Skip to main content

கோவை ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை போதை தடுப்பு போலீசார் மோப்ப நாயுடன் சோதனை

கோவை, செப்.16-

போதை பொருள்களை ரயில்களில் கடத்தப்பட்டு வருவதை தடுக்கும் விதமாக தொடர் சோதனையில் ஈடுபட்ட  கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரயில் நிலையங்களில், ரயில்களில் வரும் நபர்களின் உடமைகளை சோதனைக்கு உட்படுத்தினர் , போதை பொருள் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ஜெயராஜ் உத்தரவு படி ஆய்வாளர் குமரேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் கோமதி தலைமையிலான போலீசாரும் ரயில்வே ஸ்டேசனில் மோப்ப நாய் டைகர் உடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்

இதில் ஒடிசா, ஆந்திரா வழியே வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ், சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில் பெட்டிகளில்  ஏறி சோதனையிட்டனர், அதே போன்று பிளாட் பார்த்திலும் இருந்த பயணிகளின் உடமைகளை மோப்ப நாயுடன் பரிசோதனை செய்தனர்.

மேலும் தன்பாத் ரயிலில் ஏறி சோதனை செய்ததில் 4 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் ஒடிசா, ஆந்திராவிலிருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதை தொடர்ந்து கண்காணித்து பிடித்து வருகிறோம், கடந்த எட்டு மாதங்களில் 300 கிலோ கஞ்சாவையும் மற்றும் அதனை கடத்தி வந்த 20 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ளோம். இதேபோல் சோதனை கோவை ரயில்வே ஸ்டேசனிலும், ரயில்களிலும் தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனிவாசன், உதவி ஆசிரியர் 

Comments