கள் தேனி முருகன், பெரியகுளம் ஹம்சா முகமது, ஆண்டிபட்டி ரவீந்திரன், கடமலை மயிலை தங்கம், உத்தமபாளையம் சத்தியமூர்த்தி, கம்பம் அன்பரசன், சின்னமனூர் ஜீவா, போடி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர் சதாசிவம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மறு சீரமைப்பு பொறுப்பாளர்  சின்னபாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், எஸ்.சி.துறை மாவட்ட தலைவர் இனியவன், முன்னாள் நகர் மன்ற தலைவர் பழனிச்சாமி உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்...

தேனி நகராட்சி பகுதியில் கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சி கூட்டம்

தேனி, ஏப்.12- தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்கள் அகற்றுவது குறித்து அனைத்து கட்சியினர் கூட்டம் 11.4.2025 அன்று நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி நகர் நல அலுவலர் கவிப்பிரியா தலைமை தாங்கினார்.  நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் சலீம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் செல்வம் உள்பட வருவாய்த்துறை, மின்சாரத்துறை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவின் படி வருகின்ற ஏப்ரல் 21-ம்  தேதிக்குள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை தாங்களாக முன்வந்து அகற்றி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதில் கோர்ட்டு உத்தரவினை பின்பற்ற கட்சிகளின் தலைமையில் இருந்து உத்தரவு வந்தவுடன் குறிப்பிட்ட தேத...

தேனியில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, ஏப்.6- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனியில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன், தேனி நகர தலைவர் கோபிநாத், தேனி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணவேணி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் தேனி வட்டார தலைவர் முருகன், பெரியகுளம் வட்டார தலைவர் ஹம்சா முகமது, சின்னமனூர் வட்டார தலைவர் ஜீவா, மாநில பொதுக்குழு உறுப்பினர் முனியாண்டி, மாவட்ட செயலாளர் அபுதாகிர், தேனி அல்லிநகரம் நகராட்சி கவுன்சிலர் நாகராஜ் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக வக்பு திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க நினைப்பதுடன், இத்திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருவ...

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தொகுதி மறுவரையறை; தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறைந்து விடும்: தேனி எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

தேனி, மார்ச்.31- தேனி தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., 30.3.2025 அன்று தேனியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையிலான பாராளுமன்ற தொகுதி மறுவரையறை என்பதில் தமிழகத்தில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுவரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை கூடும். ஆனால் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்தால் எம்.பி.-க்கள் எண்ணிக்கை குறையும். அதனால் தான் தி.மு.க வாதம் செய்து வருகிறது. இந்த மறுவரையறை விவகாரத்தில் பிரதமரோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பாராளுமன்றத்தில் பதில் கூற வேண்டியது தானே. ஏன் பேசவில்லை. ஜனநாயக முறைப்படி தான் நடக்கும் என கூறலாமே. தென் மாநில கூட்டு நடவடிக்கை குழுவில் தமிழ்நாடு, தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இடம் பெற்றுள்ளன. இதில் தற்போதைய மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களுக்கு 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலே மறுவரையறை செய்யலாம். அன்றைய காலகட்டத்தில் வட மாநிலங்களிலும், தென் மாநிலங்களிலும் மக்கள் தொகை விகிதாச்சாரம் ஒரே அளவில் இருந்தது....

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தேனி, மார்ச்.19- தேனி நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக பேரம் பேசி வரி வசூல் செய்தும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளரையும் அவருக்கு துணை போகும் ஊழியர்களையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு 19.3.2025 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி நகர காங்கிரஸ் தலைவர் கோபிநாத் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர், முன்னாள் நகர்மன்ற தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தேனி வட்டார தலைவர் முருகன், மாவட்ட செயலாளர்கள் அபுதாகிர், சம்சுதீன் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது நகராட்சியில் சரிவர குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து போராட்டத்தின் போது குப்பைகளை கொட்டியும்,நகராட்சி ஆணையாளர் மற்றும் அவருக்கு துணை போகும் ஊழியர்களை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.  இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர் அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ந...

தேனியில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில செயற்குழு கூட்டம்

தேனி, மார்ச்.17- இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) மாநில செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள தெய்வா ஹோட்டலில் 16.3.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமை தாங்கினார்.  தொண்டரணி மாநில தலைவர் மோகன், பொதுச்செயலாளர் அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி தொண்டரணி (தமிழகம்) நிறுவனர் அர்ஜூன் சம்பத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.  கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் முருகவேல், மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன், தேனி நகர தலைவர் அழகுமுருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெரியகுளம் மற்றும் போடிநாயக்கனூரில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கும் பணி செயல்படாமல் உள்ள நிலையில் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வர...

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் : தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

தேனி, மார்ச்.2- தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுக கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மதுராபுரியில் நடைபெற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 2.3.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக்கோடை இராமர் தலைமை தாங்கினார். தேனி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.டி.கே.ஜக்கையன்,  கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் ரதி மீனா சேகர், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், மதுரை கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜகுரு, ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் லோகிராஜன், பெரியகுளம் நகர செ...

சோழவந்தானில் அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மதுரை, மார்ச்.1- மதுரை மாவட்டம், சோழவந்தான் நகரில் உள்ள சின்னகடை வீதியில் உள்ள கலையரங்கத்தில் அ.ம.மு.க புறநகர் மாவட்ட கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது,  கூட்டத்திற்கு  வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வி.ராஜன், பேரூர் செயலாளர் முள்ளை ஆர்.மதன் ஆகியோர் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் மேலூர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,  இளைஞர் அணி வக்கீல் வீரமாரி பாண்டியன், டிரஸ்ட் பாலு, அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கோடிஸ்வரன், ஒன்றிய துணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், அம்மா பேரவை முரளி சோழகர் வரவேற்றனர். அ.ம.மு.க புறநகர் மாவட்ட செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் கதிர்காமு, முன்னாள் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ் , ரயில்வே பரமநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். இதில் பேசியவர்கள் தீயசக்தி தி.மு.க-வை வரும்  2026-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் துரத்தி விரட்ட வேண்டும் என்றனர். அம்மாவின் உண்மை விசுவாசிகளும்,பிரிந்து செ...