தேனி, ஏப்.5-
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் "கல்வியோடு தன்திறனை மேம்படுத்திக் கொண்டு பல்வேறு துறைகளிலும் உங்களை தடம் பதியுங்கள்" என்பதை தாரக மந்திரமாக கொண்டு செயல்படும் "வேலைவாய்ப்பு துறை” சார்பில் 4.4.2025 வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு நிறுவனங்களில் பணிநியமன ஆணைகள் பெற்று மகுடம் சூடிய மாணவியர்களுக்கு "பணிநியமன ஆணை வழங்கும் விழா" கல்லூரியின் கர்மவீரர் காமராஜர் கலையரங்கில் (K3) நடைபெற்றது.
விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன் தலைமை தாங்கினார். உறவின்முறை உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரியின் செயலாளர் காசி பிரபு வரவேற்புரையாற்றினார். அவர்தம் உரையில்,
* வாய்ப்புகளை பயன்படுத்தினால் வாழ்க்கையை வளமாக்கலாம். படிப்போடு திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பினை பெறும் பயிற்சியைக் கற்றுக் கொடுக்கும் இணையதளங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
கற்கும் கல்வியின் மதிப்பு அவர்கள் அடையும் வேலையை பொருத்தே அமையும். படிக்கும் கல்வி வெறும் சான்றிதழ்களாக மட்டுமல்லாமல் சான்றிதழ்களோடு சேர்த்து பணிநியமன உத்தரவுகளை பெறுவதே மாணவியர்கள் பெற்றோர்க்கு பெருமை சேர்ப்பதாகும். எனவே மாணவியர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்றுரைத்தார்.
விழாவில் கல்லூரியின் COE சரண்யா வேலைவாய்ப்பு முகாமை பற்றி முகவுரையாற்றினார். கல்லூரி வேலைவாய்ப்பு துறை தலைவர் அகிலாவைஷ்ணவி வேலைவாய்ப்பிற்கான ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் முன்னாள் மாணவி செல்வி.S.பூஜாB.Sc., AI/ML Analyst, Avasoft, Alpha City, Chennai, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில்,
நமது கல்லூரி மாணவியர்களின் அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் அனைவரும் வேலைவாய்ப்பினை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக பல்வேறு நிறுவனங்களிலிருந்து பயிற்சிகளுக்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் வல்லுநர்கள், பயிற்சியாளர்கள் அழைக்கப்பட்டு மாணவியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்றுரைத்தார்.
இன்றைய உலகில் வேலைவாய்ப்பு என்பது ஒரு மிக முக்கியமான தரமாக மாறியுள்ளது. கல்வி மட்டும் போதாது. வேலைவாய்ப்பு திறன் இருந்தால்தான் நாம் எதிர்காலத்தை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடியும்.
சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பினை பெற தொழில்துறை சார்ந்த அறிவு, பேசும் திறன், குழுவாக வேலை செய்யும் திறன், நேர மேலாண்மை, கம்ப்யூட்டர் அறிவு, ஆய்வக திறன், டேட்டா பகுப்பாய்வு போன்றவை முக்கியம். இவை அனைத்தையும் பயிற்சி வாயிலாக மட்டுமே வளர்த்துக் கொள்ள முடியும்.
ஆதலால், மாணவியர்களாகிய நீங்கள் பயிற்சி வகுப்புகளை தகுந்த முறையில் பயன்படுத்தி சிறந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்று வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
விழாவின் போது பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிய 938 மாணவிகளுக்கு 2440 பணி நியமன ஆணைகள் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை பெரியோர்களால் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
முடிவில் கல்லூரியின் வேலைவாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர் பிரியவர்ஷினி நன்றி கூறினார்.
நாகராஜ், தலைமை நிருபர்
.................................
Comments