Skip to main content

Posts

Showing posts with the label தமிழ்நாடு

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

  தேனி, ஜூன்.1- தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தை திரும்பப் பெற்று, தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 1.6.2036 அன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விவசாயிகளுக்கான கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடிகளை தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி தள்ளுபடி செய்ய வேண்டுமென விவசாயிகள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், தமிழக மலர் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சின்னச்சாமி மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக தேனி மாவட்ட கலெக்டர் வைத்திநாதன் அவர்களிடம்  விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.  ...

தேனி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோவில் வளாக பகுதியில் கழிப்பறை கட்டும் இடத்தை மாற்றி அமைக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணியினர் அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு

தேனி, ஜூன்.1- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் இராமராஜ் ஆலோசனையின் படி மாவட்ட செயலாளர் இராமமூர்த்தி தலைமையில் மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன், இந்து எழுச்சி முன்னணி தொழிலாளர் நலச்சங்க மாவட்ட அமைப்பாளர் மணிகண்டன், தேனி நகர அமைப்பாளர் கனகுபாண்டி, தேனி நகர பொருளாளர் நாகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மொக்கை, ராஜீகண்ணு மற்றும் பூசாரி பேரவை நகர் அமைப்பாளர்  கோவிந்தராஜ் சாமி ஆகியோர்  இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் ஜெயதேவி அவர்களிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், தேனி அல்லிநகரம் அருள்மிகு ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவில் தேனி மாவட்டத்தின் மிகப் பிரசித்தி பெற்ற ஆன்மிக திருத்தலங்களில் ஒன்றாகும் என்றும், ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் தமிழ்நாட்டின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாக விளங்குகிறது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீ வீரப்ப அய்யனார் மலைக்கோவிலின் ஈசானி மூலையில் (வடகிழக்கு திசை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கழிப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்....

வைகை அணையை தூர்வார வேண்டும்: தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் வலியுறுத்தல்

தேனி, ஜூன்.1- தேனி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் வைகை அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், அணையை உடனடியாக தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை அதிகரிக்க தமிழக அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு (TAFVA) மாநில பொதுச்செயலாளர்  வி.ஆர். ராஜன் மற்றும் தமிழ்நாடு–புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் வழக்கறிஞர் M.K.M. முத்துராமலிங்கம் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். வைகை அணையை, மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த அணையின் நீர் தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், அணையின் அடிப்பகுதியில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண் மற்றும் படிவங்களை அகற்றும் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது காலத்தின் கட்டாய...

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஜூன் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தேனி, மே.30- தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி அவர்களின் ஆணைக்கிணங்க 2026 சட்டமன்ற தேர்தலில் தற்போது தமிழக முதல்வர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று கூறி இருந்தார். ஆனால் தற்போது முதல்வர் அவர்கள் விவசாயிகள் சோறு போடும் வயிற்றில் அடித்து உள்ளார். பயிர் கடன் தள்ளுபடி விஞ்ஞான பூர்வமான செயலை விவசாயிகள் மத்தியில் கலங்கத்தை ஏற்படுத்தி விட்டார். ஆகையால் தமிழகம் முழுவதும் மற்றும் தேனி மாவட்டத்தில் 1.6.2026 அன்று திங்கட்கிழமை (நாளை மறுநாள்) காலை 10 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அரசுக்கு கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.  எனவே தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும், அனைத்து அமைப்புகளும் நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொண்டு நமது உரிமையே வென்றெடுப்போம். என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிராஜ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளார். .............................. நாகராஜ், தலைமை நிருபர் 

டிஎன்டி சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய கோரி: கம்பம் எம்.எல்.ஏ., ஜெகநாத்மிஸ்ராவிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு

தேனி, மே.25- தேனி மாவட்டம், கம்பம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் P.L.A. ஜெகநாத்மிஸ்ரா அவர்களை அவர்களின் இல்லத்தில் சீர்மரபினர் நலச்சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி ஆலோசனையின் பேரில் கம்பம் டி.என்.டி  இளைஞரணி சார்பில்  மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் கெளதம் தலைமையில், மாநில செயலாளர்கள் ஜெயபால், ஜெயக்குமார், கவியரசன், ஐ.டி. விங். நதீஸ்குமார், தேனிமாவட்ட மகளிர் அனி தலைவி வியலட்சுமி, சிறுவர்கள் உள்பட சீர்மரபினர் நலச்சங்கத்தினர் DNT சான்றிதழ் வேண்டி கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது, தமிழகத்தில் 68 சமூகங்களுக்கு கடந்த 1947-க்கு பிறகு டி.என்.டி (Denotified Tribes) என்ற அடிப்படையில் கட்டணமில்லா கல்விச்சலுகை உள்பட சில வளர்ச்சி உரிமைகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1979-ல் ஒரு தவறான அரசாணை (1310) மூலம் அச்சமூகங்களின் வகுப்பு பெயரில் இருந்த பழங்குடி என்று சொல்நீக்கப்பட்டு இச்சமூகங்களின்  உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் பல நிலைகளில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 1998-ம் ஆண்டே தேவர் பேரவை, தலைவர் கலைஞரிடம் மீண்டும் டி.என்.டி (Denotified Tribes) வகுப்பு...

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்து எழுச்சி முன்னணி வார வழிபாட்டு நிகழ்வில் வலியுறுத்தல்

தேனி, மே.25- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாட்டு நிகழ்வு 24.5.2026 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி மாவட்ட இணை அமைப்பாளர் செல்வபாண்டியன் தலைமை தாங்கினார். தேனி நகர துணை செயலாளர் இராஜேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  சக்திவேல் வழிகாட்டினார்.   நிகழ்ச்சியில் சிறப்பு. அழைப்பாளராக தமிழக ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் மானனீய சுவாமி சுடலையானந்தா கலந்து கொண்டு ஆசி வழங்கினார். இந்த வார வழிபாட்டு நிகழ்ச்சியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் உள்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு, சமூக ஒற்றுமை, இந்து சமுதாய முன்னேற்றம் மற்றும் மக்கள் நலன் குறித்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். நிகழ்ச்சியின் போது சமூக நலன், மக்களின் பாதுகாப்பு மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டு, கீழ்கண்ட முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானம் – 1 தமிழக அரசு பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, விவசா...

தேனியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் : சுகாதாரம் போன்ற அடிப்படை பணிகளுக்காக தொடர்ந்து போராடி வரும் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன்

தேனி, மே.24- தேனி அல்லிநகரம் நகராட்சியில் பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் அல்லிநகரம் 5-வது வார்டு மச்சால் தெருவில்  பாதாளச் சாக்கடைக்காக ( LS lifting station ) குழி தோண்டி அடைக்கப்படாமல் உள்ளன.  அதுபோல பாதாளச்சாக்கடை குழிகள் கடந்த (26.5.2025) அன்று தொடங்கி பணியும் ஒரு வருடமாக முடிவடையாமல் குழிகள்  மூடப்படாமல் உள்ளன.  பள்ளிகள் விடுமுறை என்பதால் குழந்தைகள் விழுந்து விடும் அபாயம் இருப்பதால் கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.  மேலும் மூன்று இடங்களில் ட்ரைனேஜ் உடைத்து கழிவுநீர் மந்தைக்குளம் கண்மாயில் திருப்பிவிடப்பட்டு வெகு நாட்களாகிறது. மச்சால் தெரு மற்றும் கிணற்று தெருவில் பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளங்கள் இன்று வரை மூடப்படாமல் உள்ளது.  இதேபோன்று சாக்கடை கால்வாய்கள் தூர் வாருவது, ஆங்காங்கே குவிக்கப்பட்டு கிடக்கும் குப்பைகளை அகற்றுவது போன்ற அடிப்படை பணிகளுக்காக கவுன்சிலர் கிருஷ்ண பிரபா அய்யப்பன் தொடர்ந்து போராடி வருகிறார்.  எனவே தேனி அல்லிநகரம் நகராட்சி  நிர்வாகம் பாதாள சாக்கடை உள்ளிட்ட ச...

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் போது ஓபிசி/டிஎன்டி வகுப்பையும் சேர்க்க வேண்டும்: தேனி கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை மனு

தேனி, மே.11- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் A.கௌதமன் தலைமையில் மாநில செயலாளர்கள் T. ஜெயக்குமார், K. பிரதாப் மாநில மாணவர் அணி செயலாளர் சீ.கவியரசன், மாநில ஐடி விங் தலைவர் P. நதீஷ்குமார், தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி விஜயலட்சுமி,  கம்பம் நகர செயலாளர் அஜித்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது,  ஜாதிவாரி சென்செஸ் கணக்கெடுப்பு என்பது சமத்துவ இந்தியாவை உருவாக்க தேவையான அடிப்படை புள்ளிவிபரம். மக்களின் எண்ணிக்கை, அவர்களின் கல்வி சமூக நிலை, அரசில் பல வகுப்புக்களின் பிரதிநிதித்துவம் குறித்த புள்ளிவிபரங்கள் இல்லாமல் அரசமைப்பு சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றவே முடியாது.  அன்னிய அரசு கூட இப்புள்ளி விபரங்களின் அவசியத்தை உணர்ந்து கடந்த 1872 முதல் 1931 வரை தொடர்ந்து எடுத்து பயன்படுத்தி வந்தது. ஆனால், சுதந்திர இந்தியாவில் மத்திய அரசு இப்புள்ளி விபரங்களை இதுவரை எடுக்கமல் இருப்பது ஓபிசி/டிஎன்டி மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். அரசு ஜாதிவாரி சென்செஸ் கண்ககெடுப்...

தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ல் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

தேனி, மார்ச்.24- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி உழவர் சந்தையில் இன்று (24.03.2026) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையின் சார்பில், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிற்பக் கண்காட்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 199.பெரியகுளம் (தனி), 198.ஆண்டிபட்டி, 200.போடிநாயக்கனூர் மற்றும் 201.கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற 23.4.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து இருசக்கர வாகன பேரணிகள், கையெழுத்து இயக்கம், சுவரொட்டி விளம்பரம், துண்டுப்பிரசுரம் வழங்குதல், ரங்கோலி, நடைபயண பேரணி, மனித சங்கிலி, தெரு நாடகம், விளம்பர பதாகைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் விழிப்புணர்வுப் பணிகள் அனைத்து சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி...

தேனியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் 35-வது ஷோரூம் திறப்பு விழா : திரைப்பட நடிகர் ரவி மோகன் திறந்து வைத்தார்

தேனி, மார்ச்.16- உலகளவில் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் 35-வது தேனி புதிய ஷோரூம் திறப்பு விழா 16.3.2026 அன்று தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) அவர்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் யாசர் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு தலைவர்), சுதிர் அகமது (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு கிழக்கு மண்டல தலைவர்), அமீர் பாபு (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர்), நௌசாத் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர்), நந்த லால் (மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தேனி கிளை துணை தலைவர் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம். வைரம் மற்றும் வெள்ளி, கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 425-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள...

மதுரை-திருநகர், சொர்ணம் காலனி பகுதியில் குண்டும் குழியுமான புழுதி சாலையால் பொதுமக்கள் அவதி: மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மதுரை, மார்ச்.13- மதுரை மாநகராட்சி, திருநகர் சொர்ணம் காலனி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடபடாததால் அப்பகுதி புழுதி களமாக காட்சியளிப்பதுடன் குண்டும், குழியுமான சாலையாக அப்பகுதி மாறிவிட்டது.  இதனால் அப்பகுதி மக்கள் குறிப்பாக முதியவர்கள் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது. இதில் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் சிறு சிறு விபத்துக்கள் கூட ஏற்பட்டு விடுகிறது.  எனவே பெரிய அளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை சீரான முறையில் மூடி சாலைகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  ............................. நாகராஜ், தலைமை நிருபர்  

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை வணிகமாக்கும் அறநிலையத்துறை; பாஜக சார்பில் மனு கொடுக்கும் போராட்டத்தால் திடீர் பரபரப்பு

தேனி, மார்ச்.9- தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற மே 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 8 நாட்கள் முக்கிய திருவிழா நடைபெற உள்ளது.  இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தவும், திருவிழாவை காணவும் தினசரி பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வர். திருவிழாவை காண வரும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்கிற்காக எந்திர ராட்டினம் ஏலம் விடப்படுகிறது. இந்த எந்திர ராட்டத்திற்கான ஏலத்தொகை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இதனால் ராட்டினம் ஏறும் பொதுமக்களுக்கும் ராட்டினம் கட்டணமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்நிலையில் இந்த ஆண்டு ராட்டினம் இயக்குவதற்கான புதிய நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் எந்திர ராட்டினம் இயக்குவதற்கான ஏலத்தை எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் யாரும் முன் வராமல் ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டியன் தல...