Skip to main content

ஆண்டிபட்டி அருகே மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மக்களுக்கு கோடையில் குல தெய்வமாய் விளங்கி வரும் தர்பூசணி பழம் விற்பனை

தேனி, மார்ச்.28-

கொளுத்தும் கோடை வெய்யில் வந்தாலே .... மனிதனுக்கு தேவையான உடனடி நிவாரணம் என்றால்? அது மர நிழலும் குளிர்ந்த நீரும்  மற்றும் நீர்சத்து அடங்கிய பழ வகைகளும்  தானே...?

தேனியிலிருந்து ஆண்டிபட்டி வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரே புளிய மர நிழல் என்றால் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்திற்கும் எஸ்.எஸ்.புரம் பெரிய பாலத்திற்கும் இடையில் உள்ள ஒற்றை புளியமரம் மட்டுமே....

அங்கு மக்கள் நிழலுக்கு ஒதுங்குவதுடன் அந்த மரத்திற்கு அடியில் தான் இந்த தர்பூசணி அம்பாரம் போடப்பட்டுள்ளதால் நிழலுக்கு நிழலும் ஆச்சு தண்ணீர் பழத்துக்கு  தர்பூசணியும் ஆச்சு.... என்று ஒரே கல்வில் இரண்டு மாங்காய் அடித்து விடுகிறார்கள் .

அப்படி இருக்கும் போது அந்த நிழல் தரும் புளியமரமும்  தர்பூசணியும் கோடை வெய்யிலுக்கு குலதெய்வம் இல்லாமல் வேறென்னவாம்...?

சசி துரை, சிறப்பு நிருபர் 


......................

Comments