Skip to main content

கூடலூர் பளியன்குடி வழியாக கண்ணகி கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் 5 லிட்டர் தண்ணீர் கேன், வரலாற்று புத்தகம் வழங்கல்

தேனி, மே.12-

தமிழக கேரளா எல்லை மலை பகுதியில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை பௌர்ணமி (முழு நிலவு)  விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் பௌர்ணமி அன்று நடைபெற்று வருகிறது. இந்தாண்டு சித்திரை முழு நிலவு விழா 12.5.2025 அன்று நடைபெற்றது. 

இந்த விழாவை முன்னிட்டு மலைப்பகுதியில் உள்ள கண்ணகி கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. 
இந்த விழாவைக்கான தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகம் மற்றும் கேரளா பகுதியில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குமுளி மலை பாதை வழியாக நடந்தும், ஜீப் வாகனங்களில் சென்றும் அம்மனை தரிசனம் செய்தனர்.
இதேபோன்று கம்பம் ஊராட்சி ஒன்றியம், கூடலூர் லோயர்கேம்ப் அருகே உள்ள பளியன்குடி மலைப்பாதை வழியாக பக்தர்கள் அதிகாலை முதல் நடந்து சென்று மலைப்பகுதியில் உள்ள மங்கலதேவி கண்ணகி அம்மனை தரிசனம் செய்தனர். 
இந்த பளியன்குடி மலைப்பாதை வழியாக செல்லும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் ஆலோசனையின்படி தேனி மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன் தலைமையில் 5 லிட்டர் தண்ணீர் கேன் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு மங்கலதேவி கண்ணகியின் வரலாறு பற்றிய தொகுப்புகள் அடங்கிய கையேடுகள் வழங்கப்பட்டது. 
அதுபோல மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் மற்றும் நன்னாரி மூலிகை சர்பத், மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.
கூடலூர் லோயர் கேம்ப் அருகே உள்ள பளியன்குடி வழியாக கண்ணகி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வசதிக்காக பளியன்குடி அடிவாரம் வரை அரசு பஸ் மற்றும் வாகன போக்குவரத்து செய்யப்பட்டிருந்தன.
.............................
நாகராஜ் தலைமை நிருபர் 




Comments