Skip to main content

Posts

எம்ஜிஆர், அம்மா ஆசியோடு தேனி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபியுங்கள்: ஆண்டிப்பட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் இபிஎஸ்., பேச்சு

தேனி, ஏப்.14- தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி அமமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் இணைந்து 14.4.2026 அன்று பிரசாரம் செய்தனர் பிரசார கூட்டத்தில் முதலில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசுகையில், கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் வேட்பாளராக நான் வந்தபோது இருந்த அதே ஆரவாரம் இன்றும் உள்ளது. இந்த மாவட்டத்தின் 4 தொகுதிகளையும் நாம் வெல்ல வேண்டும். அரசியலுக்காக எதையும் பேசும் கூட்டம் தான் திமுக கூட்டணி.  மு.க ஸ்டாலின் ஒரு வீடியோ போட்டிருக்கிறார், நாளை மறுநாள் இந்தியாவின் அனைத்து மாநில தொகுதிகளையும் மறுசீரமைப்புக்கு மசோதா தாக்கல் செய்கிறார்கள், அதை எதிர்த்து பேசுகிறார்.   பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இதனால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஏற்கெனவே சொல்லி விட்டனர். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது எங்களை பற்றி குறை சொல்ல முடியாத ஸ்டாலின், டெல்லியை மிரட்டி பார்க்கிறார் இவ்வாறு டி.டி.வி.தினகரன் பேசினார்.   இதனை...

போடி தொகுதியில்; மகளிர் சங்கங்கள், சர்ச் நிர்வாகிகளிடம் குறைகளை கேட்டு வாக்கு சேகரித்த தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ்.,

தேனி, ஏப்.13- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.  இந்நிலையில் போடி சிசம் ஸ்கூல் அருகில் உள்ள சர்ச்சில் சம்மந்தப்பட்ட சர்ச் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓபிஎஸ் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டார். அதன் பின் 2026 தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் தன்னை பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய தங்களது பேராதரவு தருமாறு கேட்டு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து போடி பகுதியில் உள்ள (ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவில்) பிரமலை கள்ளர் சங்கங்கள் தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் (ஸ்ரீ உச்ச காளியம்மன் திருக்கோவில்) கிழக்கு மறவர் மகாஜன  சங்கங்கள் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களை தமிழக முன்னாள் முதல்வர், போடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளை ...

போடி தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தரும் திமுக பூத் நிர்வாகிகளுக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை: பூத் நிர்வாகிகளை திறம்பட செயல்படுத்தும் நகர, ஒன்றிய செயலாளர்களுக்கு 5 பவுனில் தங்கபதக்கம்; திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம், தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., ஆகியோர் அறிவிப்பு

தேனி, ஏப்.10- போடி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியங்கள் மற்றும் போடி நகரத்தில் உள்ள BLA., BLA-2, BDA நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 10.4.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தலைமை தாங்கினார். தமிழக முன்னாள் முதல்வர், போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன் உள்பட ஒன்றிய செயலாளர்கள், சம்பந்தப்பட்ட நகர பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்த...

பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் டாக்டர் கதிர்காமுக்கு குக்கர் சின்னத்திற்கு ஆதரவு கோரி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரசாரம்

தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டாக்டர் கதிர்காமு வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன்  பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 9.4.2026 அன்று பிரசாரம் மேற்கொண்டார். தேனி பங்களா மேடு பகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய டிடிவி தினகரன் பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் அமமுக வேட்பாளராக இதே தொகுதியில் கடந்த 2016-ல் அம்மா அவர்களால் நிறத்தப்பட்டு ஏற்கனவே எம்.எல்.ஏ-வாகவும், 2 முறை சீட்டுக்கு போட்டியிட்ட டாக்டர் கதிர்காமு போட்டியிடுகிறார். பெரியகுளம் தொகுதியில் தற்போது திமுக எம்.எல்.ஏ., தான் உள்ளார் ஆனால் இந்த தொகுதியில் குறிப்பாக தேனியில் சுகாதார சீர்கேடு, அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு நீங்கள் அமமுக வேட்பாளரை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை...

போடி பரமசிவன் மலைக்கோவில் சித்திரை திருவிழாவிற்கு கொடிமரம் ஊன்றும் பூஜை: தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பு

தேனி, ஏப்.9- தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்திருக்கும் தென் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் போடி பரமசிவன் மலைக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை 1-ந் தேதியில் இருந்து 7-ந் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கான கொடிமரம் ஊன்றும் நிகழ்ச்சி  9.4.2026 அன்று நடைபெற்றது. போடி நகர் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த பெரியாண்டவர்   கோவிலில் இருந்து  கொடிமரம்  சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கொடி மர பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.  அதனைத்தொடர்ந்து கிரிவல பாதையில் கொடிமரம் மலைக் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த கிரிவல பாதையில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஜுப்பில் மலைக்கோவிலுக்கு சென்று பழமை வாய்ந்த சிவன் கோவிலில் வழிபாடு செய்தார்.  இந்நிகழ்ச்சியில் போடி ஜமீன்தார் வடமலை ராஜையபாண்டியன், தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்,பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், போடி நகர் த...

தேனி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்று சிலிண்டர் மற்றும் உணவு பொருட்கள் விலையை உயர்த்தினால் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, ஏப்.7- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணத்தினால் கச்சா எண்ணெய் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடந்த மாதத்தில் பொதுமக்களிடையே தகவல் பரவியது.  இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வணிக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாக சாலையோர துரித உணவு கடைகள், இரவு நேர டிபன் உணவகங்கள் தேனி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சில கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் நடத்தி வரக்கூடிய டீ கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உணவு பொருட்களில் விலைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. அதுபோல அடிப்படையாக தயாரிக்கக்கூடிய சில உணவு பொருட்களை கூட தயாரிப்பதை  நிறுத்தி விட்டனர். தேனி பகுதியில் இந்த திடீர் விலை ஏற்றத்தால் டீ, காபி, இட்லி, வடை போன்ற உணவுப்பொருட்கள் ரூ.2 முதல் ரூ 5 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் சில டீ கடை மற்றும் ஓட்டல் நிறுவனங்கள் விலைகளை ஏற்றாமல் பொருட்களின் குவாலிட்டி மற்றும் குவாண்டிட்ட...

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல்

தேனி, ஏப்.6- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் 6.4.2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கான வேட்பு மனுவை போடி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் நல்லையனிடம் முன்னாள் முதல்வரும், திமுக வேட்பாளருமான ஓ.பி.எஸ்., தனது வேட்பு மனுவை வழங்கினார். அப்போது தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தேனி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபிநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக திமுக வேட்பாளர் ஓபிஎஸ்., மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என மக்கள் வெள்ளத்தில் போடி கட்டபொம்மன் சிலையில் இருந்து ஊர்வலமாக போடி தாலுகா அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து ஓபிஎஸ் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்,  தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வேட்பாளராக அறிவித்தார். வேட்பு மனு தாக்கல் செய்து...

போடி சட்டமன்ற தொகுதியில் திமுக தேர்தல் அலுவலக பணிமனை திறப்பு : வேட்பாளர் ஓ.பி.எஸ்., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

தேனி, ஏப்.6- தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இவர் போடி தொகுதியில் உள்ள சமுதாய தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்பட பல்வேறு சங்க நிர்வாகிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரி வருகிறார்.  இந்நிலையில் திமுக தேர்தல் அலுவலக பணிமனைகள் போடி மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணி மனைகள் திறப்பு விழா 6.4.2026 அன்று நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வர், திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., முன்னாள் எம்.பி., ரவீந்திரநாத், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் போடி லட்சுமணன், ஆர்.டி. கணேசன் உள்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  இதற்கிடையே போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போடி நகரில் உள்ள ஆரிய வைசிய சோழிய செட்டியார் சங்கம் நடுமண்டபம், ஜே.கே பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம், திருமலாபுரம் 24 மனை தெலுங்கு செட்டியார் காமாட்சி அம்மன் கோவில், திருமலாபுரம் நாடார் உறவினர் ச...