முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் ஆர்ப்பாட்டம்
மதுரை, பிப்.3-
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 2.2.2025 அன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென் மண்டல தலைவர் கட்டிக்குளம் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் முல்லைப்பெரியாறு வைகை பாசன கூட்டமைப்பு தலைவர் வக்கீல் எம்.கே.எம் முத்துராமலிங்கம் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசி சிறப்புரை ஆற்றினார்.
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் கண்டன பேரூரை ஆற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கௌரவ தலைவர் எம்.பி.ராமன், முல்லைப்பெரியாறு வைகை பாசன விவசாய சங்க செயலாளர் எல் ஆதிமூலம், மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண், மதுரை மண்டல தலைவர் மதுரைவீரன், செயலாளர் உறங்காப்புலி, உயர் மட்டக் குழு உறுப்பினர்கள் எம்.எம்.முருகேசன், ஆபிரகாம், சிவகங்கை மாவட்ட தலைவர் தமராக்கி ராமலிங்கம், செயலாளர் தவம், விருதுநகர் ராஜாங்கம், ராமநாதபுரம் முத்துராமலிங்கம் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடி நீர் கொள்ளளவு உயர்த்துவதற்கும், பேபி அணையை பலப்படுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு நீதி மன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழுவிற்கு உரிய கால நிர்ணயமும், அதிகாரமும் அளித்து பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.மாறாக அணைகள் பாதுகாப்பு மசோதா குழுவோடு நீதிமன்றம் ஒப்பிட்டு பேசுவதை தமிழ்நாடு அரசு ஏற்க்க கூடாது.
டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு கொள்கை பூர்வமாக கைவிட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க முன்வர வேண்டும்.
இதில் மத்திய, மாநில அரசுகள் நாடகமாட கூடாது. கூட்டு சேர்ந்து கடந்த பிப்ரவரி 2024 ல் விடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு மூடி மறைத்துள்ளது. டெண்டர் விட்டது மத்திய அரசு ஆனால் பாராட்டு விழா நடத்த உங்களுக்கு என்ன நியாயம் உள்ளது. அரிட்டாபட்டி மக்களுக்கு தான் மத்திய, மாநில ஆட்சியாளர்கள் பாராட்டு விழா நடத்த வேண்டும்.
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது வன்மையாக கண்டிக்கத்தக்கது உரிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்க போட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
K.N.ராஜ், முதன்மை நிருபர்
..........................
Comments