Skip to main content

தேனியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.சி பள்ளி திறப்பு விழா: கலெக்டர் ரஞ்ஜீத் சிங் திறந்து வைத்தார்

தேனி, மே.1-

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா, வடபுதுப்பட்டியில் லைப் இனவேஷன் சி.பி.எஸ்.இ., பள்ளி திறப்பு 30.4.2025 (அட்சயதிரிதியை) அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி பள்ளியை திறந்து வைத்தார். 
மதுரை ஆதினம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக  ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மன்னார்குடி ஜீயர் சுவாமிகள் செண்டலங்கார செண்பகர மன்னார் ராமானுஜ சுவாமிகள், தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்ரமணிய பாலசந்ரா, தேனி அரசு அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முத்துசித்ரா, எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குநர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவிற்கு வந்த அனைவரையும் பள்ளி தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார்.
இதனைத்தொடர்ந்து பள்ளி கல்வெட்டை திறந்து வைத்து பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றி வைத்து கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பேசினார்.
விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைமை இயக்குனர் ஹனுமந்த்ராவ், கே.எம்.சி., குழுமம் நிர்வாக இயக்குநர் முத்துகோவிந்தன், மேனகா மில்ஸ் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், தொழிலதிபர்கள் செல்வ கணேஷ், ஜெகநாதன், குலோத்துங்கன், தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தென் மண்டல செயலாளர் வக்கீல் எம்.கே.எம். முத்துராமலிங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்ட தலைவர் செல்வக்குமார், வழக்கறிஞர்கள் கிருஷ்ணக்குமார், செல்வக்குமார்,  வடபுதுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ், தொழிலதிபர்கள் விஷுவல் பிரபு, இ.எஸ்.செந்தில்குமார், இ.எஸ்.சீனிவாசன் உள்பட தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

.............................
நாகராஜ், தலைமை நிருபர் 





Comments