தேனி, மே.16-
தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 40-வது ஆண்டு சித்திரை திருவிழா 13.5.2025 முதல் 15.5.2025 வரை 3 நாட்கள் நடைபெற்றது.
விழாவிற்கு தொழிலதிபர் கண்ணன் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் ராமசாமி, ஏ.சி.வி. மில் சந்திரசேகரன், இன்ஜினியரிங் காண்ட்ராக்டர் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர் ஆர.என். குரூப் மணிவண்ணன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
விழாவில் தேனி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணுபிரியா பாலமுருகன், ரியல் எஸ்டேட் சாம்சங் ஷோரூம் டெர்ரி, தொழிலதிபர்கள் பாலசங்கா குரூப் குமரேசன், சந்திரகுமார், தெய்வா ஹோட்டல் பால்பாண்டி, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சர்ச்சில், அம்பை இளங்கோ, லோகநாதன், மோகன் குமார், முன்னாள் நகர் மன்ற தலைவர் காசிமாயன், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன், தேனி மாவட்ட அதிமுக வர்த்தக பிரிவு ஆப்பிள் முருகன், தொழிலதிபர் விஷுவல் பிரபு, தொழிலதிபர் டுடே ஃபேஷன் சக்தி உள்பட நகர முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

...........................
நாகராஜ், தலைமை நிருபர்
Comments