Skip to main content

Posts

Showing posts with the label தமிழ்நாடு

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு: அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, டிச.5- அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 4.12.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முதன்மை பொதுச் செயலாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட செயலாளர் லாசர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட செயலாளர் ஜெரால்டு, தேனி மாவட்ட போதகர் அணி செயலாளர் மாறன், மதுரை மாவட்ட பேராயர் இன்பராஜ், தேனி மாவட்ட செய்தி தொடர்பாளர் பாஸ்கரன், தென் மண்டல செயலாளர் எடிசன், இளைஞரணி மாவட்ட செயலாளர் பிரேம்குமார், ஈரோடு பேராயர் ஜான் வெஸ்லி, தேனி நகர செயலாளர் கணேஷ் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ .ஆர்) பணியை நிறுத்த வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.  தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற பெறக்கூடாது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஷிப்ட் முறையில் இயங்கும் பாடப்பிரிவினை ரத்து செய்து விட்டு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரெகுலர் பயிற்சி முறையில் கல்லூரி இயங்க வழிவகை செய்...

திண்டுக்கல்-குமுளி ரயில் பாதை திட்டத்தை; 2 திட்டமாக பிரிக்க வேண்டும்: போராட்டக்குழு தலைவர் R.சங்கரநாராயணன் பேட்டி

தேனி, டிச.5- திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் தேனி-போடி ரோட்டில் உள்ள கிருஷ்ணா பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போராட்டக்குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் போது தேனி மாவட்டத்தின் ரயில் சேவை தேவைகள் குறித்து, டெல்லி சென்று ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்து, திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளபடி, பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.  இதனைத்தொடர்ந்து போராட்டக் குழு தலைவர் சங்கரநாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவிக்கையில், திண்டுக்கல்-சபரிமலை அகல ரயில் பாதை திட்டம் செயல்படுத்த ரூ.25 ஆயிரம் அல்லது ரூ.30 ஆயிரம் கோடி தேவைப்படும். அதனால் திண்டுக்கல்- லோயர்கேம்ப் வரை ஒரு திட்டமும், லோயர்கேம்ப்-சபரிமலை என மற்றொரு திட்டமும் என திண்டுக்கல் குமுளி அகல ரயில் திட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். அப்படி பிரித்து செய்தால் திண்டுக்கல்- லோயர்க...

தேனியில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா: ரூ.6.31 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்

  தேனி, நவ.3- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 3.12.2025 அன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. 43 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,31,674 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலை இவ்விழாவில் மாவட்ட கலெக்டர்  தெரிவித்ததாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் சுயமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள் அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஊன்றுகோல் சக்கர நாற்காலி மூன்று வாகனம், ஸ்மாட் போன்கள் டெஸ்சி பிளேயர், காதொலி கருவி, பேட்டரி வீல் சேர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி. தேனி மாவட்டத்தில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்புக்கல்வி விளையாட்டு பிஸியோதெரபி பயிற்சி மற்றும் தொழிற்பயிற்சி வழங்குவதற்காக 4 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வ...

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தல்: தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்; நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., கோரிக்கை

தேனி, நவ.3- நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் 3.12.2025 அன்று திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதில் நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேசுகையில், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 5 இந்திய தொழிலாளர்கள், மாலியில் உள்ள ஒரு தனியார் மின் நிறுவனத்தில் கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வந்தனர். 6.11.2025 அன்று அவர்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி சென்றனர். இதுவரை அவர்களது நிலை குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்; அவர்கள் உயிருடன் உள்ளார்களா, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அறிய முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார்கள்.  எனவே அவர்களை மீட்டு, பாதுகாப்பாக இந்தியாவிற்கும், அவர்களின் குடும்பத்தினரிடமும் கொண்டு வருவதற்கு அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென நான் வலியுறுத்...

தேனியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா அன்று விழிப்புணர்வு குதிரை பேரணி

தேனி, நவ.28- தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு தேனி அருகே உள்ள வீரபாண்டியில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி ஏற்பாட்டில் தேனியில் முதன்முறையாக  முன்னிட்டு பொது மக்களை கவரும் வகையில் விழிப்புணர்வு குதிரை பேரணி 27.11.2025 அன்று நடைபெற்றது. இந்த பேரணியை வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது வீரபாண்டி பேரூராட்சி திமுக செயலாளர் செல்வராஜ், இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இந்த பேரணியானது முத்துதேவன்பட்டி, பழனிசெட்டிபட்டி, தேனி பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு என சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் குதிரை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த குதிரை பேரணியை பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.  .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனி மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

  தேனி, நவ.28- தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள மனிதநேய காப்பகத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா 27.11.2025 அன்று கேக் வெட்டி, காப்பக குழந்தைகளுக்கு உணவு மற்றும் புத்தாடைகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். தேனி திமுக அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ராஜன் வரவேற்றார். போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.  நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நிஷாந்த், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாசித் ரஹ்மான், கண்ணன், முகமது ரபீக், ஊஞ்சாம்பட்டி கிளை செயலாளர் ஸ்டாலின், காப்பக நிர்வாகி பால்பாண்டி உள்பட பலர் கலந்து பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அயலக அணி நிர்வாகிகள் செய்திருந்தனர். ........................ நாகராஜ், செய்தி ஆசிரியர் 

தேனி மாவட்ட கோர்ட்டில் ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு முகாம்

தேனி, நவ.21- தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் இந்திய மருத்துவ ஹோமியோபதி துறை சார்பில் ஆயுஷ் மருத்துவ விழிப்புணர்வு முகாம் மற்றும் புகைப்பட கண்காட்சி தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 20.11.2025 அன்று நடைபெற்றது.  முகாமிற்கு முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜே. நடராஜன் தலைமை தாங்கினார். தேனி அமர்வு நீதிபதி அனுராதா வரவேற்றார். முகாமின் போது மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அன்னகாமு, ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் முத்தமிழ்செல்வி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுகளை எடுத்துக் கூறினர்.  முகாமில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சினேக பிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் உள்பட கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள், வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். .......................... நாகராஜ், செய்தி ஆசிரியர்  

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் போராட்டம்

தேனி, நவ.19- தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி 18.11.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு 19.11.2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா, மாவட்ட பொருளாளர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் உட்பட நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கிட பணிகளை முறைப்படுத்திட வேண்டும். தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவிகளை மீளப் பெற வேண்டும்.  புறஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்திட வேண்டும்.  காலியாக உள்ள நில அளவர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். வட்டம், குறுவட்டம், நகர, சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்...

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

தேனி, நவ.16- தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் தேனி வசந்த மஹாலில் 15.11.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். உத்தமபாளையம் வட்ட துணைத்தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். கூட்டத்தின் போது தேனி மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் போது புதிய நிர்வாகிகளாக மாவட்ட  தலைவராக பிரபு, மாவட்ட செயலாளராக ராஜ்குமார், மாவட்ட பொருளாளராக குமரேசன் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜரத்தினம் சான்றிதழையும், மாநில பொதுச்செயலாளர் குமார் பொன்னாடையும் போர்த்தி கெளரவித்தார்.  இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தேனி மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு சங்கத்தினர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட, வட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் ப...

தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 132 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.6.39 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள்: மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார்.

தேனி, நவ.14- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 14.11.2025 அன்று பள்ளிக்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறையின் சார்பில் 2025-2026 ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 132 மாணவ மாணவியர்களுக்கு ரூ20 லட்சம் மதிப்பிலான சைக்கிள்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணணக்குமார் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பேசுகையில், பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.  தற்போதைய காலகட்டத்தில் கல்வி மிகமிக முக்கியமானதாக உள்ளது படிப்பில் தொடர்ச்சியாக முழு கவனம் செலுத்தினால் மட்டுமே உயர்ந்த நிலைய அடைய முடியும். பள்ளிகளில் மாணவர்களின் எழுத்தறிவு விகிதத்தை விட மாணவிகளின் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா மு...

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சி தான் இந்த வாக்காளர் பட்டியல் SIR: தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி., பேட்டி

தேனி, நவ.7- தூத்துக்குடி மாவட்டம் முத்தம்மாள் காலனியில், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா 7/11/2025 அன்று நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி., வருகின்ற நவம்பர் 11-ம் தேதி திமுக கூட்டணி கட்சிகள் வாக்காளர் பட்டியல் S.I.R திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்ற கேள்விக்கு, SIR-யை தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமுல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIR-யை சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீகாரில் நாம் தெளிவாக பார்த்தோம். பலரின் வாக்குரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா...

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தேனி, நவ.1- தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் 1.11.2025 அன்று நடைபெற்றது. தேனி ஊராட்சி ஒன்றியம் அரண்மனைப்புதூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனீப் தலைமையில் நடைபெற்றது.  தேனி மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் முருகையா, அரண்மனைப்புதூர் ஊராட்சி செயலாளர் ரதவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  கோவிந்தநகரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகலாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலாளர் சுருளி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தி...