Skip to main content

தேனி அருகே, கலாம் பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா: தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., திறந்து வைத்தார்

தேனி, ஜூன்.15-

கோவை மாவட்டத்தில் கலாம் அய்யா அவர்களின் பெயரில் 6 கிளைகளை துவங்கி தனது கடினமான உழைப்பால் உண்மை நேர்மை என்ற தாரக மந்திரத்தின் மூலம்  வெற்றிகரமாக நடத்தி வரும் 25 வயதான இளம் தொழில் அதிபர்  நித்தீஸ் என்பவர் தற்போது தேனி மாவட்டம், போடி ரோடு, கோடாங்கிபட்டியில் கலாம் பர்னிச்சர் ஷோரூம்  7-வது கிளையினை தொடங்கி உள்ளார்.

இந்த பர்னிச்சர் கிளையின் திறப்பு விழா 15.6.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் பர்னிச்சர் ஷோரூம் உரிமையாளர் நித்தீஸ் வரவேற்றார். விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரிப்பன் வெடடி பர்னிச்சர் ஷோரூமை திறந்து வைத்தார். 
இதனைத்தொடர்ந்து பர்னிச்சர் ஷோரூம் வளாகத்தில் குத்து விளக்கு ஏற்றி வைத்து பர்னிச்சர் விற்பனையையும் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தொழில் அதிபர் கோவை JRD என்ற ஜே. ராஜேந்திரன், ரீபோஸ் மேட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலமுரளி, முன்னாள் எம்.எல்.ஏ., போடி லட்சுமணன், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட துணைச்செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருக்கண்ணன், தேனி தி.மு.க வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்லப்பாண்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன், பி.ஆர்.ஓ., வேல்முருகன் உள்பட முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் அரசியல் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

..............................
நாகராஜ், செய்தி ஆசிரியர் 










Comments