Skip to main content

நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா

தேனி, ஏப்.3-

தேனி நாடார் சரசுவதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிநியமன ஆணை வழங்கும் விழா 2.4.2025 அன்று நடைபெற்றது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறையின் உபதலைவர் கணேஷ். பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச்செயலாளர் நவீன்ராம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மதளைசுந்தரம் வரவேற்புரையாற்றி, கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் பன்னாட்டு நிறுவனத்துடன் சிறந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மென்பொருள் கட்டமைப்புகளுடன் கூடிய பயிற்சியை மாணவர்களுக்கு அளித்து வருகிறதென்றும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு பெற ஆக்கபூர்வமான முறையில் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவது மாணவர்களிடையே விளக்கினார்.

மேலும் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை பேராசிரியர்கள் அனைத்து துறை மாணவர்களும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு திறனறியும் தேர்வு, குரூப் டிஸ்கசன், எழுத்து தேர்வு, நேர்முக தேர்வை தயக்கமின்றி அணுகுவதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கான பயிற்சிகள். போன்றவற்றை மாணவர்களுக்கு சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருடந்தோறும் 80% மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறதென்று மாணவர்களிடையே பேசினார்.

கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன்  வேலைவாய்ப்பு துறையின் அறிக்கையினை சமர்பித்தார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களான வைஸர் ஸ்டாக், ஆக்ரான், M&S சாப்ட்வேர் சொலியூசன், மேயோ டெக்னாலஜி. கேவல் கார்ப், வெப்ராக்ஸ், ஷான்மினா, ஸ்டீல் ஸ்டிரிப்ஸ், இசஎட் எஃப். பாக்ஸ்கான், யூனோமினடா, நார்டில், ஸ்பைக்டெக், யமஹா, ஹரிணிஷேசா என்டர் ப்ரைசஸ், எம்.எஸ்.இ.இனோவேட்டிவ் சர்வீஸ், ஆர்.ஆர் எலக்ட்ரானிக்ஸ், யூனோமின்டா. பூளுட்டோ ஹோஸ்டிங், கிரின்டெக் மெகாவாட் ப்ரைவேட் லிமிடெட், சிம்சியான், நவிப்ரோமோஷன்ஸ் போன்ற நிறுவனங்களில் 130 மாணவ, மாணவிகள் கல்லூரியின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் வேலைவாய்ப்பை பெற்றனர்.
பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற 130 மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் நிர்வாகிகள் வழங்கினர். விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள், கல்வி நிறுவனங்களின் கமிட்டி உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர் சத்யா, வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர். 
முடிவில் கல்லூரியின் துணை முதல்வர் மாதவன் நன்றி கூறினார்.

நாகராஜ், தலைமை நிருபர் 

.................................

Comments