Skip to main content

போடி அருகே சிலமலையில் விவசாயிகளுக்கு பஞ்சகாவியம் குறித்து கல்லூரி மாணவிகள் செயல்முறை விளக்கம்


தேனி, செப்.16-

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சிலமலையில் விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியை சேர்ந்த மாணவிகள் பஞ்சகாவியம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


அப்போது கல்லூரியை சேர்ந்த டாக்டர் விஜயகுமார், டாக்டர் செல்வராணி மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் இராஜமுருகன் ஆகியோரின் அறிவுரையின்படி சிலமலை ராமமூர்த்தி என்பவரின் தோட்டத்தில் மாணவிகள் M.துர்காதேவி, M. ரஷ்நிகா, R.அர்ச்சனா, V. சுமித்ரா, G.L.கௌசல்யா, T. பிரித்தி ஆகியோர் பஞ்சகாவ்யா செயல்முறை விளக்கம் குறித்து சிலமலை. விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
மேலும் பஞ்சகாவியம் தயாரிப்பதற்கு தேவையான மாட்டுச்சாணம், நெய், கோமியம், தண்ணீர், வாழைப்பழம் போன்ற பொருட்களை எந்த அளவில் சேர்த்து தயாரிப்பது என்பது குறித்தும் செயல்முறையில் விளக்கம் அளித்தனர்.

நாகராஜ், முதன்மை நிருபர் 

Comments