Skip to main content

Posts

Showing posts with the label தமிழ்நாடு

தேனியில் விஸ்வகர்ம ஜெயந்தி விழா ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு கூட்டம்

தேனி, அக்.12- தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்கம் சார்பில் விஸ்வகர்ம ஜெயந்தி விழாவை முன்னிட்டு விஸ்வகர்ம சுவாமி பட ஊர்வலம் தேனியில் 12.10.2025 அன்று நடைபெற்றது.   ஊர்வலத்திற்கு சிலமலையை சேர்ந்த சைவ சமய திருப்பணி செம்மல் பாண்டி நாட்டு கோச்செங்கணர் ஆன்மீக வள்ளலார் ஸ்ரீ எஜமான் பாண்டி முனீஸ்வரர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட அனைத்து விஸ்வகர்ம மகாஜன சங்க தலைவர் பாலமுருகன், உதவி தலைவர் சொக்கர்ராஜா, வெளிச்சம் அறக்கட்டளை நாணயம் சிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ சுவாமிகள் தொடங்கி வைத்தார்.  ஊர்வலம் தேனி மதுரை சாலையில் உள்ள பங்களா மேடு பகுதியில் இருந்து தொடங்கி விழா நடைபெற்ற வசந்த மஹால் நிறைவடைந்தது.  இதனைத்தொடர்ந்து திருமண மண்டபத்தில் சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்ரீ விஸ்வகர்ம ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ சிவ சண்முக சுந்தரபாபுஜீ விஸ்வகர்ம சமுதாய மக்கள் வாழ்ந்து வந்த விதம், செய்கின்ற வேலைகள் குறித்து விளக்கி பேசினார்.  இந்த கூட்டத்தில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர்...

தீபாவளி அன்று மதுபான கடைகளை மூட வேண்டும்: இந்து மக்கள் கட்சி தொண்டரணியினர் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, அக்.10- இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத்தலைவர் குரு அய்யப்பன் தலைமையில் மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் கார்த்திக் மற்றும் முனியாண்டி, கணேசன் உள்பட கட்சியினர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர். அந்த மனுவில் , இந்திய நாட்டில் இந்துக்கள் கொண்டாடும் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி பண்டிகை வருகிற 20.10.2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைகள் என்பது குடும்பங்கள் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடி களிப்பதற்காகவும், குடும்பத்தில் ஒற்றுமை உணர்வு மேலோங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த சமயங்களில் மதுக்கடைகள் திறந்து வைத்திருப்பதன் மூலமாக இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மது குடித்துவிட்டு பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட முடியாத நிலையை ஏற்படுத்துகின்றனர். மேலும் மது அருந்திவிட்டு குடும்ப தலைவிகளை சித்ரவதை செய்வது,, குழந்தைகளை சித்ரவதை செய்வது என்று பல்வேறு இன்னல்களுக்கு குடும்பத்தினர் ஆளாகின்றனர். மேலும் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதன் மூலம் விபத்துகளி...

தேனியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்கள் மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கும் விழா: தேனி எம்.பி., TTS வழங்கினார்.

தேனி, செப்.21- தேனி மாவட்ட உலக அமைதி குழு சார்பில் உலக அமைதி தின விழா தேனி வெஸ்டர்ன் கார்ட்ஸ் ஹோட்டலில் ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருது வழங்கி கொண்டாடப்பட்டது.  விழாவிற்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார்.  உலக அமைதி குழு பொதுச்செயலாளர் ஜெயபால், தேனி மாவட்ட பொறுப்பாளர் சுந்தர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக அமைதி குழு இயக்குனர் பால்பாண்டி வரவேற்றார்.  விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ராணுவ வீரர்களுக்கு தியாக செம்மல் விருது மற்றும் கல்வி சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார். விழாவில் தொழிலதிபர் சந்திரகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உதவி திட்ட அலுவலர் மோகன், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர் வி.ஆர்.ராஜன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் நாராயண பாண்டியன், சோல்ஜர் அகாடமி இயக்குனர் சின்னச்சாமி, வெற்றி தமிழர் பேரவை மாவட்ட தலைவர் மணி கார்த்த...

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் திமுக-வின் வாக்கு வங்கிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை: மதுரை புத்தக திருவிழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி

மதுரை, செப்.14- மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவின் 8-வது நாளான 13.9.2025 அன்று நடைபெற்ற விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு, ‘தெற்கின் எழுச்சி’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழ் மொழி பழங்காலம் தொட்டு இன்று வரை மக்கள் பயன்பாட்டில் உள்ள தொன்மையான மொழி. ஆனால், சம்ஸ்கிருதம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி. எனினும், சம்ஸ்கிருதத்துக்கு ஒன்றிய அரசு அதிகளவில் நிதியை ஒதுக்கீடு செய்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேவநாகரி, ஹிந்தி போன்ற மொழிகளை அந்த மக்கள் ஏற்று கொண்டதன் விளைவு, அந்த மாநில மொழியான மராத்தி தற்போது முக்கியத்துவத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற நிலை இல்லை. ஏனெனில், ஹிந்தி திணிப்பு ஏற்பட்ட போது, இங்கு மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதனால் தான், தமிழ் மொழி மட்டுமன்றி, அ...

இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கியதில் தான் சாதனை படைத்தது திமுக அரசு: தேனியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

தேனி, செப்.6- தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, பெரியகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்ப்போம் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதில் தேனி பங்களா மேடு நடந்த பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்.ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா வெற்றிக்கு வித்திட்ட மாவட்டம், இந்த தேனி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிறைய திட்டங்களை கொடுத்தோம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தோம். இந்தப் பகுதி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம், அரசு வேளாண்மை தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்பட்டன.  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திவிட்டு, அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.  அம்மா மறைவுக்குப் பிறகு அணையை பலப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, பேபி கனால் பலப்படுத்தப்பட்டது, கைப்பிடி சுவர் கட்டப்பட்டது, அதற்க...

தேனியில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் ஐம்பெரும் விழா: வருவாய்த்துறை அமைச்சர் KKSSR பங்கேற்பு

தேனி, செப்.5- தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அரசு அங்கீகாரம் பெற்று நூற்றாண்டு நிறைவு விழா, முன்னாள் நிர்வாகிகள் பணி நிறைவு பாராட்டு விழா, விருதுகள் வழங்கும் விழா மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் என ஐம்பெரும் விழா தேனி வேலுச்சாமி சின்னம்மாள் மகாலில் நடைபெற்றது.  விழாவிற்கு மாநில தலைவர் மகேந்திரகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தேசிங்கு ராஜன், முன்னாள் மாநில தலைவர் சண்முகராஜன் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவிற்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட தலைவர் கணேஷ் குமார் வரவேற்றார். விழாவில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். விழாவில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏ...

தேனி மாவட்டத்தில், வளரிளம் பருவத்தில் நிகழும் கர்ப்பத்தை தடுக்கும் பொருட்டு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

தேனி, செப்.2- தேனி மாவட்டம்,  உத்தமபாளையம் வட்டம்,  மேகமலை மணலார் பகுதியில் 2.9.2025 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாட்டில் வளரிளம்  பருவத்தில் அதிகமாக கர்பங்கள் நிகழும் 24 வட்டாரங்களில் தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு  ஏற்படுத்தும் திட்டத்தினை தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர்  தங்க தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் இராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில்   தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழ்நாட்டில்  வளரிளம் பருவத்தில் கர்ப்பங்கள் நிகழும் 24 வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த வட்டாரங்களில் உள்ள மக்களுக்கு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம்  செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.   அதனடிப்படையில் இன்றைய தினம்  இத்திட்டம் தமிழ்நாட்டில்  தேனி...