தேனி மாவட்டத்தில் ஒரு மாதத்தில் தொலைந்து போன 156 செல்போன்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் டி.ஐ.ஜி., அபிநவ்குமார் ஒப்படைத்தார்
தேனி மாவட்டத்தில் செல்போன் தொலைந்ததாக கிடைக்கப்பெற்ற புகாரின் படி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு சார்பு ஆய்வாளர் உமாதேவி தலைமையிலான காவல் துறையினரால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மீட்கப்பட்ட சுமார் 16,00,000/- மதிப்புள்ள 156 செல்போன்களை 11.8.23 அன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் அபிநவ்குமார் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர்களால் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
மேலும் கடந்த 7 மாதங்களில் மட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையினரால் சுமார் 70,00,000/- மதிப்புள்ள 668 செல்போன்கள் மீட்கப்பட்டு அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
S.R.சீனிவாசன், உதவி ஆசிரியர்
R.ராதாகிருஷ்ணன், நிருபர்
Comments