Skip to main content

Posts

Showing posts with the label புகார்

தேனி மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்று சிலிண்டர் மற்றும் உணவு பொருட்கள் விலையை உயர்த்தினால் புகார் தெரிவிக்கலாம்: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல்

தேனி, ஏப்.7- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் போர் காரணத்தினால் கச்சா எண்ணெய் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கடந்த மாதத்தில் பொதுமக்களிடையே தகவல் பரவியது.  இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வணிக உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதன் காரணமாக சாலையோர துரித உணவு கடைகள், இரவு நேர டிபன் உணவகங்கள் தேனி மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் சில கடைகள் தற்காலிகமாக அடைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் நடத்தி வரக்கூடிய டீ கடைகள் மற்றும் ஹோட்டல்களில் உணவு பொருட்களில் விலைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. அதுபோல அடிப்படையாக தயாரிக்கக்கூடிய சில உணவு பொருட்களை கூட தயாரிப்பதை  நிறுத்தி விட்டனர். தேனி பகுதியில் இந்த திடீர் விலை ஏற்றத்தால் டீ, காபி, இட்லி, வடை போன்ற உணவுப்பொருட்கள் ரூ.2 முதல் ரூ 5 வரை விலை உயர்ந்துள்ளது. ஆனால் சில டீ கடை மற்றும் ஓட்டல் நிறுவனங்கள் விலைகளை ஏற்றாமல் பொருட்களின் குவாலிட்டி மற்றும் குவாண்டிட்ட...