Skip to main content

Posts

Showing posts with the label தமிழ்நாடு

தேனி பூதிப்புரம் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை கட்டிடம்: கலெக்டர் வைத்திநாதன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்

தேனி, ஜூலை.14- தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை மாநில  கல்லூரி வளாகத்தில் இன்று (14.7.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவ கட்டிடங்களை திறந்து வைத்து. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம். பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தில் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இதன்பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனை மையம், மருந்தக பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் சிகிச்சை வழங்...

தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் பரப்புரையாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை தொகையை பெற்று தரக்கோரி கலெக்டரிடம் மனு

தேனி, ஜூலை.7- தேனி மாவட்டத்தில் பேரூராட்சிகளில் பணியாற்றும் பரப்புரையாளர்கள் மற்றும் ஓட்சா கூட்டமைப்பு மாவட்ட தலைவர் வனிதா, மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளர் பேச்சியம்மாள் தலைமையில் பரப்புரையாளர்கள் மற்றும் ஓட்சா கூட்டமைப்பினர் மாவட்ட கலெக்டர் வைத்திநாதனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  தேனி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி பணியாற்று வரும் பரப்புரையாளர்கள் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கள் துறையின் கீழ் உள்ள பேரூராட்சிகள் நகராட்சிகளில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் தற்போது பணியாற்றி வரும் அனிமேட்டர்கள் என அழைக்கப்படும் பரப்புரையாளர்களை நியமித்து பராமரித்து வரும் தொடர்புடைய ஏஜென்சிகள் இடைநீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணி வழங்கிட வேண்டும். அதுபோல ஒப்பந்ததாரர்கள் மாறினாலும் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணிபுரியும் பரப்புரையாளர்களை பணி நீக்கம் செய்யாமல் தொடர்ந்து பணி வழங்கிட மாவட்ட நிர்வாகம் ஆவணம் செய்ய வேண்டும். அதுபோல மற்றொரு மனுவில், தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளில் பணிபுரிந்து வரும் பரப்புரையாளர...

குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேனி, ஜூலை.6- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (6.7.2026) குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெற உள்ளதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன். தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அவர்கள், குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோயில் ஆடிப்பெருந் திருவிழாவின்போது, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்துத் துறை வாரியாக எந்தெந்த வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலந்த ஆலோசனை மேற்கொண்டு இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் திருவிழா காலத்தில் திருக்கோயிலில் சாமி தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு செல்லும் வழியினை தெளிவாக வழிகாட்டிப் பலகை (Arrow mark) மூலம் காண்பித்தில், கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்தல், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய வழிவகை செய்திட வேண்டும். குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்த...

விநாயகர் சதுர்த்தி விழாவை தேனி மாவட்டம் முழுவதும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடத்த வேண்டும் : இந்து எழுச்சி முன்னணி வார வழிபாடு கூட்டத்தில் முடிவு

தேனி, ஜூலை.6- தேனி மாவட்டத்தில் இந்து எழுச்சி முன்னணியின் வார வழிபாடு கூட்டம் 5.7.2026 அன்று நடைபெற்றது. இந்த வார வழிபாட்டிற்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி நிறுவனர் பொன் ரவி, மாவட்ட தலைவர் இராமராஜ், மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன: தீர்மானம் – 1: வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாகவும், பக்தி உணர்வுடனும் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் – 2: தமிழக அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள், தமிழக ஆளுநரின் அறிக்கையை தவறாக புரிந்து கொண்டு அதற்கு எதிர்மறையான கருத்துக்களை தொடர்ந்து வெளியிடுவதை தவிர்த்து, தமிழக மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி கேட்டுக்கொள்கிறது. மேலும், தேவையற்ற மோதல் போக்கையும் எதிர்ம...

தேனி அருகே, தீர்த்த தொட்டி விருப்பாச்சி ஆறுமுக நாயனார் கோவில் கும்பாபிஷேகம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

தேனி, ஜூலை.5- தேனி மாவட்டம், போடி சாலையில் உள்ள கோடாங்கிபட்டி அருகே அமைந்துள்ள தீர்த்த தொட்டி முருகன் @ அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நாயனார் திருக்கோயில் கும்பாபிஷேகம் 5.7.2026 அன்று நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2.7.2026 முதல் விக்னேஸ்வரா பூஜை , பாலமகாகணபதி ஹோமம், யாகவேள்வி, திருமுறை பாராயணம் மகா தீபாரதனை போன்ற பூஜைகள் செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து 2.7.2026 அன்று கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜைகள், ஹோமம் செய்யப்பட்டு ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் மற்றும் அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நாயனார் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயதேவி, செயல் அலுவலர் சுபிதா, தொழிலதிபர் சக்தி உள்பட தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் சிறுவர், சிறுமியர்கள் சுவாமி முருகன் வேடமணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதனை பக்தர்கள் வியப்புடன் கண்டுகளித்து அந்த சிறுவர், சிறுமிகளுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து சென்றனர்....

தேனி பழனிசெட்டிபட்டியில் த.வெ.க அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற திமுக-வினர் கைது

தேனி, ஜூன்.29- தமிழ்நாட்டில் த.வெ.க தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் சரத்குமார் பொது இடங்களில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.  இதனை கண்டித்து தேனி திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் த.வெ.க அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் 29.6.2026 அன்று நடைபெற்றது.  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக பெரியகுளம் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணகுமார், மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன், ஒன்றிய செயலாளர் அய்யப்பன், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, பழனிசெட்டிபட்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ், பூதிப்புரம் பேரூராட்சி தலைவர் கவியரசு, வீரபாண்டி பேரூர் திமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், திமுக மாணவரணியினர் த.வெ.க அமைச்சர் சரத்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி கொண்டே ஊர்வலமாக வந்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு ஊர்வலமாக வந்த திமுக-வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து திமுக-வினர் சாலையில் அமர்ந்து த.வெ.க அமை...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் தொடர்பான மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம்: பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தொடங்கி வைத்தார்

  தேனி, ஜூன்.29- தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்கள் குறைதீர்வு சிறப்பு முகாம் 29.6.2026 மற்றும் 30.6.2026 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான முகாமை பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ, துணைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முகாமின் போது பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படும் சேவைகளான புதிய சொத்துவரி நிர்ணயம், வரி விதிக்கப்படாத வரிவிதிப்புகளின் கீழ் சொத்து வரி நிர்ணயம் செய்தல், புதிய குடிநீர் இணைப்பு, சொத்து வரி மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம், தொழில்வரி, தொழில் உரிமம், கட்டிட உரிமம், மனைப்பிரிவு அங்கீகாரம், பிறப்பு இறப்பு சான்று, சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை போன்ற சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த சிறப்பு குறைதீர்வு முகாமின் மூலம் பெறப்படும் மனுக்களை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டுமென பேரூராட்சி அதிகாரிகளுக்கு பேர...

தேனி பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ‌.க-வில் இணைந்தனர்

தேனி, ஜூன்.26- தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி பேரூர் அதிமுக செயலாளராக இருந்து வந்த தீபன் சக்கரவர்த்தி தலைமையில் பேரூர் நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பேரூர் அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு த.வெ.க-வில் இணைந்தனர். இதற்கான இணைப்பு  26.6.2026 அன்று தமிழக வெற்றிக் கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலையில் தீபன் சக்கரவர்த்தி தலைமையில் அதிமுக பேரூர் நிர்வாகிகள் ரவி ராணி, பாண்டியம்மாள் மாயத்தேவர், சந்திரசேகர், முருகேசன், பவுன்தாய் ஜெயராம், வெற்றிச்செல்வன், சார்பு அணி நிர்வாகிகள் முருகேஸ்வரி, முத்துப்பாண்டி, தாணு விக்னேஷ், நவீன்குமார், பாண்டியராஜன், முருகேசன், ரிஷிபாரதி, அகமது ஆரிப், அருண்பண்டியன், ஜெகநாதன், வெள்ளைத்துரை, போஸ் மணிகண்டன் மற்றும் வார்டு செயலாளர்கள் சிவக்குமார், சந்திரா வெற்றிச்செல்வன், ஆசைத்தம்பி, வெங்கடேஷ், முத்தையன், முத்துக்குமரன், அறிவானந்தம், ராஜ பார்த்திபன், முருகேசன், வீரமணி, மணிகண்டன், தேவதாஸ், ரமேஷ், நாகேஸ்வரன், செல்வராஜ் ஆகியோர்  த.வெ.க-வில் இணைந்தனர். இந்த இணைப்பு நிகழ்வின் போது தேனி த.வெ.க வடக்கு மாவட்...

தேனியில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு ஓட்டம் : மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

தேனி, ஜூன்.26- தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (26.6.2026) உலக போதைப்பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப்பொருள் இல்லாத உருவாக்க வேண்டும் நோக்கில், Start Run, Stop Drug Anti Drug Run 2026 விழிப்புணர்வு ஓட்டம் மற்றும் சமூகத்தை என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டர் அவர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்த உறுதிமொழி மேற்கொண்டு, தொடர்ந்து Start Run, Stop Drug - Anti Drug Run 2026' விழிப்புணர்வு ஓட்டத்தை துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2000-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.  இத்தொடர் ஓட்டம் தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொதுமக்கள் பார்த்து போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை அறியும் வண்ணம் பதாகைகள் ஏந்தி நிறைவாக விழிப்புணர்வு தொடர் ஓட்டம் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்களை பெரியகுளம் சட்டம...

தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிட பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி மற்றும் சமூகநீதி விடுதியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் ஆய்வு

தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இன்று (24.6.2026) பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டுவரும் கள்ளர் சீரமைப்பு உண்டு உறைவிடப்பள்ளி, அரசு கள்ளர் மாணவர் விடுதி மற்றும் ஓடைப்பட்டியில் உள்ள சமூகநீதி மாணவர் விடுதியினை மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் V.சம்பத்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விடுதியில் தங்குமிட வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதி, சுகாதார வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு அட்டவணைப்படி வழங்கப்பட்டு வரும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து  அமைச்சர் அவர்கள், விடுதியில் தங்கி உள்ள மாணவர்களுடன் அமர்ந்து கலந்துரையாடி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் ஆரோக்கியமான பழக்கங்களை கற்றுக்கொண்டு, தங்கள் தனித்திறமைகள...

தேனி மாவட்டத்தில் அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு

  தேனி, ஜூன்.24- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் க.விலக்கில் இன்று (24.6.2026) அண்ணா கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் மரு.இரா.வைத்திநாதன் மற்றும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் முன்னிலையில் தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ம.விஜய் பாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நடைபெற்று வரும் உற்பத்தி பணிகள், பருத்தி கொள்முதல் நடைமுறைகள், நூல் உற்பத்தி அளவு, இயந்திரங்களின் செயல்திறன், மின்சார பயன்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் ஆகியன குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் அவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில், விலையில்லா வேட்டி-சேலை வழங்கும் திட்டம், பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு தேவையான நூல்கள் உற்பத்தி ஆகியன குறித்தும். கடந்த காலங்களில் நலிவுற...

தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளர் போடி ஏ.பி.பி ராஜா அழகணன் த.வெ.க-வில் இணைந்தார்

தேனி, ஜூன்.23- தமிழக முன்னாள் முதல்வரின் அரசு நேர்முக உதவியாளராக இருந்த போடி பகுதியை சேர்ந்த ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதற்கான இணைப்பினை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் அவர்களின் முன்னிலையில் ஏ.பி.பி. ராஜா அழகணன் தன்னை உறுப்பினராக இணைத்து கொண்டார். த.வெ.க-வில் இணைந்துள்ள ஏ.பி.பி. ராஜா அழகணன் தமிழக முன்னாள் முதலமைச்சர், முன்னாள் துணை முதல்வர், முன்னாள் நிதியமைச்சர், தமிழக சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர், தமிழக அரசின் முன்னாள் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஆகியோருக்கு அரசு நேர்முக உதவியாளராகவும், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின்  உதவி மேலாளராகவும் பணியாற்றி  கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.  ........................... நாகராஜ், தலைமை நிருபர்   செல் - 9842145271