Skip to main content

Posts

Showing posts with the label தமிழ்நாடு

தேனி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 851 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.13.49 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தேனி, ஜூன்.17- தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 16.6.2025 அன்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். இதில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டங்களான மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம். புதுமைப் பெண், தமிழ் புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடி மருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டம், குடிநீர் திட்டப் பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் ...

தேனியில் தனிஷ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தும் பழைய தங்கத்திற்கு 2 காரட் கூடுதல் மதிப்பு பெறும் மாபெரும் தங்க பரிமாற்ற திட்டம் : ஜூன் 30 வரை நடக்கிறது

தேனி, ஜூன்.16- தேனியில் உள்ள தனிஷ்க் தங்க நகை ஷோரூம் கிளையின் நிர்வாக இயக்குனர்கள் ரமண மூர்த்தி, கதிரேசன் மற்றும் மேலாளர் பாலாஜி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதை அடுத்து, டாடா குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கப் பரிமாற்ற சலுகையை [Gold Exchange offer] அறிவித்துள்ளது.  இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய தங்கத்தை பரிமாற்றம் செய்யும் போது 2 காரட் வரை கூடுதல் மதிப்பு" (up to 2 Karat extra valur) பெறும் வாய்ப்பை வழங்குகிறது. இச் சலுகை ஜூன் 30.2025 வரை மட்டுமே வழங்கப்படும் இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை, வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளை பெறும் வாய்ப்பளிக்கிறது: தங்க நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 1 காரட் கூடுதலாக பெறுங்கள். [1KT extra on old gold வைர நகைகளை வாங்கும் போது பழைய தங்கத்தின் மதிப்பில் 2 காரட் கூடுதலாக பெறுங்கள். (2KT extra on old gold] உதாரணத்திற்கு, நீங்கள் தங்கத்தினால் மட்டும் வடிவமைக்கப்பட...

தேனி அருகே, கலாம் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா: தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., திறந்து வைத்தார்

தேனி, ஜூன்.15- கோவை மாவட்டத்தில் கலாம் அய்யா அவர்களின் பெயரில் 6 கிளைகளை துவங்கி தனது கடினமான உழைப்பால் உண்மை நேர்மை என்ற தாரக மந்திரத்தின் மூலம்  வெற்றிகரமாக நடத்தி வரும் 25 வயதான இளம் தொழில் அதிபர்  நித்தீஸ் என்பவர் தற்போது தேனி மாவட்டம், போடி ரோடு, கோடாங்கிபட்டியில் கலாம் பர்னிச்சர் ஷோரூம்  7-வது கிளையினை தொடங்கி உள்ளார். இந்த பர்னிச்சர் கிளையின் திறப்பு விழா 15.6.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் நித்தீஸ் வரவேற்றார். விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெடடி பர்னிச்சர் ஷோரூமை திறந்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து பர்னிச்சர் ஷோரூம் வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பர்னிச்சர் விற்பனையையும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தொழில் அதிபர் கோவை JRD என்ற ஜே. ராஜேந்திரன், ரீபோஸ் மேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலமுரளி, முன்னாள் எம்.எல்.ஏ., போடி லட்சுமணன், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருக்கண்ணன், ...

மாநில அளவிலான சைக்கிள் போட்டியில்; நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்து சாதனை

தேனி, ஜூன்.10- சென்னையில் மாநில அளவிலான தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி 8.6.2025 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். 48 கிலோமீட்டர் வரையிலான தூரம் நிர்ணயிக்கப்பட்டு கோவை பெடல்ஸ், சென்னை ரைடர்ஸ், மெட்ராஸ் புரோரேசர்ஸ், குமரி ரைடர்ஸ், சேலம் சூப்பர் ரைடர்ஸ், ரான்சைசர்ஸ், திருச்சி ராக்போர்ட் மதுரை மாஸ் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகளில் இருந்து 80 வீரர்கள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இரண்டாமாண்டு கணினி பொறியியல் துறையின் மாணவர் G.K.பிரமோத் ரான்சைசர்ஸ் அணியில் பங்கு பெற்று 19 நிமிடங்கள் 16 நொடியில் 48 கிலோமீட்டர் இலக்கினை அடைந்து முதல் பரிசாக ரூ.3,00,000/- பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவரை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் A.S. G.தர்மராஜன், உபதலைவர் A.S.ஜீவகன். பொதுச்செயலாளர் M.M.ஆனந்தவேல், பொருளாளர் B.ராமச்சந்திரன், ஆட்சிமன்றகுழு உறுப்பினர்கள். கல்லூரி முதல்வர் டாக்டர்.C.மதளைசுந்தரம், கல்லூரி துணை முதல்வர்கள் டாக்டர...

தேனி அருகே வீரபாண்டியில் ஜானகி முத்தையா A/c திருமண மஹால் திறப்பு விழா

  தேனி, ஜூன்.5- தேனி மாவட்டம், தேனி அருகே உள்ள வீரபாண்டியில் ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் வாசல் எதிரே முழுவதும் ஏ.சி., வசதி செய்யப்பட்ட ஜானகி முத்தையா திருமண மஹால் திறப்பு விழா 5.6.2025 அன்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு வந்த அனைவரையும் திருமண மஹாலின் உரிமையாளர் தொழிலதிபர் சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.  இந்த விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், மாவட்ட செயலாளர் திருவரங்க பெருமாள், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன், அ.தி.மு.க தேனி நகர செயலாளர் வக்கீல்  கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், தொழிலதிபர் பிரகாஷ் புளுமெட்டல் வசந்த், ரியல் எஸ்டேட் வயல்பட்டி மணிகண்டன், அ.ம.மு.க மாவட்ட செயலாளர் காசிமாயன், வீரபாண்டி பேரூர் தி.மு.க செயலாளர் செல்வராஜ், தி.மு.க பிரமுகர் வக்கீல் ராஜசேகர் உள்பட தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண மஹாலின் சிறப்பு அம்சங...

தேனியில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம்

தேனி, ஜூன்.4- தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி செயற்குழு கூட்டம் தேனியில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் 4.6.2025 அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தேனி நகர தலைவர் சிவராம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் கம்பம் மாய லோகநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் இராமராஜ் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் உள்பட தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் ஒன்றியங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள்  பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் 1: இந்து எழுச்சி முன்னணி ஆண்டு திட்டங்களின்படி, எதிர்வரும் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் வகையில் திட்டமிடுவதும், செயல்படுவதும் என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் 2: இந்து எழுச்சி முன்னணி பொறுப்பாளர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்களில் விளக்கேற்றம் இல்லாத நிலை காணப்பட்டால், அங்கு விளக்கேற்றும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. தீர்மானம் 3: பொறுப்பாளர்கள் வசிக்கும் பகுதிகளில் மக்களின் குறைகளை முன்வைத்து, அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவ...

தேனியில், அகில இந்திய கட்டுநர் சங்க புதிய நிர்வாக குழு பதவி ஏற்பு விழா

தேனி, மே.20- அகில இந்திய கட்டுநர் சங்கம் தேனி மையத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக குழுவினர் பதவி ஏற்பு விழா தேனி ரத்தினம் நகர் பகுதியில் பெரியகுளம் சாலையில் உள்ள கூடலிங்கேஸ்வரா மஹாலில் 19.5.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.  தேனி மைய தலைவர் பாண்டியராஜ் வரவேற்றார்.  விழாவில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் முன்னாள் மாநில தலைவர் ஜெகநாதன், தேனி மைய முன்னாள் தலைவர்கள் சர்வேஸ்வரராஜா, முத்து கோவிந்தன்(KMC), ராதாகிருஷ்ணன், சுப்பையா இளம்வழுதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  விழாவின்போது தேனி மையத்தின் புதிய தலைவராக நெளசாத், செயலாளராக வாசகன், பொருளாளராக அமிதாப்பச்சன், துணைத்தலைவராக தண்டபாணி, இணைச்செயலாளராக ஆண்டனி ஆகியோர் தலைமையிலான குழுவினருக்கு மாநில தலைவர் வெங்கடேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இதனைத்தொடர்ந்து அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் தேனி மைய புதிய தலைவர் நெளசாத் விழா ஏற்புரை ஆற்றினார்.  தேனி மைய முன்னாள் தலைவர் பொறியாளர் R.நந்...

தேனி கலெக்டர் அலுவலகத்தில் கருவூலக்கணக்குத்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேனி, மே.17- தேனி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கருவூலக்கணக்குதுறை அலுவலர் சங்கத்தின் தேனி மாவட்ட மையத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கருவூலகணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் குமார் செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கருவூல கணக்குத் துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் சென்னமராஜ், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி ஊழியர்கள் சங்கம்.மாநில செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தேனி மாவட்ட தலைவர் உடையாளி, மக்கள் நலபணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் சுதர்சன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மீனா, தமிழ்நாடு ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பு மாநில கன்வீனர் அன்பழகன், தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர் சங்க மாநில செயலாளர் தேன்மொழி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது தேனி மாவட்ட கருவூல அலுவலர் அருணாச்சலத்தின் ஊழியர் விரோத பழிவ...

கடமலைக்குண்டு அருகே அரசரடி கிராமத்திற்கு மின்சாரம், அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

தேனி, மே.17- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியம், வெள்ளிமலை அருகே உள்ள அரசரடி கிராம பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், அரசரடி கிராம பகுதியில் நாங்கள் கடந்த 1953-ம் ஆண்டு முதல் 400 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த 400 குடும்பங்களுக்கும் தனித்தனியாக ரேசன் காடுகள் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு கடந்த 1969-ம் ஆண்டில் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது வரை எங்கள் ஊரில் உள்ள எந்த வீட்டிற்கும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. அது மட்டும் இன்றி எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்குள் வாழ்ந்து வருகிறோம். அதுபோல போக்குவரத்திற்காக சீரான தார்ச்சாலை இல்லாமல் குண்டும் குழியுமாக சாலை உள்ளது. இந்த தார் சாலை போட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. அதை சரி செய்யாத காரணத்தால் அவசர காலத்திற்கு எங்களால் விரைவாக இன்னும் செல்ல முடியாமல் உள்ளோம் மேலும் உடல் நலம் சரியில்லாதவர்களை டோலி மூலம் எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அடிக்கடி உயிர் சேதம் ஏற்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் எங்களது வீட்டின் சுவர் இடிந்து வ...

கூடலூர் பளியன்குடி வழியாக கண்ணகி கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் 5 லிட்டர் தண்ணீர் கேன், வரலாற்று புத்தகம் வழங்கல்

தேனி, மே.12- தமிழக கேரளா எல்லை மலை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை பௌர்ணமி (முழு நிலவு)  விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சித்திரை முழு நிலவு விழா 12.5.2025 அன்று நடைபெற்றது.  இந்த விழாவை முன்னிட்டு மலைப்பகுதியில் உள்ள கண்ணகி கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது.  இந்த விழாவைக்கான தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குமுளி மலை பாதை வழியாக நடந்தும், ஜீப் வாகனங்களில் சென்றும் அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோன்று கம்பம் ஊராட்சி ஒன்றியம், கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள பளியன்குடி மலைப்பாதை வழியாக பக்தர்கள் அதிகாலை முதல் நடந்து சென்று மலைப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி அம்மனை தரிசனம் செய்தனர்.  இந்த பளியன்குடி மலைப்பாதை வழியாக செல்லும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் ஆலோசனையின்படி தேனி மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்...

வீரபாண்டி தேரோட்டத்தில் முதல் மரியாதை பிரச்சனை : பேரூராட்சி தலைவர் கீதா சசி, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில் கோரிக்கை மனு

  தேனி, மே.10- தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் கீதா சசி அவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமிடம் கோர்க்கை மனு கொடுத்துள்ளார் அந்த மனுவில், நான் கடந்த 2022-ம் ஆண்டு முதல் வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு கடந்த ஆண்டுகளில் சிறந்த பேரூராட்சி தலைவராக மாவட்ட நிர்வாகத்தால் விருது பெற்றுள்ளேன்.  மேலும் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் வெள்ளிக்கிழமை அன்று தேரோட்டத்தின் போது தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் இவர்களை தொடர்ந்து பேரூராட்சி தலைவர் ஆகியோர்களுக்கு முதல் மரியாதை கொடுப்பது வழக்கமான நடைமுறை. அதன்படி கடந்த 3 ஆண்டுகளாக தலைவர் என்ற முறையில் எனக்கும் மாலை மற்றும் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது.  ஆனால் இந்த ஆண்டு 9.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்ற தேரோட்டத்தின் போது வந்திருந்த மாவட்ட கலெக்டர். மாவட...