Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.5- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 4.12.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை பொதுச் செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் லாசர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் ஜெரால்டு, தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் மாறன், மதுரை மாவட்ட பேராயர் இன்பராஜ், தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கரன், தென் மண்டல செயலாளர் எடிசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஈரோடு பேராயர் ஜான் வெஸ்லி, தேனி நகர செயலாளர் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ .ஆர்) பணியை நிறுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.  தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற பெறக்கூடாது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஷிப்ட் முறையில் இயங்கும் பாடப்பிரிவினை ரத்து செய்து விட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரெகுலர் பயிற்சி முறையில் கல்லூரி இயங்க வழிவகை செய்...

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., கோரிக்கை

தேனி, நவ.3- நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் 3.12.2025 அன்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசுகையில், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள், மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 6.11.2025 அன்று அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்...

தேனி மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

  தேனி, நவ.28- தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா 27.11.2025 அன்று கேக் வெட்டி, காப்பக குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தேனி திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜன் வரவேற்றார். போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நிஷாந்த், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாசித் ரஹ்மான், கண்ணன், முகமது ரபீக், ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் ஸ்டாலின், காப்பக நிர்வாகி பால்பாண்டி உள்பட பலர் கலந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அயலக அணி நிர்வாகிகள் செய்திருந்தனர். ........................ நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, நவ.25- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் கிழக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 24.11.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமை தாங்கினார்.  மாவட்ட தலைவர் வேந்தர் பாலா, மாவட்ட பொருளாளர் வீரா ராமச்சந்திரா பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஆண்டிபட்டி தாலுகா, கண்டமனூர் புதுக்குளம் கண்மாய் மற்றும் நீர் வழித்தடங்களில் தனியார் நிறுவனத்தினர் அமைத்துள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தை அகற்ற வேண்டும்.  தேனியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  தேனி மாவட்டத்தில் தனியார் ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் விபச்சார குற்ற செயலில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும்.  தேனி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவளக்கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். பெரியகுளம், ஆண்டிப்பட்டி பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோர...

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சி தான் இந்த வாக்காளர் பட்டியல் SIR: தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேட்டி

தேனி, நவ.7- தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா 7/11/2025 அன்று நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., வருகின்ற நவம்பர் 11-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் வாக்காளர் பட்டியல் S.I.R திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, SIR-யை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIR-யை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீகாரில் நாம் தெளிவாக பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா...

தீபாவளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, அக்.10- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்திக் மற்றும் முனியாண்டி, கணேசன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் , இந்திய நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகள் என்பது குடும்பங்கள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி களிப்பதற்காகவும், குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சமயங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பதன் மூலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்துவிட்டு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு குடும்ப தலைவிகளை சித்ரவதை செய்வது,, குழந்தைகளை சித்ரவதை செய்வது என்று பல்வேறு இன்னல்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர். மேலும் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துகளி...

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக-வின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை: மதுரை புத்தக திருவிழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

மதுரை, செப்.14- மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவின் 8-வது நாளான 13.9.2025 அன்று நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்று கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால் தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அ...

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு: தேனியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

தேனி, செப்.6- தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்ப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் தேனி பங்களா மேடு நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வெற்றிக்கு வித்திட்ட மாவட்டம், இந்த தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிறைய திட்டங்களை கொடுத்தோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். இந்தப் பகுதி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், அரசு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்பட்டன.  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.  அம்மா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி கனால் பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்க...

ஹைவேவிஸ் பேரூராட்சியில், தலைவர் பதவிக்கு முறைகேடாக நடந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: 7 கவுன்சிலர்கள் தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.29- தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சியில் 15-வது வார்டு கவுன்சிலர்கள் பதவி உள்ளன. இதிலிருந்து தலைவர் பதவி தேர்வு செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த பேரூராட்சியில் தலைவராக இருந்தவர் இறப்பின் காரணமாக பேரூராட்சி தலைவர் பதவி காலியாகி இருந்து வருகிறது.  இந்த பேரூராட்சி தலைவர் பதவியை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  முறைகேடு நடந்திருப்பதாக கூறி அந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டுமென தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் அவர்களிடம் பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 15-வது வார்டு கவுன்சிலர் ஹேமா தலைமையில் 7 கவுன்சிலர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் கடந்த 16-ந் தேதி தேர்தல் அறிவிப்பு கடிதத்தை எங்களிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில் கடந்த 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் 10.30 மணிக்கு ஹைவேவிஸ் பேரூர...

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி: காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு சார்பில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, ஜூலை.15- தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி எஸ்.சி., பிரிவு மாவட்ட தலைவர் இனியவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மயிலாடும்பாறை உள்பட 15 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம்.  இந்த கோரிக்கை மனுவுடன் ரேசன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், ஜாதி சான்று நகல் இணைத்துள்ளோம். எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் வீடு இல்லாத எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ............................ நாகராஜ், தலைமை நிருபர் 

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

தேனி, ஜூலை.4- தேனியில் இந்து மக்கள் கட்சி சார்பில் 32 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார் முன்னதாக தனியார் விடுதியில் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கையில், முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது,  முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்ற அதே இடத்தில் தற்போது ஜவாஹிருல்லாஹ் தலைமையில் முஸ்லிம் மாநாடு நடத்துகிறார்கள், உள்நோக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டை தடை செய்ய வேண்டும் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்ட போது அனைவரும் குரல் கொடுத்தனர். ஆனால் அஜித்குமார் இந்து மதத்தை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட போது ஒருவரும் குரல் கொடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டு சீர்கெட்டுள்ளது. அதை பாதுகாக்க தவறிய ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். "ஒன்றிணைவோம் தமிழ்நாடு என்று மக்களை பாதுகாப்பதாக கூறுகிறார் ஸ்டாலின் ஆனால் திமுகவிடம் இருந்து தான் மக்களை பாதுகாக்க வேண்டும திமுகவால் மண்ணுக்கும், மக்களுக்கு...